Saturday, April 22, 2017

எப்போது தீரும் சோமாலியாவின் சோகம்?
அஷ்வினி சிவலிங்கம்

சோமாலியாவில் நிலவி வரும் வரலாறு காணாத பஞ்சத்தால், அங்கு உள்ள மக்களுக்கு சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டு உயிரிழந்து வருவதாக சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.




கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடும் பஞ்சத்தால் சுமார் 2,70,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு நோயால் பாதிக்கப்படக்கூடும் என்று கடந்த பிப்ரவரி மாதம் யூனிசெஃப் எச்சரித்திருந்தது. யூனிசெஃப் எச்சரித்தப்படி தற்போது அங்கு சூழல் மோசமாகி வருகிறது. அங்குள்ள குழந்தைகள் ஊட்டசத்து இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி மோசமான சுகாதாரம் காரணமாக குழந்தைகளுக்கு காலரா உள்ளிட்ட நோய்கள் தாக்கி உள்ளன.

கடந்த மாதம் அங்கு ஏற்பட்ட நோய் தொற்றுக்கு 48 மணி நேரத்தில் 110 பலியானார்கள். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மீண்டும் அது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக சோமாலியாவில் உதவி செய்து வரும் தொண்டு நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. சோமாலிய அதிபர் முகமத் அப்துல்லாஹி முகமது பஞ்சத்தை தீர்க்க முடியாமல் தவித்து வருகிறார். வறட்சி, சுகாதார சீர்க்கேடு மட்டுமில்லை தற்போது இருப் பிரிவினர் இடையே கலவரங்கள் ஏற்பட்டு மேலும் மேலும் அங்குள்ள மக்களை வாட்டி வதைத்து வருகின்றன.

No comments:

Post a Comment

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats 03.06.2026 Written By : Barsha...