Monday, August 6, 2018

‘பிரதமர் நரசிம்மராவுடன் தம்பிதுரை பேசுவார்’- நாக்குத் தவறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Published : 05 Aug 2018 15:43 IST
 



திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பிரதமர் நரசிம்மராவுடன் துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுவார் என்று நாக்குத் தவறிக் கூறியது பேசுபொருளாகியுள்ளது.

வேடசந்தூர் கல்வாரிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது, இங்குள்ள சுகாதார நிலையத்தை எம்.எல்.ஏ. பரமசிவமே திறந்து வைத்திருக்கலாம். நாங்களே தேவையில்லை. ஆனால் அவரது அன்பின் காரணமாக நான், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வந்தோம்.

தற்போது நாடாளுமன்ற் துணை சபாநாயகர் தம்பிதுரை பரமத்தி வேலூரில் பொதுமக்களைச் சந்தித்து குறைகேட்டுக் கொண்டிருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கு அவர் வருவா, மாலை புதுக்கோட்டை சென்று விடுவார்.

அதன் பின்னர் டெல்லி சென்று பிரதமர் நரசிம்மராவுடன் பேசுவார் என்று பேசினார் திண்டுக்கல் சீனிவாசன்.

இதனையடுத்து பிரதமர் நரசிம்மராவா? என்ன இது? என்று சலசலப்பு ஏற்பட்டது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தவறாகக் கூறுவது இது முதல்முறையல்ல, ஏற்கெனவே பிரதமர் மோடிக்குப் பதில் மன்மோகன் என்று கூறியிருக்கிறார். பாரத ரத்னா எம்.ஜி.ஆர். என்பதற்குப் பதிலாக பாரதப் பிரதமர் எம்.ஜி.ஆர் என்று தவறாகக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் நரசிம்மராவ் என்று அவர் தவறாகக் குறிப்பிட்டது பேசுபொருளாகியுள்ளது.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...