Friday, August 10, 2018

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு பயணிகள் குளிக்க தடை

Added : ஆக 10, 2018 05:22

திருநெல்வேலி;கேரளாவில் பெய்துவரும் பலத்த மழையினால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அருமையான சீசன் நிலவுகிறது. வழக்கமாக ஆகஸ்டில் தண்ணீரின் அளவு குறைய துவங்கும்.ஆனால் தற்போது கேரளாவில் பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று மதியம் 12:00 மணிக்குப்பின் தண்ணீர் குறைந்ததால் குளிக்க அனுமதித்தனர். மாலை மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 2.35 அடி உயர்ந்து 112.35 அடி ஆனது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 8.50 அடி உயர்ந்து 123.23 அடியாக உயர்ந்தது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...