Monday, August 6, 2018


'செஞ்சுரி' அடித்த பாட்டி : கொண்டாடிய உறவினர்கள்

Added : ஆக 06, 2018 00:54




விருத்தாசலம்: விருத்தாசலத்தில், 100 வயது பாட்டிக்கு பிறந்த நாள் கொண்டாடி, உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த கொள்ளுமாங்குடியைச் சேர்ந்தவர் பரமசிவம் மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். கணவர் இறந்து, 41 ஆண்டுகளான நிலையில், பிள்ளைகள் பராமரிப்பில் வசித்து வருகிறார். தற்போது, சுப்புலட்சுமி, 100 வயதை எட்டி உள்ளார். அவரது நுாறாவது பிறந்த நாளை, விமரிசை யாக கொண்டாட, குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலத் தில் உள்ள திருமண மண்டபத்தில் சுப்புலட்சுமிக்கு, நேற்று பிறந்த நாள் விழா நடந்தது. இரண்டு மகன்கள், மூன்று மகள்கள், ஒன்பது பேரன்கள், நான்கு பேத்திகள், கொள்ளு பேரன், பேத்திகள், 13 பேர் உட்பட உறவினர்கள் ஏராள மானோர் திரண்டு, கேக் வெட்டி, பாட்டியின் பிறந்த நாளை கொண்டாடினர். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், சுப்புலட்சுமி யிடம் ஆசி பெற்றனர்.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...