Friday, August 10, 2018

எக்ஸ்பிரஸ் ரயில்களில் பெட்டிகள் மாற்றம்

Added : ஆக 10, 2018 05:06

சென்னை:பாண்டியன் எக்ஸ்பிரஸ் உட்பட, மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களில், தலா, ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி நீக்கப்பட்டு, 'ஏசி' மூன்றடுக்கு பெட்டி இணைக்கப்படுகிறது.சென்னை, எழும்பூரில் இருந்து, மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன், திருச்சிக்கு இயக்கப்படும் சோழன் மற்றும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்களில், இருவழிகளிலும், தலா ஒரு, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி நீக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, 'ஏசி' மூன்றடுக்கு பெட்டி இணைக்கப்படும்.

இவ்வசதி, பாண்டியனில், வரும், 20ல் இருந்தும், சோழன், ராக்போர்ட் ரயில்களில், வரும், 21ல் இருந்தும், அமல்படுத்தப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துஉள்ளது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...