Thursday, August 9, 2018

வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை: விக்ரம் கவலை!

By எழில் | Published on : 08th August 2018 02:41 PM



திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கிறேன். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து - சிவகாம சுந்தரியின் மகள் வழிப் பேரனும், கெவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே.ரங்கநாதன் மகன் மனோரஞ்சித்தை விக்ரமின் மகள் அக்‌ஷிதா கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டார். கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...