Saturday, January 5, 2019


டாக்டர்களுக்கு ரூ.10 கோடி அபராதம்

Added : ஜன 04, 2019 22:16 |

சேலம் தவறு செய்யும் மருத்துவருக்கு, 1 முதல், 10 கோடி ரூபாய் வரை, அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவுக்கு, நாடு முழுவதும், மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இது தொடர்பாக, இந்திய மருத்துவ சங்க முன்னாள் துணைத் தலைவர் பிரகாசம், நிருபர்களிடம் கூறியதாவது:நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். சிகிச்சை அளிக்கும் போது, தவறு நேர்ந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு, மாவட்ட நீதிபதி, 1 கோடி ரூபாய்; மாநில நீதிபதி, 10 கோடி ரூபாய் வரை, அபராதம் விதிப்பது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. நுகர்வோர் சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால், ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்க, மருத்துவர்கள் மறுத்து விடுவர்.குறிப்பாக, கிராமத்திலுள்ள ஒரு மருத்துவர் பாதிக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் உழைத்த பணத்தை, அபராதமாக செலுத்த வேண்டி வரும்.மத்திய அரசின் நடவடிக்கை, மறைமுகமாக, தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் உள்ளதால், சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கறுப்பு பேட்ஜ் அணிந்து, எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...