Saturday, May 23, 2015

சென்னையில், ‘அம்மா’ உணவகங்களில் இன்று இலவச உணவு; மேயர் சைதை துரைசாமி ஏற்பாடு

சென்னை,

முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்பதையொட்டி, சென்னையில் உள்ள அனைத்து ‘அம்மா’ உணவகங்களிலும் 3 வேளை உணவுகளும் மேயர் சைதை துரைசாமி ஏற்பாட்டில் இன்று(சனிக்கிழமை) இலவசமாக வழங்கப்படுகிறது.

‘அம்மா’ உணவகம்

சென்னை மாநகராட்சியில் 207 ‘அம்மா’ உணவகங்கள் உள்ளன. இங்கு 1 ரூபாய்க்கு 1 இட்லியும், 5 ரூபாய்க்கு சாப்பாடும் என மலிவான விலையில், தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் மகத்தான திட்டத்தில் ‘அம்மா’ உணவகமும் ஒன்றாக உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கடந்த 11-ந்தேதி ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்.

அவருடைய விடுதலையை வரவேற்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, அன்றைய தினம் தனது சொந்த செலவில் சென்னையில் உள்ள 207 அம்மா உணவகங்களிலும் லட்டு வழங்கினார்.

இலவச உணவு

இந்தநிலையில் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்-அமைச்சராக இன்று(சனிக்கிழமை) பதவி ஏற்க உள்ளார். இதை கொண்டாடும்விதமாக மேயர் சைதை துரைசாமி சென்னையில் உள்ள 207 ‘அம்மா’ உணவகங்களிலும் இன்று காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவுகளையும் இலவசமாக வழங்குகிறார். இதற்கு ஆகும் மொத்த செலவையும் மேயர் சைதை துரைசாமியே ஏற்றுக்கொள்கிறார்.

Friday, May 22, 2015

சமயம் வழியே சமூகம் கண்ட காவியம்! - திருவிளையாடல்

Inline image 1Inline image 2

ஒரு திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது என்பது அந்தத் திரைப்படத்தின் மீதான மதிப்பீட்டைக் கூட்டும்தானே! அப்படி என்றைக்கும் தமிழர்கள் நினைத்துப்பார்க்கிற படம்தான் ‘திருவிளையாடல்’.

1965-ம் ஆண்டில் வெளியான புராணப் படமென்றாலும், அதன் திரைமொழி எல்லா மக்களுக்குமானது. ஏ.பி.நாகராஜனின் நாடக பாணியிலான பல படங்களுக்கு மத்தியில் ‘திருவிளையாடல்’ கடவுள்களை இயல்பான மனிதர்களுக்குண்டான குணாதிசயங்களுடன் திரையில் பதிவுசெய்திருந்தது. கோபம், போட்டி, பொறாமை, வாய்ச் சண்டை இவற்றுக்கெல்லாம் கடவுளர்கள் தூரத்துப் பார்வையாளர்கள் மட்டுமே.

அவர்களின் உலகில் இவற்றுக்கெல்லாம் துளியும் இடமில்லை என்ற மக்களின் நினைப்புக்குத், துணைபோகாமல் கடவுளர்களுக்கு இடையிலும் மனிதர்களுக்கு உண்டான சகலவிதமான குணநலன்களும், குணக்கேடுகளும் உண்டு என்று சொல்லும்விதமாகக் காட்சி நகர்வுகளை ஏ.பி.என். பதிவுசெய்திருந்தார் இந்தப் படத்தில். இந்தப் படம் பெரு வெற்றிபெற்றதற்கு ஏ.பி.நாகராஜனின் நீள அகலமான பார்வைதான் அஸ்திவாரம்!

வெற்றி ரகசியம்

பரமசிவன் எப்படியிருப்பார்? அவரது நடை, உடை, பாவனைகள் எப்படியிருக்கும் என்றறியாத, அல்லது கற்பனையில் ஒவ்வொருவரும் வடிமைத்து வைத்திருந்த பரமசிவனை சிவாஜி கணேசன் வடிவில் திருவிளையாடலில் பார்த்தவர்களுக்கு அது புது திரை அனுபவமாக அமைந்திருக்கும். மூக்கில் முத்துப் புல்லாக்கு மினுமினுங்க, இடுப்பில் பட்டுக் குஞ்சலம் வைத்த நீண்ட ஜடை தாளம்போட, கிரீடம் ஜொலிக்க வந்த திருவிளையாடல் சாவித்திரியை உயிர்பெற்று வந்த உமையாளாகவே அன்றைய தமிழ் ரசிகன் பார்த்திருப்பான்.

திருவிளையாடல் புராணம் என்கிற சைவ இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு முடையப்பட்டது இந்தத் திரைக் கீற்று. ஒவ்வொரு சாமியும் ஒவ்வொரு வகையான நீதியைத் தனக்கானதாகக் கொண்டிருக்கிறது என்று நம்பும் ஆன்மிக மனங்களின் சைவ மரபின் மீது கட்டப்பட்ட சித்திரக் கூடாகவே திருவிளையாடல் படம் இருந்தது. வெற்றிப்படமாக இது அமைய இது ஒரு முக்கியக் காரணம்.

நெருக்கமான உரையாடல்

அதுவரையில் வெளிவந்த புராணப் படங்களில் கையாளப்பட்ட தமிழ் எல்லோருக்குமானதாக இல்லை. “ஓ... கடவுள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்’’ என்று ரசிகனை மெய் (உண்மை) மறக்க வைத்திருந்தார்கள். ஆனால், ‘திருவிளையாடல்’ படத்தில் குழைத்துத் தரப்பட்ட உரையாடல் தமிழின் சந்தனச் சாந்து எல்லோரையும் எடுத்துப் பூசிக்கொள்ள வைத்தது. அந்தக் கலையில் கைதேர்ந்த வித்தகராக அப்போது ஏ.பி.என் கருதப்பட்டார்.

சமயம் வழியே சமூகம்

நமது நாடகங்கள், புராணங்கள், இலக்கியங்கள் வழியாகக் கடவுளுக்கு என்று தனி மொழி உண்டென்று நம்பிய ரசிகனை, ஏ.பி.என். நாட்டு நடப்புகளை, மனிதர்களிடையே புழங்கும் அரசியலை, பெண்களின் நிலையை எல்லாம் இந்தப் படத்துக்குள் இலகுவாகப் புகுத்தி, புராணப் படத்துக்குச் சமூக வாசனையை உண்டாக்கியிருப்பார். இதற்கு ஒரே ஒரு உதாரணம்: பரமசிவன் சிவாஜி கணேசனின் மனைவியாக வரும் உமையாள் சாவித்திரி பேசும் ‘’கடைசிக் குடிமகனில் இருந்து உலகைக் காக்கின்ற ஈசன் குடும்பம்வரை பெண்ணாகப் பிறப்பது பெரும் தவறு என்பது நன்றாகப் புரிந்துவிட்டது” என்ற வசனமே சாட்சி.

ஒரு திரைப்படத்தில் கதாநாயகனை நோக்கிக் குவிகிற ரசிகனின் பார்வைப் புள்ளி, படம் முடியும் வரையில் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற இலக்கணம் திருவிளையாடலில் துளியும் இல்லை. அன்றைய நாளில் புகழ்பெற்ற கதாநாயகனாக வலம்வந்த சிவாஜி கணேசன் நடித்திருந்தாலும், உமையாளாக வந்த சாவித்திரி, தருமியாக வந்த நாகேஷ், நக்கீரராக வந்து ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று முழங்கி நேர்மையின் அடையாளமாகத் திகழ்ந்த ஏ.பி.நாகராஜன், கே.வி.மகாதேவனின் தேனிசை, கவியரசரின் பாடல்கள், அவ்வையாராக வந்த கே.பி. சுந்தராம்பாள், செண்பகப் பாண்டியனாக வந்த முத்துராமன், ஹேமநாத பாகவதராக வந்த டி.எஸ். பாலையா, பாண பத்தராக வந்த டி. ஆர். மகாலிங்கம் இவற்றுடன் ஏ.பி.நாகராஜனின் அருந்தமிழ். கலை இயக்குநர்களின் உழைப்பு எல்லாமும்தான் அப்படத்தின் கதாநாயக அந்தஸ்தைப் பெற்றன. இவை அத்தனையும் 50 ஆண்டுகளுக்கும் பிறகு திருவிளையாடல் திரைப்படத்தை நினைத்துப் பெருமைப்பட வைக்கின்றன.

ஒலி வடிவிலும் சார்ந்த படம்

தொலைக்காட்சிகள் இல்லாத அந்த நாட்களில் ரேடியோதான் மக்களை மகிழ்வித்த ஊடக சாதனம். ஒவ்வொரு தமிழனும் அந்த நாட்களில் குறைந்தது பத்து முறையாவது திருவிளையாடலை ஒலிச்சித்திரமாகக் கேட்டு ரசித்திருப்பான். மார்கழி மாதக் காலை வேளைகளைத் திருவிளையாடல் இசைத்தட்டுகள்தான் இனிப்பாக்கியிருக்கின்றன. அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பத்துப் பாடல்களும் தமிழ் திரையிசைக்கு அஸ்திவாரமிட்டவை.

பி. பி. ஸ்ரீ னிவாஸுடன் எஸ். ஜானகி இணைந்து குழையும் ‘பொதிகை மலை உச்சியிலே’; டி.எம்.எஸ் செங்குரலில் பாடியிருக்கும் ‘பாட்டும் நானே’, ‘பார்த்தால் பசுமரம்’; பாலமுரளிகிருஷ்ணா பாடியிருக்கும் ‘ஒருநாள் போதுமா’; டி.ஆர். மகாலிங்கம் பாடியிருக்கும் ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ ஆகிய பாடல்களுடன்... கே.பி.எஸ். பாடியிருக்கும் ‘பழம் நீயப்பா... ஞானப் பழம் நீயப்பா’ என்ற பாடல் எல்லாம் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தை இன்றைய மொழியில் ‘அட்ராக்டிவ் பேக்கேஜ்’ என்று சொல்ல வைக்கின்றன.

நாகேஷ் என்னும் நகைச்சுவைக் கலைஞனைத் தமிழ் வீடுகளில் கொண்டுபோய் ஜம்மென்று உட்காரவைத்தது திருவிளையாடல். அந்த ஒற்றை நாடி சரீரத்தை வைத்துக்கொண்டு தனது வியத்தகு உடல்மொழியால் எம்பெருமானை எள்ளி நகையாடி, மல்லுக்கு இழுக்கும் நடிப்பில் சிவாஜி கணேசனின் ஆளுமையை அந்தக் காட்சிகளில் இல்லாது ஆக்கியிருப்பார் நாகேஷ்.

கல்யாணம், காதுகுத்து, திருவிழா, பூப்பு நீராட்டு விழா எல்லா நிகழ்வுகளின்போதும் இசைத்தட்டு வழியாகத் தமிழர்களைத் தருமி சிரிப்பு மகிழ்வித்திருக்கிறது. 50 ஆண்டுகள் மட்டுமில்லை இந்தப் படம் தந்து 100-வது ஆண்டுகளிலும் நினைக்கப்படும். போற்றப்படும்.

படங்கள் உதவி: ஞானம்

Tracking system in medical colleges for ‘ghost’ faculty

The Medical Council of India (MCI) is all set to revive a project on centralised faculty identification and tracking for all medical colleges in the country. The project aims at maintaining a database of faculty, how many classes they take and the time spent on taking classes.

Sources said a sub-committee under the MCI studied the project, Radio Frequency Identification (RFID) system, which was started and dropped in 2009 during the UPA government. All medical colleges, including private ones, have been informed about the project.

It was conceptualised to address complaints of “ghost faculty” who were “arranged” by medical colleges during scheduled inspections by MCI teams. “We received such complaints from several inspectors. Even though they knew the college did not have the stipulated number of faculty, administration in private colleges would arrange teachers during inspections,” a senior member of the MCI executive committee said.

This, sources said, had repeatedly been mentioned by several experts as a reason for the drop in the quality of medical education in private medical colleges across the country.

“…During annual inspections, medical colleges arrange for ghost faculty who actually are not on the rolls. There have been so many complaints from students about many private colleges not having any real faculty in critical subjects, especially in PG courses of super-specialised degrees…,” the official said.

Sources said the project was dropped in 2009 after being vetted by the then board of governors of MCI because it was considered too expensive and “not very feasible”. Sources said, in the project, system records would be maintained about every faculty and the time they spend in the college — including time spent on every lecture.

“This will also address the problem of classes not being actually held or being finished earlier than the stipulated time. Now, the time a teacher spends in taking a class will be monitored. So another complaint we face about syllabus not being completed despite classes being taken throughout the year will be addressed,” he explained.

According to the notification sent by MCI to all colleges, the vendor identified for the project will provide every college with a 13 core processor, 4 GB RAM, 1 TB hard disc computer, a preferably leased line broadband connection, and a biometric identification system.
The information about the faculties will be integrated with their Aadhar card numbers, from where the database for fingerprint authentication will be taken.

An engineer from the vendor will visit every college on identified days to set up the project.

தலையை துண்டிக்க ஆட்கள் தேவை: சவுதி அரசு விளம்பரம்..DINAMALAR 22.5.2015

ரியாத்,: 'தலையை துண்டித்து, மரண தண்டனையை நிறைவேற்ற ஆட்கள் தேவை' என, சவுதி அரேபிய அரசு, விளம்பரம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சவுதி அரேபியாவில், போதை மருந்து கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை, நம்பிக்கை துரோகம், ஆயுத முனையில் வழிப்பறி போன்ற கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்கள், மரண தண்டனையில் இருந்து தப்ப முடியாது.அத்தகைய குற்றவாளிகளை, பொதுமக்கள் மத்தியில் நிற்க வைத்து, தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இன்னும் சிலருக்கு, துப்பாக்கியால் சுட்டும், கல் எறிந்தும் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
அதுபோல, சாதாரண திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகள் கூட, தங்களது கைகளை மறந்து விட வேண்டியது தான்.உலகளவில், மிக அதிகமாக மரண தண்டனை வழங்கும் நாடுகளின் பட்டியலில், சவுதி அரேபியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், அந்நாட்டில், 87 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.நடப்பாண்டில் இதுவரையில், 85 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், தண்டனையை நிறைவேற்ற ஆட்கள் தேவை என, சவுதி அரேபியாவின் சிவில் சேவை அமைச்சகம் விளம்பரம் வெளியிட்டுள்ளது. எட்டு காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைக்கு கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை எனக் கூறியுள்ள சவுதி அரேபிய அரசு, விண்ணப்பதாரருக்கு வழக்கமான தேர்வு நடைமுறையிலிருந்து விலக்களிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Result rumour makes CBSE students anxious

AHMEDABAD: CBSE students in the city were an anxious lot on Thursday after rumours spread that the class X results would be out on Friday. Students and their parents kept calling schools to know if the results were to be out on Friday but there was no confirmation.

Every year, CBSE students pass through such anxious moments before the result day as the central board does not announce beforehand the date on which the results are to be announced.

The principal of a CBSE school said, "Since morning, students and parents began calling up the school to know about the results but we were not aware of the date. We even checked the website but found no instruction to this effect. The board never communicates to the schools or through the media about the result date."

Even officials in CBSE regional office in Ajmer were unaware about it. "The date of the result declaration is finalized by our head office in New Delhi. We are not involved in the process of finalizing dates. We inform our New Delhi office when the results are ready and Delhi officials then choose a suitable date to declare the results," an official said.

CBSE schools in Gujarat come under the administrative purview of the board's regional office in Ajmer. An official there admitted that he had received several calls from parents and even school authorities seeking to know about the possible date of results.

However, officials in Ajmer office said that the class XII science and commerce results would be declared by May 25 while the class X result day would be any day in May last week.

Jail inmates score big in SSLC exams

Inmates of jails in Madurai region who appeared for the SSLC examinations, recorded impressive performances. Of the 98 prisoners who appeared for the exam, 95 passed. The top score was 425 marks. Among the prisoners, 30 were from Madurai central prison, 33 from Palayamkottai central prison, 25 from Trichy central prison and 10 from Borstal School in Pudukottai.

G Muthuramalingam, 34, from Palayamkottai Prison was the topper with 425 marks.Superintendent of Madurai central prison R Arivudainambi said they had formed an education committee comprising inmates with BEd and MEd degrees. The committee undertook the task of teaching the prisoners and preparing them or SSLC examinations.

Besides, they also obtained teaching and motivation materials from Virudhunagar district, which has been maintaining the first place in Class 10 board examinations pass percenta g e for decades and Class12 results for 28 years.

"We also took help from NGOs and outside teachers to train our prisoners. We are glad they achieved very good marks," he said.

Thursday, May 21, 2015

அப்பீல் ஆலோசனை தள்ளிவைப்பு: ஜெ. பதவியேற்புக்காக கர்நாடக அரசு முடிவை மாற்றியதா?

பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்வது குறித்து கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை முடிவெடுக்க இருந்த நிலையில், இக்கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வருகிற 23 ஆம் தேதியன்று பதவியேற்க இருப்பதையொட்டியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பில் கணக்கு பிழை இருப்பதாக கூறி, தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, மேல்முறையீடு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு இரு தினங்களுக்கு முன்னர் பரிந்துரை கடிதம் அனுப்பினார்.

அமைச்சரவை கூட்டம் திடீர் ஒத்திவைப்பு

இந்த பரிந்துரை கடிதத்தின் மீது மே 21ஆம் தேதி ( நாளை) நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் முதலமைச்சர் சித்தராமையா மைசூர் செல்ல இருப்பதால் நாளைய கூட்டம் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி

கர்நாடக அரசின் இந்த திடீர் முடிவு தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஜெயலலிதா, அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், அதனைத் தொடர்ந்து தற்போதைய முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றும், அதன்பின்னர் மறுநாள் 23 ஆம் தேதி சனிக்கிழமையன்று ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றபோதிலும், பதவியேற்புக்கான ஏற்பாடுகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் ஜெயலலிதா 23 ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என்றும், அதில் மாற்றம் ஏதுமில்லை என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

ஒத்திவைப்புக்கு காரணம் என்ன?

இதனிடையே மேல்முறையீடு குறித்து முடிவெடுப்பதற்காக நடைபெற இருந்த கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதற்கு, முதலமைச்சர் சித்தராமையா மைசூர் செல்ல இருப்பதுதான் காரணம் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட சில அரசியல் நடவடிக்கைகளே காரணமாக இருக்கலாம் என கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா 23 ஆம் தேதி பதவியேற்பது உறுதியாகிவிட்ட நிலையில், ஒருவேளை ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்று நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அது ஜெயலலிதா பதவியேற்பதற்கு முன்னரே நெருடலை ஏற்படுத்தி, அது தொடர்பான விவாதங்களைக் கிளப்பக்கூடும்.

விடுதலை தீர்ப்பு அப்பீலுக்கு செல்லும்போது ஜெயலலிதா பதவியேற்பது சரியா? என்ற கேள்வியை தமிழக எதிர்க்கட்சிகள் கிளப்பலாம். எனவே இதனை தவிர்ப்பதற்காகவும், தற்போதைய விடுதலை தீர்ப்பு என்ற இமேஜுடனும் ஜெயலலிதாவை பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்பதற்காகவும் ஜெயலலிதாவுக்கு இன்னமும் விசுவாசமாக உள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் மூலம் லாபி செய்யப்பட்டு, கர்நாடக அரசின் முடிவு தள்ளிவைக்கப்பட்டிருக்கக் கூடும் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி அளிப்பதில் காலதாமதம்: விண்ணப்பம் வழங்க முடியாமல் திணறும் சட்ட பல்கலைக்கழகம்

சட்டப் படிப்பு மாணவர் சேர்க் கைக்கு அரசு அனுமதி அளிக்காத காரணத்தால் விண்ணப்பம் வழங்க முடியாமல் சட்டப் பல்கலைக் கழகம் திணறுகிறது. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 7 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. சென் னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரி இயங்குகிறது.

அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு கால இளங்கலை சட்டப் படிப்புகளும் (பிஏ.எல்எல்பி), சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு கால ஆனர்ஸ் சட்டப் படிப்பு களும் உள்ளன. இந்த ஆண்டு புதிதாக பிசிஏ.எல்எல்பி படிப்பும், பிபிஏ.எல்எல்பி படிப்பும் அறிமுகப் படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில், ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கான விண்ணப்பம் மே 8-ம் தேதி முதலும் சாதாரண சட்டப் படி ப்புக்கான விண்ணப்பம் மே 14-ம் தேதி முதலும் வழங்கப்படும் என்று சட்டப் பல்கலைக்கழகம் கடந்த 4-ம் தேதி அறிவித்தது. ஆனால் இன்றுவரை விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. நிர்வாக காரணங்களுக்காக விண்ணப்பம் வழங்குவது தள்ளிவைக்கப் பட்டுள்ளதாக சட்டப் பல்கலைக் கழகத்தில் தற்போது அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அச்சடிக்கப் பட்டு வரவில்லை என்று ஆரம்பத்தில் காரணம் கூறப்பட்டது. விண்ணப்பத்தில் எழுத்துப் பிழைகள் அதிகமாக இருப்பதால் அவற்றை சரிசெய்ய தாமதம் ஆவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு அரசு இன்னும் அனுமதி அளிக்காத காரணத்தால்தான் விண்ணப்பம் வழங்க முடியாமல் சட்டப் பல்கலைக்கழகம் திணறுவதாக தற்போது தெரிய வந்துள்ளது.

பொதுவாக, பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு அரசிடம் முன்அனுமதி பெறுவது வழக்கம். ஆனால், அத்தகைய முன் அனுமதியை சட்டத்துறையிட மிருந்து சட்டப் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு பெறவில்லை. அதற்குள் விண்ணப்பம் விநியோ கம், கலந்தாய்வு உள் ளிட்ட மாணவர் சேர்க்கை க்கான அறிவிப்புகள் வெளியிடப் பட்டு விட்டன.

முன்அனுமதி பெறாத காரணத் தால் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க சட்டத்துறை தாமதம் செய்துவருவதாக சட்டப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அவற்றை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் நெருங்கிவிட்ட நிலையில், சட்டப் படிப்புக்கு இன்னும் விண்ணப்பம் வழங்கா ததால், சட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் கவலை அடைந்துள்ளனர்.

கணக்கு ஆசிரியர் இல்லாததால் தயவு செய்து ‘பாஸ்’ போடுங்கள்: கர்நாடகத்தில் தேர்வுத் தாளில் எழுதி வைத்த மாணவர்

கர்நாடகத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு தேர்வில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சில மாணவர்கள் எழுதிவைத்த சுவை யான கடிதங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளன.

வேடிக்கைக்காக பகிரப்பட்ட அந்த கடிதங்கள் அரசுப் பள்ளி களின் யதார்த்த நிலையை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகள் முடிந்து, முடிவுகளும் வெளியாகிவிட்டன. இந்நிலையில் ஒரு மாணவர் தனது விடைத் தாளில் ''எனக்கு கணக்கு வாத்தி யார் இல்லை. மார்ச் மாதத்தில் திடீரென வந்த ஒருவர் அடுத்த 15 நாட்களில் அனைத்து பாடத்தை யும் சூறாவளி வேகத்தில் முடித்து விட்டார். அவர் நடத்திய பாடம் யாருக்கும் புரியவில்லை. எனவே தயவு செய்து எனக்கு 'பாஸ்' போடுங்கள்'' என கோரிக்கை வைத்துள்ளார்.

மற்றொரு மாணவர், “எனது பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாத தால், ஆங்கில மீடியத்தில் சேர்ந் தேன். கன்னட மீடியத்தில் படித்த எனக்கு, ஆங்கிலம் கொஞ்சம்கூட புரியவில்லை. உங்களுடைய பிள்ளையாக நினைத்து என்னை பாஸ் செய்துவிடுங்கள். ப்ளீஸ்!” என்று எழுதியுள்ளார்.

ஒரு மாணவரோ, “என்னை பாஸ் செய்யாவிட்டால் உங்களுக்கு செய்வினை செய்து விடுவேன்” என மிரட்டிள்ளார். மற்றொருவர், 'சிக்கன் குழம்பு செய்வது எப்படி?' என சமையல் குறிப்பை எழுதி வைத்துள்ளார்.

இந்த தேர்வுத்தாள்கள் ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன.

விடைத்தாள் திருத்தும் அறை யில் ஆசிரியர்கள் உட்பட யாருக் கும் செல்போன் கொண்டுசெல்ல அனுமதி இல்லை. அப்படியிருக்க, இந்தப் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது என கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் “இந்தப் படங் களை கேலியாகவும் விளையாட் டாகவும் கருதாமல் அரசுப் பள்ளி களின் யதார்த்த நிலையை காட்டு வதாக கருதவேண்டும். அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தரமான கல்வி வழங்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கர்நாடகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியாயின. பெங்களூருவில் கடந்த மார்ச் 31-ம் தேதி பள்ளி விடுதியில் ஊழியரால் சுட்டுக்கொல்லப்பட்ட க‌வுதமி 525-க்கு 472 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

12-ம் வகுப்பு தேர்வை முடித்துவிட்டு நுழைவுத் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த கவுதமியை அதே பள்ளியில் பணிபுரிந்த மகேஷ் என்பவர் ஒருதலைக் காதல் காரணமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் மகேஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.

தேவை தேர்வு முறைகளில் திருத்தம்

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள இந்த நேரத்தில், பயமும் கூடவே வருகிறது.
பெறும் மதிப்பெண்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கும் ஆக்க சக்தியாக அமையப் போகின்றன என்றாலும் குறைந்த மதிப்பெண்கள், அதனினும் குறைந்து தேர்ச்சியில்லாமல் செய்துவிடுகின்ற மதிப்பெண்கள் எத்தனை இளங்குருத்துகளின் உயிர்களைக் குடிக்கப் போகின்றனவோ என்கிற அச்சம்தான் மிகுகிறது.
தேர்வு, அறிவின் வாசல்களைத் திறந்துவிடுகிற செயல்பாடாக இல்லாமல், ஒரு சூதாட்டம்போல் கவிந்துவிடுகிற அவலம் ஆண்டுக்கு ஆண்டு மிகுந்துவருகிறது.
பன்முகத் திறனைப் பரிசோதிக்கும் வகையில் இன்றி, மனப்பாடத் திறனை அளந்து பார்க்கும் மொன்னை அளவுகோலாகவே தேர்வுகள் இருப்பதால் அது பலரைச் சரித்துவிடுகிற சறுக்கு மரமெனவே ஆகிவிடுகிறது.
ஆண்டுக்கணக்கில் கற்ற பாடங்களை, அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் விடைத்தாளில் கொட்டிவிடுகிற தன்மையைப் பொருத்துத்தான் எல்லாமும் என்றால், அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு எழுதும் பிள்ளையின் மனநிலை, தேர்வெழுதும் வகுப்பறைச் சூழல், தட்பவெப்பம் எல்லாம் எல்லா நாள்களிலும் இயல்புற இருந்துவிடுமா என்ன?
எப்போதும்போல, முதல் மற்றும் சிறப்பு மதிப்பெண்களைப் பெற்ற பிள்ளைகளைப் பாராட்டிப் பரிசுகள் கொடுத்தும் படம் எடுத்தும் மகிழ்ந்து போகிற நம்மில் பலர், மதிப்பெண் குறைந்து உயிரைத் துறக்கிற குழந்தைகள் குறித்து அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லையே என்கிற கவலையும் வருகிறது.
முன்னவர்களைக் காட்டிலும் பின்னவர்களே இந்தத் தேர்வில் அதிகம் இருக்கிறார்கள். முன்னவர்களைக் காட்டிலும் பின்னவர்களைப் பேணுவதுதான் இந்த நேரத்தில் செய்ய வேண்டிய அவசர அவசியப் பணி. அது தாற்காலிகப் பணி. நிரந்தரமாக நாம் செய்ய வேண்டியது, தேர்வு முறைகளில் செய்ய வேண்டிய திருத்தம்தான்.
கல்வி அறிவு சார்ந்தது; அறிவு ஒழுக்கம் சார்ந்தது; ஒழுக்கம் சூழல் சார்ந்தது; சூழல் சரியாக இருக்கும் வரையில் எல்லாமே சரியாக இருக்கும். சூழல் சரிகிறபோது அனைத்துமே சரிந்துவிடுகிற அபாயம் எழுகிறது.
உலகத்தின் அனைத்து வாயில்களுக்குமான திறவுகோலாகக் கல்வியைக் கருதும் காலம். ஏனைய எல்லாச் செல்வங்களையும் இதன் வாயிலாகப் பெற்றுவிட முடியும் என்பதால் பெறற்கரிய செல்வங்களில் தலைசிறந்த செல்வமாகக் கல்வியைக் கருதுகிற காலம்.
வாழையடி வாழையென வரும் மானுட குலத்தின் முந்தைய அனுபவங்களின் திரட்சியை, அடுத்துவரும் சந்ததியர்க்கு வழங்கும் பாங்கைக் கல்வி தனது அடிப்படைக் கூறாகக் கொண்டுள்ளது.
ஒவ்வோர் உயிரும் தாயின் கருவறையில் உதயமாகும்போதே, அதன் அறிவுபெறும் வாயில் திறக்கப் பெறுகிறது.
தாயின் மனவுணர்வுகள், உடல்கூறுகள், அந்தந்தப் பகுதித் தட்பவெப்பச் சூழல்கள் யாவும் அவ்வுயிரின் அணுக்களில் நுட்பமாகப் பதிவாகின்றன. மெல்ல வளர்ந்து, உருவெய்தத் தொடங்கியபின்பு, அந்தக் குழந்தை, தன் ஆற்றல்சார் சிந்தனைக்குரிய தளங்களில் அறியாமை நிரப்பியிருப்பதை, அனுபவங்கள் வாயிலாக உள்வாங்கிக் கொள்வதன் மூலமாக, அறியாமையை அகற்றி அறிவைக் குடியேற்றப் பயில்கிறது.
மகளுக்குத் தாயும், மகனுக்குத் தந்தையும் முன்மாதிரிகள். பின்னர், வெவ்வேறு நிலைகளில் குருவாக அமையும் இருபால் ஆசிரியப் பெருமக்களே அவர்களின் அறிவை விரிவு செய்ய உதவுபவர்கள்.
காணுதல், கேட்டல், உரைத்தல், உணர்தல் முதலிய தன்மைகளில் அனுபவங்களாகப் பெறும் கல்வி, புலன்கள் ஊடாகச் சென்று உணர்வில் கலந்து, உயிரில் நிலைபெறுகிறது. அவ்வாறு ஒருமுறை பெறும் கல்வி, எழுமைக்கும் ஏமாப்புடைத்து என்கிறது வள்ளுவம்.
பொதுவாக, உறுப்புகள் ஒத்து விளங்கினாலும், மானுட சமூகத்தில் ஒவ்வோர் உயிர்க்கும் வெவ்வேறு படிநிலைகள் இருக்கின்றன. ஒருதாய் வயிற்றில் பிறந்த, ஒரே சூழலில் வாழ்கிற, ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாயினும், அவர்களிடையே தனித்த மனப்போக்குகள், அறிவாற்றல் தன்மைகள் நிலவக் காணலாம். எனவே, பெறும் கல்வி ஒன்றாக இருந்தாலும், பெறுபவர் - நல்குபவர் ஆகிய இருவேறு நபர்களின் இயல்புகளைப் பொருத்தே அமைகிறது.
1. காட்சி, கேள்விகளின் ஊடாக, உய்த்தறியும் அனுபவங்களின் அடிப்படையில் மெய்ப்பொருள் காண்பது.
2. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது.
3. எவ்வதுறைவது உலகம், உலகத்தோடு அவ்வது உறைவது.
என்ற நிலைபாடுகளில் எய்தும் அறிவு, சென்ற இடத்தால் செலவிடாது தீமையில் இருந்து நீங்கி, நன்றின்பால் உய்ப்பதாக இருத்தல் வேண்டும். அதுவே, அற்றம் காக்கும் கருவி கேடில் விழுச்செல்வம். அதன் பயன், பிறிதின் நோய் தன் நோயாய்க் கருதிக் களைந்து நலம் பேணும் பாங்கில் மன்னுயிர் ஆக்கத்துக்குத் தன்னைத் துணையாக்கித் தன்னுயிர்க்கும் ஆக்கம் பேணல்.
இந்த மரபில் வரும் கல்வியே, மாசுமறுவற்ற தூய அறிவை - வாலறிவை நோக்கி, மானுடத்தை உயர்த்துவது. இதன்வழி வளர்ந்து முன்னேகும் மானுட உயிர் கசடறக் கற்று, கற்றவாறு ஒழுகி, வானுறையும் தெய்வத்துக்கு நிகராக நிற்கும் தன்மையைப் பெறும்.
ஓதியுணர்ந்து பிறர்க்குரைத்துத் தானடங்கல் என்பதே கற்றல் முறை. இது, இன்றைய கல்வி முறையில் இருக்கிறதா என்பதுதான் இமாலயக் கேள்வி.
வணிகமயமான வாழ்வில், உலகமயமாக்கல் விரவிவரும் சூழலில், தனித்தன்மைகள் எல்லாம் அடிபட்டுப்போய் - உயிர் வளர்க்கும் கல்வி - பணம் சேர்க்கும் ஒரு வாயிலாகச் சுருங்கிப் போய்விட்டது.
அதனால்தான், மொழி என்பது உரையாடலுக்கு உதவும் ஓர் ஊடகம் மட்டுமே என்ற அளவில் மொன்னையாக்கப்பட்டுவிட்டது. ஒழுக்கம், பண்பாடு, கலாசாரம் ஆகியன எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. விலை மதிப்பில் பல மடங்கு உயர்வு பெற்றுள்ள கல்வி, விழுமிய நிலைப்பாட்டில் பலமடங்கு சரிவு பெற்றுப்போகிறது.
இறைவனை ஒத்த குருவைக் கொண்டு பெறும் குருகுலக் கல்வி ஒழிக்கப்பட்டுவிட்டது. இயந்திரங்கள்போல் மொழி பேச, எழுதப் பழகிய மனிதப் பொம்மைகள் இன்றைய கல்விக் கூடங்களில் வார்க்கப்படுகின்றன.
என்னென்ன வகைகளில் முடியுமோ அந்தந்த வகைகளில் முயன்று குழந்தைகளின் மூளைகளில் விடைகளைத் திணிக்கவும், வேண்டும் நேரத்தில் விடைத்தாள்களில் இட்டு நிரப்பவும் போதுமானதாகக் கல்வித் தேர்வு முறைகள் ஆகிவிட்டன.
ஏன், எதற்கு, எவ்வாறு என்றெல்லாம் அறிந்து கொள்வதற்குப் பதிலாக அளவுக்கு மேலாக விழுங்கித் துப்பும் முறையே மிகுந்தமையால் முடிந்தவர்கள் விழுங்கப் பழகிக் கொள்கிறார்கள், முடியாதவர்கள் வேறு பல சாகசங்கள் நிகழ்த்தத் தூண்டப்படுகிறார்கள்.
தெய்வீக உறவாக இருந்த ஆசிரிய - மாணவ உறவு பல்வேறு சிதைவுகளுக்கு உள்ளாகிவிட்டது. எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதெல்லாம் தேர்வில்கூடச் செல்லாச் சொல்லாகிவிட்டது. ஒரு குற்றவாளியைக் கண்காணிப்பதுபோல் கண்காணித்து நடத்தப்படும் தேர்வில் எழுதப்படும் விடைகள் தரும் மதிப்புதான் என்ன?
கண்முன் பூதாகரமாய் நிற்கும் எதிர்காலத்தை வெல்லும் ஆயுதமாக, கல்வி திகழ்வதற்குப் பதிலாக அச்சம் தருவதாக அமைந்தால் அதற்கே தேர்வுகள் துணை செய்யும் என்றால் மிச்சத்தை என்ன சொல்ல?
வினாத்தாளில் வரிசை வரிசையாக நிற்கும் வினாக்குறிகள், கழுத்தை வளைக்கும் பாம்புகளைப்போல் பயமுறுத்தினால், தன்னம்பிக்கை, வளைந்த முதுகுத்தண்டுபோல் ஆகி பிள்ளைகளின் மனங்களையும் வளைத்துவிடுமே. அவர்கள் வருங்காலத்தை ஒடித்தும் போட்டுவிடுமே.
உணவுபோல் ருசித்து, மென்று தின்று, ஜீரணித்து உள்வாங்கப்படுவதாக அல்லவா அறிவுதரும் கல்வி அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு பெறுகிற கல்வியறிவு உணர்வில் கலந்து உயிரோட்டமாக அல்லவா வெளிப்பட வேண்டும்.
ஞானமும், ஒழுக்கமும் பேணப்படாத கல்வியால் நாம் பெறப்போவது என்ன? வெறும் மனப்பாடத் திறன் மட்டுமே அறிவை, ஆற்றல்சார் நம்பிக்கையை அளித்துவிடுமா?
தனித்தன்மை மிக்க குழந்தைகளின் ஆற்றல்களுக்குச் சவால் விடவேண்டிய தேர்வு முறை, பல்திறன் ஆற்றல்களை அடையாளம் கண்டு வெளிப்படுத்துதற்கு வழிவகுக்காமல், நினைவாற்றலை மட்டுமே பரிசோதிப்பதாக இருப்பதால் என்ன சிறப்பு?
அச்சமின்றி, மிகுந்த ஆர்வத்தோடு மாணவ உலகம் பங்கேற்கும் வண்ணம் உற்சாகமும், ஊக்கமும், நம்பிக்கையும் தருகிற தேர்வை நாம் எப்போது நடத்தப் போகிறோம்?
வெற்றிபெற்றால் கிடைக்கும் பரிசு, பாராட்டு ஆகியவற்றையெல்லாம்விட, தோல்வியுற்றால் கிடைக்கும் அவமானம், சரிவு ஆகியவற்றை எண்ணிக் கலங்கும் பல பள்ளிப் பிள்ளைகள் எடுக்கும் முடிவுகள் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இருக்கும் என்கிற ஆபத்தை யாரும் உணர்ந்து கொண்டிருக்கிறார்களா என்பதே ஐயமாக இருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொட்டிப் பெறும் கல்வியின் விளைச்சல், இந்தத் தேர்வு முடிவுகளைப் பொருத்துத்தான் அமையும் என்பதால், அளவுக்கு மீறிய அச்சத்தையும், ஆபத்தான போக்குகளையும் எந்த நிலைக்கும் பிள்ளைகளைக் கொண்டுபோய் நிறுத்தும் என்கிற நம்பிக்கையற்ற தன்மையையும் இந்தத் தேர்வு முறை தொடர்ந்து வளர்த்துக் கொண்டே இருந்தால், இளைய சமுதாயத்திடம் இருந்து ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற முடியுமா என்பது ஐயமே.
ஒளிபடைத்த கண்ணோடும், உறுதி கொண்ட நெஞ்சோடும், களிபடைத்த மொழியோடும், கடுமை கொண்ட தோளோடும் இளைய பாரதம் வலம் வர வேண்டும் எனில், தெளிவு பெற்ற மதி வேண்டும். அத்தகு மதி தரும் கல்வி வேண்டும். அது நிம்மதியைத் தொலைத்துப் பெறுவதாக இருக்க கூடாது.
"கற்றல் ஒன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதியது இயற்றுவாய் வா வா வா'
என்று பாரதியார் கூவி அழைக்கிற பாரத சமுதாயம் விரைவில் வரக் கல்வி முறையில் மாற்றம் தேவை. அதனைவிடவும் தேர்வு முறைகளில் உடனடி மாற்றம் தேவை.

கட்டுரையாளர்:
துணைப் பேராசிரியர்,
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி,
புதுச்சேரி.
உணவுபோல் ருசித்து, மென்று தின்று, ஜீரணித்து
உள்வாங்கப்படுவதாக அல்லவா அறிவுதரும்
கல்வி அமைந்திருத்தல் வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களின் பணிப் பதிவேட்டில் ஆதார் கட்டாயம்

மத்திய அரசு ஊழியர்களின் பணிப் பதிவேட்டில் ஆதார் எண் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய பணியாளர், பயிற்சித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறியதாவது:
அரசு ஊழியர்களின் பணிப் பதிவேட்டில் தற்போது ஊழியரின் சுய விவரக் குறிப்பு, பணியிட விவரம், பணித் தகுதி, மத்திய அரசின் சுகாதாரத் திட்டம், குழு காப்பீட்டுத் திட்டம், பயணச் சலுகை விடுப்பு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், பணிப் பதிவேட்டில் ஆதார் எண்ணும் இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, அமைச்சகங்களிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

மழை நீரில் மிதக்கும் பெங்களூரு 21 May 2015 03:37 AM IST

பெங்களூரில் தொடர்ந்து 12 மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி, புதன்கிழமை காலை 6 மணி வரை பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில், குடிசைகளில், சாலையோரங்களில் வசித்து வரும் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். சாலைகளில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கியிருந்தது.
பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 2 மணி வரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் அவதிக்குள்ளாகியது.

TS govt clears way for separate test for MBBS admissions under management quota, hikes fees

The Telangana state government has cleared a long pending demand seeking permission allowing private medical colleges in the state to conduct a separate entrance test for admissions to MBBS seats in private medical colleges under private and management quotas. At the same time the state government has also allowed the private medical colleges to hike fees from Rs.2.4 lakhs to Rs.9 lakhs to B category seats in all the private medical colleges from the 2015-16 academic year going to begin in June.

The MBBS seats in the state are categorised as A, B and C based on government, private and management quotas respectively. The state government had stipulated a particular fee structure to each category. The fees for MBBS seats in government medical colleges is not changed, while 10 per cent of B category seats in private medical colleges has increased from this academic year.

With the state government approving the proposal, detailed orders are expected to be released soon. “As the state government has agreed to allow private medical colleges conduct separate medical admission tests, it will allow all them to fill about 35 per cent of medical under B category and management quota,” said a senior official in the Medical and health education department.

There are altogether 13 medical colleges in both government and private sectors in Telangana having 2950 MBBS seats in all. Out of which 5 colleges are under government sector and 8 medical colleges are under private managements. The 35 per cent of MBBS seats for which the private managements are allowed to conduct a separate test constitute 10 per cent under B category in private medical colleges and the remaining 25 per cent under C1 quota which comes under management category seats. For all these seats, the government has also given a green signal to increase the fees. This means about 210 seats under B category will have an annual fee of Rs.9 lakhs which is a huge burden on the students and the parents. “This has increased a huge burden on the middle class and upper middle class people who want to secure a seat under private quota. Earlier we could manage to get loans for B category seats, but with Rs.9 lakh fees annually, it amounts Rs.45 lakhs by the time a student completes his MBBS education. With limited incomes and no option for even going to loans this fee structure completely blocks the middle class and upper middle class to look for private quota,” said a parent.

Chennai police issues advisory for online shopping

CHENNAI: Looking for a good deal on a second-hand branded mobile phone, Dr Sunil Kumar from Thousand Lights browsed through OLX portal. He found a phone that he liked and paid Rs 10,000 to a seller. Little did he know that he would never get the phone.

Falling for a classified ad that promised to offer a luxury product worth Rs10 lakh just for Rs 2 lakh, Arunodayam of Kilpauk paid the money. He neither saw the four-wheeler nor was able to get his money back.

Both Dr Sunil Kumar and Arunodayam were among 11 complainants, who have approached the city police over the past five months, claiming that they have lost money trying to buy second-hand products on online platforms like OLX and Quickr. These portals are not responsible for authenticity of the ads posted on their web pages.

In the light of such increasing number of complaints and a flourishing new trend in online fraud, the city police have sent out an advisory for people who wish to buy used products online. Further, city commissioner S George has also instructed cyber crime officials to write to the portals to check for authenticity of sellers, who post ads on their sites.

They warn buyers not to pay money before seeing the actual product in person. Particularly, those would like to purchase mobile phones, two-wheelers, four-wheelers, camera and laptops, they should the working condition of these products before making a purchase.

Buyers are advised to thoroughly read the terms and conditions posted on these websites. Buyers and sellers are advised to meet in person and check the quality of the product before paying for it. Buyers should also be careful about sellers who refuse to meet in person as they could be fraudsters.

Buyers should not trust those who insist them to send an advance or make payment online before getting the product.

Never trust any seller who tries to convince through video calls that he lives abroad and wish to sell products.

Never deal with sellers who refuse to reveal their address and contact number. Never do online transactions or send cheques to sellers. Never reveal your bank account number or any other information related to it to sellers. Buyers should not trust anyone who attempts to sell products at a lesser price claiming to be at the customs, airport or harbor.

If cheated online, people should bring it to the notice of the police and lodge a formal complaint.

MCI issues circular authorizing state councils to initiate action against doctors’ strike

CHENNAI: In a move that has ruffled a few feathers among the medical fraternity, the Medical Council of India (MCI) has issued orders to ban strikes by doctors and has instructed the state medical council to take immediate disciplinary action against anyone going against the order. With increasing incidents of doctors going on strike demanding hikes and protection against attacks on hospitals, the order is said to be issued in an effort to ensure that patients do not suffer the consequences of such protests.

Following a writ petition filed by the People for Better Treatment in November last year, the Supreme Court took cognisance of a series of strikes called by doctors on numerous occasions which caused tremendous suffering to certain patients. It further placed the onus on MCI to ensure that doctors did not go on strikes and inconvenience patients.

A senior MCI official in the state confirmed that they have received the circular from the apex body and the matter has been taken into consideration. "Each time doctors in the city call a strike, lakhs of people suffer. There is no excuse for putting patients through such trauma. However, there are several incidents of assault on doctors and hospitals. The state should ensure that the Hospital Protection Act is implemented effectively," said the official.

Though the Supreme Court's judgment is law, The recent MCI directive would expose all striking doctors to likely punishment with disciplinary action such as suspension of their registration certificates. "Going on a strike is any person's fundamental right. Even the Supreme Court does not call for a blanket ban of strikes by doctors. How else can we doctors express our objection towards anything?" said , Dr K Senthil Kumar, president of Tamil Nadu Government Doctors Association. "Even if we are on a strike, we ensure that all emergency cases are attended to and no one gets affected. As long as proper notice is given, strikes are not illegal," he added.

Change in degree name irks students

BENGALURU: Two hundred students doing MS Communication in various colleges affiliated to Bangalore University believe they're being cheated by the varsity.

A semester into their course, they're being told they'll get a Master of Arts degree although they have registered for Master of Science in Communication. They protested outside the Jnana Jyothi auditorium while a syndicate meeting was under way.

Students said this may have been a policy decision but the university did not inform them. "The decision was taken by the academic council in July based on the University Grants Commission's gazette notification. If they had told us even in September, we could have shifted to another college in December without losing one year," said one student.

Students were not informed about the change even when they paid their second semester fees. That receipt still says 'MS in Communication'.

"Our future is affected because an MS in Communication is required to get a PRO job in the Navy or Air Force and other sectors," a student said.

Vice-chancellor B Thimme Gowda said, "We have no option because the UGC pulled us up with regard to the nomenclature. The students don't have to worry because across the country, no MS (Communication) degrees will be accepted by the UGC. Former students can be given an explanatory letter if they need one," he said.

He said all colleges were informed about the change last year. "If the fee receipt and question papers say something else, these are clerical mistakes," he claimed.

CBSE board 12th class result to be announced soon May 20, 2015, 11.09 AM IST


The long wait of Central Board of Secondary Education (CBSE) Board 12th class results may end soon.

Get your CBSE Board 12th Class Result 2015

The CBSE Board Class 12th examinations concluded in the month of March. This year, about 10,40,368 students have appeared for Class 12 exams across the country.

In the year 2014, total number of 10,29,874 students had appeared for class 12th examinations. Also during the year 2014, the educational board experienced more of 13,000 schools registered for providing opportunities to the students to sit for the examination.

The Central Board of Secondary Education (CBSE) was established in the year 1929, with its head office located in Delhi. It is one of the oldest and largest Board of Secondary Education in India. It has More then 16,000 affiliated schools in India and across 24 other countries of the world.

CBSE affiliates all Kendriya Vidyalayas, all Jawahar Navodaya Vidyalayas, private schools and most of the schools approved by central government of India. The board conducts final examinations every spring for All India Senior School Certificate Examination (AISSCE) for Class 10 and 12.

Rise in sale of MBBS, BDS forms

More students have bought application forms for MBBS/BDS courses offered by the Tamil Nadu Dr. MGR Medical University this year.

In 10 days since forms began to be issued, the selection committee has sold as many as 31,687 forms, exceeding the number of forms sold last year. Forms will be sold till May 28.

As of Wednesday, around 3,000 candidates had submitted their forms, selection committee officials said. The last date for submission of filled forms is May 29.

This year, the State government expects to add 100 seats through a new college – the Omandurar Medical College, which is attached to Kasturba Gandhi General Hospital.

The Medical Council of India officials have said that they had recommended that the college be permitted to function as it had satisfied the MCI norms.

The Health Department had also sought to increase intake in three other colleges in the State but the MCI had denied permission during its earlier inspections. The Central government later provided funds to upgrade the facilities in the colleges but there is no information on their status yet.

The MCI is also silent on the status of ESIC Medical College, which had for two years admitted 100 students. In December, following an inspection the MCI had urged the college to rectify the deficiencies to permit admission of students.

Despite protests by the students and confirmation by the Central government that it will continue to run the ESIC medical colleges, MCI has remained reticent.

In the 10 days since forms began to be issued, as many as 31,687 forms have been sold

சிந்திக்க வைத்துவிட்டு போய்விட்டாயே அருணா

1800–ம் ஆண்டு இறுதியில் ஜெர்மன் நாட்டில் புகழ்பெற்ற தத்துவவாதியான பிரைடுரிச் நீட்ஷ் உதிர்த்த பல தத்துவங்கள் இன்றளவும் சமுதாயத்தை சிந்திக்க வைக்கும் கருத்துக்களாகவே இருக்கிறது. உலகில் பெருமையோடு வாழவழியில்லையென்றால், பெருமையோடு சாகவேண்டும் என்று அவர் அன்று சொன்னது, இன்று ஒரு விவாதத்துக்கு வழிவகுத்துவிட்டது. கருணைக்கு எடுத்துக்காட்டாக மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் 42 ஆண்டுகளாக 800 நர்சுகளின் அன்பான அரவணைப்பில் இருந்து, இப்போது இன்னுயிர் ஈத்த அருணா ஷென்பாக் என்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நர்சின் வாழ்க்கை உலகையே நெகிழவைத்துவிட்டது.

அதே மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்த சோகன்லால் பர்தா வால்மிகி என்ற காமப்பிசாசு, அருணா மாதவிலக்காக இருந்த நிலையிலும் அவரை நாயை கட்டும் சங்கிலியால் சத்தம் போடக்கூடாது என்பதற்காக கழுத்தில் கட்டி, பலாத்காரமாக இயற்கைக்கு மாறான முறையில் கற்பழித்தான். இதனால் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட பாதிப்பால் அருணா செயலிழந்த நிலையில், ஒரு மரக்கட்டைபோல படுத்துக்கிடந்த நிலைக்கு ஆளாகிவிட்டார். இந்த செயலை செய்த மாபாதகனுக்கு கற்பழிப்பு என்ற வழக்கு இல்லையாம். கொள்ளை, கொலை முயற்சி என்ற வகையில் வழக்குப்போட்டு, 7 ஆண்டுகள் தண்டனைக்குப்பிறகு சுதந்திர பறவையாக வெளியே வந்துவிட்டான்.

அருணாவை பெற்றோர், உற்றோர் கைவிட்டாலும், அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த நர்சுகள் ஒரு சிறு குழந்தையைப்போல நன்கு பார்த்துக்கொண்டனர். இடையில் அவரை கருணை கொலை செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, நர்சுகள் நாங்கள் பார்த்துக்கொள்வோம், அதை அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டதால், உச்சநீதிமன்றமும் அனுமதி அளிக்கவில்லை.

அருணாவின் சாவு நாட்டில் ஒரு விவாதத்தையே இப்போது உருவாக்கிவிட்டது. அருணாவை இத்தகைய கருணை கொண்ட நர்சுகள் கவனித்துக்கொண்டார்கள். ஆனால், இதுபோல உணர்வு இல்லாமல் உயிர்மட்டும் இருக்கும் அருணாக்களை நாட்டில் யார் பார்ப்பது?, பல நோயாளிகள் இதுபோல மூளைச்சாவு, அல்லது கோமா நிலையில் இருக்கும்போது டியூப் மூலம்தான் மூச்சு, டியூப் மூலம்தான் உணவு என்ற நிலையில் உயிர்மட்டும் இருக்குமே தவிர உணர்வு இருக்காது, நிச்சயமாக பிழைக்கவும்மாட்டார் என்ற நிலையில், இந்த வாழ்க்கையால் அவர்களுக்கும் பயனில்லை, மற்றவர்களுக்கும் பாடு என்கிறபோது, கருணைக்கொலை செய்துவிடுங்கள் என்று குடும்பத்தினர் சொல்கிறார்கள். ஆனால், யூதனேசியா அல்லது கருணைக்கொலை செய்வதற்கு இந்தியாவில் உள்ள சட்டங்களில் இடமில்லை. என்றாலும், கருணை சாவு அதாவது யூதனேசியா பாசீவ் என்ற நிலையில் மருத்துவமனைகளில் டாக்டர்கள் அறிவித்தபிறகு, 3 நிபுணர்கள் அறிக்கை தந்து, அதை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து உத்தரவைப்பெற்றால், அவர்களுக்கு செயற்கை முறையில் உடலை இயக்கும் அனைத்து இயக்கங்களையும் நிறுத்திவிட்டபிறகு உயிர்தானாகவே போய்விடும்.

ஊசிபோட்டு கருணை கொலைசெய்வதை வேண்டுமானால் அனுமதிக்கவேண்டாம். ஆனால், இதுபோல அவர்களுக்கும் பயனில்லாமல் உயிர்பிழைக்கவும் வாய்ப்பே இல்லாமல், அனைவருக்கும் இடையூறாக இருக்கும் இதுபோல உயிர்களை கருணை சாவு மூலம் வழியனுப்ப உள்ள நடைமுறைகளை எளிதாக்கவேண்டும். இப்போதும் இது மருத்துவமனைகளில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிழைக்க வழியில்லை என்று தெரிந்துவிட்டால் குடும்பத்தினரே வீட்டுக்கு எடுத்துச்செல்கிறோம் என்று கூறி எடுத்து சென்றுவிடுகிறார்கள். எனவே, அரசு இதை ஆழமாக விவாதித்து, கருணை கொலைவேண்டாம், கருணை சாவுக்கு எளிதான முறைகளுக்கான சட்டங்களை கொண்டுவரவேண்டும். வாழும்போதே கருணை சாவுக்கு அனுமதிகேட்கும் வகையில் உயில் எழுதவும் வழிவகுக்கவேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

Wednesday, May 20, 2015

கேள்விக் குறியாகும் மாணவர்கள் எதிர்காலம்: தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 2 ஆயிரம் செவிலியர் பள்ளிகள் - நடவடிக்கை எடுக்க நர்ஸிங் கவுன்சில் முடிவு


தமிழகத்தில் அரசு அங்கீகாரம் இல்லாமல் சுமார் 2 ஆயிரம் தனியார் செவிலியர் பள்ளிகள் இயங்குவதாக புகார் எழுந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற 175 செவிலியர் கல்லூரிகள், 187 செவிலியர் பள்ளிகள் உள்ளன. செவிலியர் கல்லூரியில் 4 ஆண்டு பிஎஸ்சி நர்ஸிங் படிப்பும், செவிலியர் பள்ளியில் மூன்றரை ஆண்டு டிப்ளமோ நர்ஸிங் படிப்பும் நடத்தப்படுகின்றன. இவற்றில் உள்ள இடங்கள் மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) நடத்தும் கவுன்சலிங் மூலம் நிரப்பப் படுகின்றன. அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் கல்லூரிகள், பள்ளிகள் மாநில அரசுக்கு ஒதுக்கிய இடங்கள் போக, எஞ்சிய இடங்களை தங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பிக்கொள்கின்றன.

இந்நிலையில், தமிழகம் முழுவ தும் சுமார் 2 ஆயிரம் தனியார் செவிலியர் பள்ளிகள் அரசு அங்கீகாரம் இல்லாமலேயே இயங்கிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற செவிலியர் பள்ளிகள், கல்லூரிகள் சங்கத் தலைவர் ஆர்.விவே கானந்தன், ஒருங்கிணைப் பாளர் எ.சிதம்பரம் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் சுமார் 2 ஆயிரம் தனியார் செவிலியர் பள்ளிகள் இயங்கு கின்றன. இங்கு குறுகிய கால செவிலியர் சான்றிதழ், டிப்ளமோ நர்ஸிங் போன்ற படிப்புகளை நடத்துகின்றனர். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள்தான் செவிலியர் படிப்பில் சேர முடியும். ஆனால், அரசு அங்கீகாரம் இல்லாத தனியார் செவிலியர் பள்ளிகள் 8, 10-ம் வகுப்பு படித்தவர்கள், பிளஸ் 2-வில் தோல்வி அடைந்தவர்களைக்கூட சேர்த்துக்கொள் கின்றன. விளம்பரங்களை நம்பி, இதுபோன்ற அங்கீகாரம் இல்லாத செவிலியர் பள்ளிகளில் பல மாணவ, மாணவிகள் சேர்ந்துவிடுகின்றனர். அங்கீகாரம் இல்லாத பள்ளி என்பது, படித்து முடித்த பிறகுதான் அவர்களுக்கு தெரியவருகிறது. இதனால், அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் தனியார் செவிலியர் பள்ளிகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இணையதளத்தில் விவரம்

தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழும (நர்ஸிங் கவுன்சில்) பதிவாளர் ஆனி கிரேஸ் கலைமதி கூறியதாவது:அரசு அங்கீகாரம் இல்லாமல் தமிழகத்தில் பல தனியார் செவிலியர் பள்ளிகள் இயங்குவதாக புகார்கள் வந்துள்ளன. இது பற்றி ஆலோ சனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த செவிலியர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படும் செவிலியர் பள்ளிகள் போலியானவை.

அங்கு படித்து முடித்தவர்களை செவிலியர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் பெற்றது போலிச் சான்றிதழாகும். தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சிலில் அவர்கள் பதிவு பெறவும் முடியாது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற செவிலியர் கல்லூரிகள், பள்ளிகள் விவரம், தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் இணையதளத்தில் (http://www.tamilnadunursingcouncil.com) வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இதை பார்த்து தெரிந்துகொண்டு, தாங்கள் படிக்கப் போகும் செவிலியர் பள்ளி அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதை நன்கு உறுதி செய்த பிறகே, படிப்பில் சேர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாஸ்போர்ட் பெற நேர்முகத் தேர்வுக்கான காலஅவகாசம் 20 நாளில் இருந்து 4 நாளாக குறைப்பு - மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

கோப்புப் படம்: சிவ சரவணன்

புதிதாக பாஸ்போர்ட் பெற நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 100-இல் இருந்து 2 ஆயிரத்து 550 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேர்முகத் தேர்வுக்கான முன் அனுமதி பெறுவதற்கான கால அவகாசம் 20 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக செல்பவர்கள் பாஸ்போர்ட் எடுக்க மேற்கண்ட நகரங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கின்றனர்.

இவர்களில் சிலருக்கு விண்ணப்பித்த உடனே பாஸ்போர்ட் கிடைப்பதில்லை. அவ்வாறு விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்க முன்கூட்டியே அனுமதி (அப்பாயின்ட்மென்ட்) பெற வேண்டும். இந்த அனுமதி ‛ஆன்-லைன்’ மூலமாகத்தான் பெற வேண்டும். இந்நிலையில், முன் அனுமதி கிடைப்பதற்கான கால அவகாசம் 20 நாளில் இருந்து 4 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் ‛தி இந்து’விடம் கூறியதாவது:

பல்வேறு தேவைகளுக்காக பாஸ்போர்ட் கோரி தினம்தோறும் நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். சிலர் நாங்கள் கேட்கும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து குறிப்பிட்ட காலத்திற்குள் பாஸ்போர்ட் பெற்று விடுகின்றனர். ஆனால், சிலர் உரிய ஆவணங்கள் சமர்ப்பிப்பது இல்லை. அல்லது விண்ணப்பத்தை தவறாக பூர்த்தி செய்வது, விண்ணப்பத்தை பெறும் அலுவலர் அதை சரியான முறையில் பரிசீலனை செய்யாதது மற்றும் காவல்துறை விசாரணையில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் அவர்களுக்கு பாஸ்போர்ட் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை.

இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் ‛சமூக தணிக்கைப் பிரிவு’ (Social Audit Cell) என்ற பெயரில் புதிய தகவல் உதவி மையம் அண்மையில் தொடங்கப்பட்டது. இதன் மூலம், பொதுமக்களின் குறைகள் உடனடியாக கண்டறியப்பட்டு தீர்வு காணப்படுவதால் விரைவாக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களுக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 100 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்து 550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், நேர்முகத் தேர்வுக்கான முன் அனுமதி பெறுவதற்கான கால அவகாசம் 20 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைந்துள்ளது. எனவே, பொதுமக்கள் எவ்வித சிரமும் இன்றி விரைவாக பாஸ்போர்ட் பெற முடியும்.

இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

ஆபத்தில் முடிந்த அழகுக்கான சிகிச்சை: ஓர் உஷார் ரிப்போர்ட்!


டல் எடையை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட சிகிச்சை விபரீதமாகி ஒரு பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் அழகுக்கலை நிபுணர்களை தேடிச் செல்லும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை, வள்ளுவர்கோட்டம் கக்கன் காலனியை சேர்ந்தவர் கவுரிசங்கர். இவரது மனைவி 35 வயதான அமுதா. இவர்களுக்கு விக்னேஷ், விஜய் என்ற 2 மகன்கள் உள்ளனர். அமுதா சற்று குண்டாக இருந்ததால், தனது உடல் எடையை குறைக்கவேண்டும் என்று விரும்பி, தியாகராயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகி உடல் எடையை குறைப்பது தொடர்பான ஆலோசனையை கேட்டுள்ளார்.

''எளிய அறுவை சிகிச்சை மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்தை பெறலாம்" என்று மருத்துவர்கள் ஆலோசனை தர, 'தான் அழகாகப் போகிறோம்' என்று கனவு கண்டுகொண்டு திருப்தி அடைந்த அமுதா அறுவை சிகிச்சைக்கு சம்மதித்துள்ளார்.
இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமுதாவுக்கு திடீரென்று வயிற்றில் அதிக வலி ஏற்பட, மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

பரிசோதித்த மருத்துவர்கள், 'ஏற்கனவே நடந்த அறுவை சிகிச்சையால் வயிற்றின் உட்பகுதியில் சில இடங்களில் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், மீண்டும்  ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூற, அமுதாவுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை நடந்ததாகவும், அதன் பின்னரும் அவருக்கு வயிற்று வலி குறையாமல், தொடர்ந்து அவதிப்பட்டு வர, மீண்டும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்ததாகவும், மீண்டும் அவருக்கு அங்கே அறுவை சிகிச்சை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

சிகிச்சைக்கு பின்னர் சில நாட்கள் கழித்து வீடு திரும்பிய அமுதாவுக்கு மீண்டும் வயிற்றுவலி அதிகமாக , அவரது கணவர் மற்றும் உறவினர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு அமுதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு அவரது உடலில் நுரையீரல் மற்றும் குடல் பகுதி பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அமுதா வீடு திரும்பினார்.

தொடர் அறுவை சிகிச்சையால் உடல் பாதிக்கப்பட்ட அமுதா எதிர்பாராதவிதமாக ஒருநாள் கோமா நிலைக்கு தள்ளப்பட்டு படுக்கையில் விழுந்தார். அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து, இப்படி படுத்த நிலையில் அவர் சிகிச்சை பெறுவதை எண்ணி அமுதாவின் உறவினர்கள் வேதனை அடைந்தனர். இதனிடையே நாளுக்கு நாள் அவர் தேகம் மெலிந்து, உருக்குலைந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அமுதாவின் இந்த நிலைமைக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என்று கூறி அவரது கணவர் கவுரிசங்கர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கு, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், தவறான சிகிச்சை அவரது இந்த நிலைக்கு காரணமல்ல என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி அமுதாவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து, அவர் பிரபல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அமுதா பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து, அமுதாவின் உடல் நேற்று பிற்பகலில் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கே, பிணவறை முன்பு அமுதாவின் கணவர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் (தென்சென்னை) ஆதரவு அளித்தனர். 

இதுகுறித்து பேசிய அமுதாவின் கணவர் கவுரிசங்கர், ''எனது மனைவியின் சாவுக்கு மருத்துவமனையின் தவறான சிகிச்சையே காரணமாகும். அதற்கான சாட்சியங்கள் என்னிடம் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கைது செய்யப்பட வேண்டும். எங்களுக்கு நியாயம் வேண்டும்" என்றார் கண்ணீரோடு.

 - சா.வடிவரசு

தமிழக வரலாற்றில் முதல் முறையாக பள்ளிக்கல்வித்துறையின் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஒ.9001 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. .

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தமிழாய்வாளர் முனைவர். நா.அருள்முருகன் அவர்களின் உணர்வாற்றல் மிகவும் போற்றத்தக்கது. ஆசிரியர்களின் உணர்வும் அவரின் உணர்வும் சமக்கோட்டில் பயணிக்கும் காணவியலாப் பேருண்மையை நீங்கள் புதுக்கோட்டையில் காணலாம். புன்னகையால் பணிஏவல் புரியும் உன்னதப்பாங்கினை புதுக்கோட்டை தலைமைப்பண்பில் கண்டு நீங்கள் மகிழ்வடையலாம்.


தொழில்நுட்பப் பயன்பாட்டின் காலத்தேவையை உணர்ந்தவர் ஐயா அருள்முருகன் அவர்கள். மின்னாளுமையின் மேன்மை இயக்கம் புதுக்கோட்டை பள்ளிகளை உள்ளங்கையில் அடக்கியது. முதன்மைக்கல்வி அலுவலகத்தின் வழி சற்றேறக்குறைய அனைவருக்கும் மறந்துவிட்ட்து. எனலாம். காரணம் அங்கு யாரும் செல்வதில்லை. எல்லாம் பள்ளியிலிருந்தவாறே முடிந்துவிடுகிறது. நேர்மையின் தாக்கம் எங்கும் மணம் வீசுகிறது. வெளிப்படையான தன்மை உண்மையின் உரைகல்லாய் எழுந்து நிற்கிறது.


மேனிலைப்பள்ளியின் மூத்த தலைமையாசிரியரும் கடைக்கோடி இளைய ஆசிரியரும் சந்திப்பதில் பொதுத்தன்மையே இங்கு நிலவுகிறது. பணித்தீண்டாமை இங்கு ஒழிக்கப்பட்டு விட்ட்து. பணிநிலை ஏற்றத்தாழ்வுகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வெகு நாளாகிவிட்ட்து. அனைவரும் யாரும் சொல்லாமலேயே உழைக்கிறார்கள். ஆணையால் பிணைக்கப்படாமல் இயல்பாகவே தம்கடமையுணர்ந்து கற்பிக்கிறார்கள்.


ஆய்விற்குப் போகும் ஐயாவின் வகுப்பறைச் சந்திப்புகளிலெல்லாம் மாணாக்கரின் வறுமை விவாதிக்கப்படும். அறியாமையின் விரிசலில் வீழ்ந்திவிடாதிருக்கும் மனபலம் உள்புகுத்தப்படும். சமுதாயச் சமநோக்கின் வல்லமை உறுதியாக்கப்படும். இங்கு சிரித்த உதடுகளாய் ஆசிரியரும் மாணாக்கரும் வலம் வருவதே ஐயாவின் தலைமைத்துவத்திற்குச் சான்று.


நிருவாகத்திலும் கல்விமேலாண்மையிலும் சமக்கோட்டுத் தத்துவத்தின் பேராண்மையையே அவர் கையாள்வதுண்டு. இதன் நீளல், பேசப்படும் உயர்வை அவரையும் அறியாமல் அவருக்கு அளித்திருக்கிறது. கல்விப்பாடங்களில் கணினித் திரையைப் புகுத்திய அவரால் அலுவலக ஆவணங்களிலும் அந்நுண்ணாளுமையைப் புகுத்தியதை வியக்கும் விழிகளோடு பல உயரலுவலர்கள் பார்த்துப் பாராட்டியுள்ளார்கள்.


மறுமுனையில் தமிழ்த் தடயங்களைத் தேடியலைந்து தமிழ்த்தொன்மையை மீட்டெடுக்கும் பேரவா அவரின் ஆய்வறிவின் ஆழத்தை உணர்த்துவதோடு பணிப்பளுவை எதிர்கொள்ளும் போர்த்தந்திரத்தையும் அனைவருக்கும் உணர்த்தியது.


தமிழக வரலாற்றில் இன்று ஒரு பேரின்பத் திறவுகோல். பள்ளிக்கல்வித்துறையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஒ.9001 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இது அவரின் உயருழைப்பிற்குக் கிடைத்த நற்சான்று. அனைத்து ஆசிரியப் பெருமக்களும் இவ்வரிய பணிநேர்த்திக்காக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.


இத்தருணத்தில் அவரின் தமிழாழத்தையும், தலைமைத்துவ கூராளுமையையும் அன்பு உணர்வினால் ஆளும் பணிநேர்த்தியினையும் தமிழகத் தமிழாசிரியர் கழகம் போற்றி வணங்குகிறது.


அவர் எங்கு பணிபுரினும் தம் தனியாள்கையினால் மிகச் சிறப்பான உயரிடத்தைத் தக்க வைப்பார் என்பதில் இருவேறு கருத்தில்லை.


புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு உயரிய சிறப்பினைப் பெற்றுத்தந்த ஐயா. முனைவர். நா. அருள்முருகன் அவர்களைப் போற்றி வாழ்த்துவதில் புதுக்கோட்டை மாவட்டம் பேருவகை அடைகிறது.


- சி.குருநாதசுந்தரம், மாவட்டச்செயலர்.தமிழகத் தமிழாசிரியர் கழகம் ,புதுக்கோட்டை

சி.பி.எஸ்.இ., ரிசல்ட் தாமதம்: மாணவ, மாணவியர் குழப்பம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து, அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

தவிப்பு:

ஆண்டுதோறும், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே மூன்றாவது வாரத்திலும், பிளஸ் 2வுக்கு, மே நான்காவது வாரத்திலும் வெளியாகும். இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை, மே 19ம் தேதி; பிளஸ் 2வுக்கு மே, 29ம் தேதியும் வெளியிட, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், திட்டமிட்டபடி நேற்று, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால், மாணவர் மற்றும் பெற்றோர், நேற்று காலை முதல், சி.பி.எஸ்.இ., அலுவலகத்தில் விசாரித்தபடி இருந்தனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, 'திட்டமிட்ட தேதியை தாண்டிவிட்டதால், எப்போது வேண்டுமானாலும் வெளியாகும். மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான, http://cbseresults.nic.in பார்த்து தெரிந்து கொள்ளலாம்' என்றனர். ஆனால், சி.பி.எஸ்.இ., 'ரிசல்ட்ஸ்' என்ற பெயரில், பல போலி இணையதளங்களும் உருவாகியுள்ளன. இவற்றில் தேர்வு முடிவுகள், 21ல் வெளியாகும் என்றும், 25ல் வெளியாகும் என்றும், பலவித தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர் குழப்பம் அடைந்துள்ளனர். சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளும் தாமதமாகியுள்ளதால், உயர்கல்விக்கு எங்கே விண்ணப்பிப்பது என்று தெரியாமல், மாணவ, மாணவியர் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில், வரும், 29ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வாங்கி, சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு இன்னும், குறுகிய காலமே உள்ளது.

எந்த கல்லூரியில்...:

இதேபோல், தமிழகத்தில் பல, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கும் பணிகளே முடிந்துவிட்டன. இதனால், ஐ.ஐ.டி., மற்றும் நிகர்நிலைப் பல்கலைகளில் சேர திட்டமிடாத சி.பி.எஸ்.இ., மாணவ, மாணவியர், எந்த கல்லூரியில் என்ன படிப்பில் சேர்வது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

அண்ணா பல்கலை வசதி:

'சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவுகள் தாமதமாகும் பட்சத்தில், அண்ணா பல்கலை கவுன்சிலிங் மூலம், படிக்க விரும்புவோர், விண்ணப்பம் தாக்கல் செய்ய காத்திருக்க வேண்டாம்' என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறும்போது, ''விண்ணப்பங்களை தாக்கல் செய்ய மே, 29ம் தேதி கடைசி நாள். சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு முடிவு தாமதமானால், அவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள், தங்கள் விண்ணப்பங்களை மதிப்பெண் குறிப்பிடாமல், தாக்கல் செய்து விடலாம். பின், ரேண்டம் எண் உருவாக்கும் முன், மதிப்பெண் சான்றிதழ் விவரங்களை, விண்ணப்ப எண்ணுடன் குறிப்பிட்டு, கூடுதலாகத் தாக்கல் செய்யலாம்,'' என்றார்.

- நமது நிருபர் -

சொந்த ஊரில் பணிபுரிந்தால் எல்.டி.சி., சலுகை கிடையாது

புதுடில்லி: மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஒவ்வொரு ஆண்டும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வர, எல்.டி.சி., எனப்படும், விடுமுறை கால பயணச் சலுகை வழங்கப்படுகிறது. இதன்படி, வெளியூர்களில் பணியாற்றும் ஊழியர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்கான விடுப்பு, அதற்கு ஆகும் பயணச் செலவு போன்றவற்றை பெற முடியும். இந்நிலையில், தங்கள் சொந்த ஊரில், தலைமை அலுவலகம் அல்லது பணியாற்றும் அலுவலகங்களை உடைய மத்திய அரசு ஊழியர்கள், இனி, எல்.டி.சி., சலுகையை பெற முடியாது என, மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரத்தில், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியம் என்பதால், அங்கு சென்று வரும் மத்திய அரசு ஊழியர்கள், எல்.டி.சி., சலுகையை அனுபவிக்கலாம் என, சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால், பல ஊழியர்கள் இந்தப் பகுதிகளுக்கு பயணித்து, எல்.டி.சி., சலுகை பெற்று வந்தனர். தற்போது, அந்த சலுகையும் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. இதனால், பல ஊழியர்கள் இந்தப் பகுதிகளுக்கு பயணித்து, எல்.டி.சி., சலுகை பெற்று வந்தனர். தற்போது, அந்த சலுகையும் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்பதில் பிரச்னையில்லை: சுப்பிரமணியன் சுவாமி

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பதில் பிரச்னையில்லை என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் முடிவுக்காக காத்திருக்கிறேன். அம்மாநில அரசு எந்த முடிவை எடுத்தாலும் நான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். பாஜக ஜனநாயகக் கட்சி. ஆகவே அதில் கருத்துக்கூறும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. ஜெயலலிதாவை நன்கு தெரிந்தவர் என்ற ரீதியிலே பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவதே கட்சி கருத்தாகும். ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

திமுக தலைவர் கருணாநிதியை நம்பமுடியாது. பாஜகவுடன் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமைய சாத்தியமில்லை. ஜெயலலிதாவுக்கு பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிர்பந்தம் உள்ளது. பாஜக தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு வலிமை பெற்றுள்ளது. திமுக, அதிமுக ஆட்சியின் அவலத்தைக் கண்டு அதிருப்தியடைந்த மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றார்.

14 கல்வி நிறுவனங்களுக்கு "ஏ' கிரேடு தரச் சான்றிதழ்

தமிழகத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம், வண்டலூர் தாகூர் பொறியியல் கல்லூரி, கேளம்பாக்கம் செட்டிநாடு பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 14 கல்வி நிறுவனங்களுக்கு "ஏ' கிரேடு தரச் சான்றிதழை மத்திய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார அமைப்பு (நாக்) வழங்கி உள்ளது.
ஜஸ்பால் சந்து தலைமையிலான குழு, நாடு முழுவதும் உள்ள 275 கல்வி நிறுவனங்களில் தர மதிப்பீடு ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டது.
இதில் சென்னை பாரதி மகளிர் கல்லூரி, பேட்ரீசியன் கலை அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம் ஆதி பராசக்தி பொறியியல் கல்லூரி, ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி, திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி உள்ளிட்ட 14 கல்வி நிறுவனங்களுக்கு "ஏ' கிரேடு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாகூர் பொறியியல் கல்லூரி முதல்வர் பி.காசிநாத பாண்டியன் கூறியதாவது:
"ஏ' கிரேடு தரச் சான்றிதழ் பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து திறன்சார் பயிற்சி நடத்துவதற்கான நிதி பெறும் தகுதியைப் பெற்றுள்ளன.
பயிற்சி வகுப்புகள் தொடங்கும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு தேசிய திறன்சார் தகுதி மேம்பாட்டு மையம் பரிந்துரையின்படி நிதி வழங்க முடிவு செய்துள்ளது. திறன்சார் பயிற்சி வகுப்புகள் தொடங்க விரும்பும் "ஏ' கிரேடு தரச் சான்றிதழ் பெற்ற கல்வி நிறுவனங்கள் தாங்கள் சார்ந்த பல்கலைக்கழகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது' என்றார்.

ஜூன் 28-ல் அரசு செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வு

தமிழக அரசு மருத்துவமனைகளில் 7243 செவிலியர் நிமயனத்துக்கான தகுதித் தேர்வு ஜூன் 28-ஆம் தேதி நடைபெறும் என மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய ஐந்து இடங்களில் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும்.இது குறித்த கூடுதல் விவரங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Honour for Jipmer nurse

Kalpana Sampath, Assistant Nursing Superintendent, JIPMER Hospital, Puducherry received the National Florence Nightingale Award from President Pranab Mukherjee at Rashtrapati Bhavan in New Delhi recently.Photo: Special Arrangement
Kalpana Sampath, Assistant Nursing Superintendent, JIPMER Hospital, Puducherry, has been honoured with National Florence Nightingale Award on the occasion of International Nurses Day organised recently at the Rashtrapati Bhavan, New Delhi.

Ms. Sampath was among the 35 nursing professionals in India who were presented awards by President Pranab Mukherjee.

Award

The award carries Rs. 50, 000 cash, a certificate, a citation certificate and a medal.

The National Florence Nightingale Awards were constituted by the Ministry of Health and Family Welfare, Government of India, in 1973 as a mark of recognition for the meritorious services of nurses. International Nurses Day is celebrated to mark the birth anniversary (May 12, 1820) of Florence Nightingale, founder of modern nursing.

In her over three decades of service in the nursing profession, she spent 11 years in the Indian Army working in insurgency-hit J & K. At the time of Operation Blue Star and later, during the 1984 riots, she worked for mass emergencies.

Served during natural calamities

She has also served people affected by tsunami in 2004 and Cyclone Thane in 2012. She is a member of the Patient Safety Committee, the Quality Council, Fire Safety and the Transplant Unit at JIPMER Hospital.

Among her notable contributions has been the authoring of a Tamil-to-English educational module for learning Tamil language which is used by patients and professionals. Subash Chandra Parija, JIPMER Director and Trained Nurses Association of India (TNAI) were among those who felicitated Ms. Sampath on her achievement.

Not appealing may send out wrong message: Acharya

Special Public Prosecutor’s advice to Karnataka

Failure to file appeal in the Supreme Court against the Karnataka High Court’s verdict of acquitting AIADMK general secretary Jayalalithaa may be construed as “an act of encouraging corruption at high places,” Special Public Prosecutor B.V. Acharya is learnt to have advised the Government of Karnataka.

According to the sources privy to the discussions about future course of action of the State government, Mr. Acharya, in his legal opinion, recommended the authorities to take “immediate” action to file appeal before the apex court and seek stay on operation of the High Court’s verdict.

Also, the sources said, the SPP had pointed out that filing of appeal before the apex court would send a “strong signal” to society that the government is committed to the principles of “zero tolerance” towards corruption in public administration.

The political circles in Tamil Nadu are keeping their fingers crossed awaiting Karnataka government’s decision whether to file appeal against High Court’s verdict.

Karnataka is the sole prosecuting agency in the DA case as declared by the Supreme Court following transfer of the case to Karnataka from Tamil Nadu.

SPP’s analysis

The sources also said that pointing out the “grave mistake” committed by the High Court in totalling the loans obtained by accused in the DA case, Mr. Acharya has termed this error has resulted in “miscarriage of justice.”

The High Court, the SPP said to have pointed out, had “overlooked” the principles to be followed while reversing the findings of the trial court.

He is also learnt to have claimed that the findings of the trial court “stand undisturbed” as the High Court did not discuss about many of their assets except valuation of buildings, marriage expenses aspects, and to a small extent about a few sources of income of the accused.

Besides, the SPP was learnt to have pointed out that the High Court did not fully comply with the Supreme Court’s direction for considering the written submissions filed by Karnataka government.

10¾ லட்சம் மாணவ–மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு நாளை வெளியீடு


சென்னை,



10¾ லட்சம் மாணவ–மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு நாளை(வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது.

நாளை வெளியீடு

பள்ளிக்கூட மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியதாக எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு விளங்குகிறது. அத்தகைய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் 19–ந்தேதி முதல் ஏப்ரல் 10–ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் புள்ளிவிவர மையத்தில் பதிவு செய்யப்பட்டு ஒரு முறைக்கு பல முறை மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஏற்கனவே அறிவித்தார். அதன்படி நாளை காலை 10 மணிக்கு டி.பி.ஐ.வளாகத்தில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிடுகிறார்.

மாணவ–மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in

கலெக்டர் அலுவலகங்கள்

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளிக்கூட மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கூடங்களிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

29–ந்தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

ஜூன் 4–ந்தேதி முதல் பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேவைப்பட்டால் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவும் கடந்த ஆண்டை விட 2 நாட்களுக்கு முன்னதாக வெளியாகின்றன.

நர்சுகளுக்கு தனி பல்கலைக்கழகம்


தமிழ்நாட்டில் எந்த அரசு பணி என்றாலும், வேலைக்கு ஆள் எடுக்க அறிவிப்பு வந்தால்போதும், ஆயிரக்கணக்கான என்றநிலை மாறி, லட்சக்கணக்கில் படித்து முடித்து வேலை இல்லாத இளைஞர்களும், இளம்பெண்களும் விண்ணப்பம் செய்கிறார்கள். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், அரசு துறைகளில் இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர், வரித்தண்டலர் போன்ற பணிகளுக்கு 4,963 பேர்கள் எடுக்கிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டவுடன், அதற்கான தேர்வை எழுத 12 லட்சத்து 72 ஆயிரத்து 293 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதுபோல, தமிழ்நாடு காவல்துறையில் 1,078 சப்–இன்ஸ்பெக்டர் பணிக்காக நடக்கப்போகும் தேர்வுக்கு, ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இப்போது தமிழக அரசின் மருத்துவசேவைகள் தேர்வு வாரியத்தின் சார்பில் 7,243 ஒப்பந்த அடிப்படையிலான நர்சுகளை தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக அறிவிப்பு வந்துள்ள நிலையில், ஏறத்தாழ 40 ஆயிரம் விண்ணப்பங்களே வந்துள்ளன. இதில் நிச்சயமாக பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்பவர்களாக இருப்பார்கள். ஆக, நர்சு வேலைக்கு படித்தவர்களில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகம் இல்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

தமிழக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டேபோகிறது. இந்த மருத்துவமனைகளில் எல்லாம் டாக்டர்களின் எண்ணிக்கையைவிட, நர்சுகளுக்கு அதிக கிராக்கி இருக்கிறது. வெளிமாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் எளிதில் வேலைவாய்ப்பு பெறமுடியும். இதுமட்டுமல்லாமல், அரபு நாடுகள் உள்பட வெளிநாடுகளிலும் உள்ள மருத்துவமனைகளில் நல்ல சம்பளத்துடன் இந்திய நர்சுகள் என்றால் கருணை உணர்வுமிக்கவர்கள், பிளாரன்சு நைட்டிங்கேல் போல ஒளிவிளக்கு பெண்மணியாக, வெண்ணிற ஆடை தேவதைகளாக அன்னை தெரசா போல இருப்பார்கள் என்ற எண்ணத்தில், நோயாளிகளை காக்கும் கரங்களாக திகழ்வார்கள் என்று முன்னுரிமையை அவர்களுக்கே கொடுக்கிறார்கள். கேரளாவில் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, அந்த மாநிலத்தில் நர்சு படிப்பு படித்தவர்களை வழிகாட்டி, நல்ல ஊதியத்தோடு வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப உதவுகிறார்கள். இப்போது மத்திய அரசாங்கம், தமிழக அரசுக்கு சொந்தமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் உள்பட 3 நிறுவனங்களை மட்டும் வெளிநாடுகளில் நர்சு வேலைக்கு தேர்வு செய்வதற்காக அங்கீகாரம் அளித்துள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட மற்றொரு நிறுவனம் கேரள அரசுத்துறையைச் சேர்ந்தது. தமிழக அரசின் நிறுவனம் இந்த நல்லவாய்ப்பை நழுவவிடாமல், அயல்நாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் தமிழக நர்சுகளை அனுப்புவதில் மும்முரமாக ஈடுபடத்தொடங்கவேண்டும்.

தமிழக நர்சுகள் அன்பானவர்கள், இரக்கமுள்ளவர்கள், கருணை, தியாக உணர்வுமிக்கவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை. ஆனால், அவர்களின் பணித்திறமை ஒளிரும் வகையில் நவீனகாலத்தில் உள்ள நோய்கள், அதற்கான சிகிச்சைமுறைகளுக்கேற்ப அவர்களின் பாடத்திட்டங்கள், செயல்முறைகள் மேம்படுத்தப்படவேண்டும். இதற்கு வசதியாக இப்போது தமிழ்நாட்டில் உள்ள 169 நர்சிங் கல்லூரிகளையும் உள்ளடக்கி நர்சிங் படிப்புக்காக மருத்துவ பல்கலைக்கழகம் போல, நர்சிங் பல்கலைக்கழகம் தொடங்கவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும். இதே கோரிக்கையை தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், அரசுக்கு விடுத்து அதுதொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. மருத்துவம், என்ஜினீயரிங், வேளாண்மை, சட்டம், கால்நடை, மீன்வளம், ஆசிரியர் படிப்புகளுக்கு தனி பல்கலைக்கழகம் இருப்பதுபோல, நர்சிங் படிப்புக்கும் தனி பல்கலைக்கழகம் வேண்டும்.

Tuesday, May 19, 2015

தலைமை வழக்கறிஞர் பரிந்துரை: ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு - 21-ம் தேதி கர்நாடக அரசு முடிவு

சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்' என மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார் அம்மாநில அரசுக்கு நேற்று பரிந்துரை செய்தார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், நால்வரையும் கடந்த 11-ம் தேதி விடுதலை செய்தது. நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வழங்கிய இந்த தீர்ப்பில் பல்வேறு பிழைகள் இருப்பதாக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா உட்பட பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
'ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மேல்முறையீட்டுக்கு தகுதி யானது' என கர்நாடக அரசுக்கு ஆச்சார்யா, கடந்த 14-ம் தேதி 3 பக்க கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் ரவி வர்ம குமார் கர்நாடக சட்டத்துறை அமைச்ச ருக்கு நேற்று 6 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அனுப்பினார். அதில் “சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் மேல்முறையீடு செய்வதற் கான சட்ட ரீதியான சாத்தியக் கூறுகள் நிறைய இருக்கின்றன.
வழக்கில் கர்நாடக அரசை சேர்க்காமல் விசாரணையை முடித்தது, அரசு வழக்கறிஞரை வாதிட அனுமதிக்காதது, ஜெய லலிதா தரப்பு வாங்கிய கடனின் கூட்டுத் தொகை, அரசு தரப்பு சாட்சி யங்களை பரிசீலிக்காதது உள் ளிட்ட பல்வேறுபிழைகள் இருக் கின்றன. எனவே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறை யீடு செய்யலாம்” என குறிப் பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து கர்நாடக‌ சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திரா நேற்று சட்ட நிபுணர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் தலைமை செயலர் கவுசிக் முகர்ஜி, சட்டத் துறை செயலர் சங்கப்பா, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ரவி வர்ம குமார், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா உட்பட குற்றவியல் வழக்குகளில் அனுபவம் வாய்ந்த 10 மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சட்ட அமைச்சகம் சார்பாக மேல்முறை யீடு செய்ய வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு பரிந்துரை வழங்க முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே வரும் 21-ம் தேதி கர்நாடக‌ முதல்வ‌ர் சித்தராமையா தலைமையில் அம்மாநில அமைச் சரவை கூட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தில் கர்நாடக உயர் நீதிமன்றத் தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய் வது குறித்து முடிவெடுக்கப்படும்.

மகப்பேறு விடுப்புக்கான நெறிமுறைகள்: தமிழக அரசு சுற்றறிக்கை!

சென்னை: அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக்கான நெறிமுறைகள் பற்றி தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிப்பதில் பல்வேறு சந்தேகமும் குழப்பங்களும் நிலவி வருகிறது. அதைத் தீர்க்கும் வகையில் துறைச் செயலாளர்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் (பயிற்சி) முதன்மைச் செயலாளர் அனிதா பிரவீன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், ''அரசு பெண் ஊழியர்கள் ஆறு மாதத்துக்கு பேறுகால விடுப்பு அளிக்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக இருந்தால் இந்த விடுப்பைப் பெறலாம். தற்காலிகமாக பணியாளருக்கு நிபந்தனைகளின்படி விடுப்பு தரப்படும்.

கரு முன்னதாக கலைந்துவிட்டால், அவர்களுக்கு சராசரி ஊதியத்துடன் ஆறு வாரங்களுக்கு விடுப்பு தரப்படும். பேறுகால விடுப்பு, 12 வாரம் முதல் 20 வாரங்கள் வரை இருக்க வேண்டும். பிறக்கும்போது குழந்தை இறந்தால், அவர்களுக்கு 90 நாள்கள் வரை விடுப்பு தரலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.

கைவிலங்கிடப்பட்ட கைதியுடன் ஹாயாக சினிமா பார்த்த இன்ஸ்பெக்டர்!

விழுப்புரம்: கைதியுடன் இணைந்து சினிமா பார்த்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உள்ளிட்ட மூன்று பேரை விழுப்புரம் எஸ்.பி. சஸ்பெண்ட் செய்துள்ளார்.

விழுப்புரம் நகரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளிவந்த 36 வயதினிலே படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை, இந்த திரைப்படத்தின் இரவு காட்சிக்கு, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், 3 போலீசார் கைதி ஒருவரை கைவிலங்கிட்டு சினிமா தியேட்டருக்கு அழைத்து வந்திருக்கின்றனர். அந்த கைதியை போலீஸ் ஜீப்பிலேயே போலீசார் தியேட்டருக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.

ஆனால், படம் தொடங்கி அரைமணி நேரத்துக்கு மேலாகி இருந்தது. அப்படியும் 4 போலீசாரும், கைவிலங்கிடப்பட்ட கைதியுடன் அமர்ந்து சினிமா பார்க்க தொடங்கினார்கள். போலீசாரில் இன்ஸ்பெக்டர் மட்டும் சீருடையில் இருந்தார். மற்றவர்கள் சாதாரண உடையில் இருந்தனர். கைவிலங்கிட்ட கைதியை பார்த்ததும் சினிமா பார்க்க வந்தவர்களின் கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது. இதனால், சிறிது நேரம் தியேட்டரில் சலசலப்பு நிலவியது.

முழுப் படத்தையும் கைதியுடன் அமர்ந்து பார்த்துவிட்டு சென்ற போலீசார் அனைவரும் விழுப்புரம் டவுன் போலீஸ் நிலையத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இரவு ரோந்து பணிக்கு சென்ற அவர்கள், அந்த பணியை செய்யாமல் கைதியுடன் தியேட்டருக்கு வந்து சினிமா பார்த்து உள்ளனர்.

இது குறித்து சில தியேட்டர் ஊழியர்கள் கூறும்போது, ''இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசார், இதுபோல் தியேட்டருக்கு வந்து சினிமா பார்த்து செல்வது வழக்கம்தான். அவர்கள் டிக்கெட் வாங்கமாட்டார்கள். மேலும், திரைப்படத்தின் இடைவெளியின்போது நொறுக்கு தீனி, காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றை அவர்களுக்கு நாங்களே எடுத்து சென்று ஓசியில் வழங்குவோம்" என்றனர்.

அந்த காவல் நிலைய காவலர் ஒருவர் இதுகுறித்து கூறும்போது, ''அந்த கைதி யார் என்பது பற்றி கூற முடியாது. ஆனால், கைதியை தியேட்டருக்கு அவர்கள் அழைத்து செல்வதற்கு எந்த முன்அனுமதியும்  பெறவில்லை. இதேபோல், போலீஸ் வாகனத்தை எடுத்து செல்வதற்கும் அவர்கள் அனுமதி பெறவில்லை. போலீசார் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்நிலையில், கைதியை கைவிலங்குடன் தியேட்டருக்கு அழைத்து சென்று சினிமா பார்த்த சம்பவம் தொடர்பாக, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உள்பட மூன்று பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.

'நினைத்தது நடக்கும்...எந்த சிக்கலும் இல்லை!'- ஜெ. ஆவேசம்

சென்னை: என்னை வீழ்த்த நினைத்தவர்கள் ஒருபோதும் வென்றதில்லை என்றும், கட்சியினர் நினைத்தது குறித்த நேரத்தில் நடக்கும் என்றும், இதை யாராலும் தடை செய்ய முடியாது என்றும்  அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்,  " அதிமுக தலைமையின் மீது மிகுந்த பாசமும், அன்பும் கொண்ட கட்சியினர் எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் நம்பிக்கையோடும், மன உறுதியோடும் செயல்பட வேண்டும் என பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அரசியல் எதிரிகள் கட்சியின் வளர்ச்சியைக் கண்டும், வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேருவதைக் கண்டும் பொறாமை கொண்டவர்களாக பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
வீழ்த்த நினைத்தவர்கள் வென்றதில்லை: என்னை வீழ்த்த நினைத்தவர்கள் ஒருபோதும் வென்றதில்லை. பொய்ச் செய்திகளையும், பொருளற்ற வதந்திகளையும் பரப்பி, அதன் மூலமாவது அரசியல் மறுவாழ்வு பெற்றுவிட முடியுமா என முயற்சிக்கும் வீணர்கள் நமக்கு எதிராக தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். இவற்றையெல்லாம் புறந்தள்ள வேண்டும்.
அனைத்து சோதனைகளையும் கடந்து வெற்றி முகட்டில் நாம் நிற்கின்ற நேரமிது. மகிழ்ச்சியும், பெருமிதமும் பொங்க, ஆனந்தத்துடன் வெற்றி விழா கொண்டாடும் காலமிது. சட்டத்தின் ஒழுங்குகளையும், வழிகாட்டும் நெறிகளையும் மதித்து அவற்றின்படி நம்முடைய அரசியல், ஆட்சி, நிர்வாக நடவடிக்கைகள் அமைய வேண்டும். அப்படித்தான் எப்போதும் நாம் செயல்பட்டு வந்திருக்கிறோம்.
எனவேதான், அடுத்தடுத்து நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஒருதிட்டமிட்ட கால அட்டவணைப்படி நடைபெற்று வருகின்றன. அதில் எந்தக் குழப்பமும் இல்லை. எந்தச் சிக்கலும் இல்லை. நிதானமும், ஒழுங்கும் சட்டத்தின் வழிகாட்டுதல்படி அதிமுகவால் பின்பற்றப்படுவதைத் தவறாகப் புரிந்து கொண்டு, நிதானம் இழக்கும் அவசரச் செயல்களில் கட்சியினர் ஈடுபடுகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபட்டு என்னை மன வேதனையில் ஆழ்த்த வேண்டாம்.
கட்சியினர் நினைத்தது குறித்த நேரத்தில் நடக்கும். இதை யாராலும் தடை செய்ய முடியாது. ஆகவே, யாரும் கவலைப்பட வேண்டாம்" என்று  கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில், ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட  அதிமுக பிரமுகர் குடும்பத்திற்கு, குடும்ப நல நிதியுதவியாக 3,00,000/- ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக அரசின்  தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார்,  கர்நாடக சட்டத்துறை அமைச்சர்  ஜெயசந்திராவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார். இந்நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவை சந்திப்பீர்களா? ராமதாசை சந்தித்த பின் ஸ்டாலின் பதில்!

சென்னை: பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்ததுபோல், ஜெயலலிதாவை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், "முதலில் ஜெயலிதா தன் கட்சிக்காரர்களை சந்திக்கட்டும் பிறகு அவரை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுப்பது பற்றி யோசிக்கலாம்" என தெரிவித்தார்.
 
தனது சகோதரர் மகன் அருள்நிதியின் திருமணத்திற்காக அ.தி.மு.க.வை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து பிரதான கட்சித் தலைவர்களையும் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். 

இந்நிலையில், இந்நிலையில் இன்று காலை காலை 10.45 மணிக்கு திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாசின் இல்லத்துக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் முதன் முறையாக வந்தார். ஸ்டாலினை வாசலுக்கே வந்து ராமதாஸ் வரவேற்றார். பின்னர் தன் சகோதரர் மகன் திருமண அழைப்பிதழை ராமதாசிடம் அளித்துவிட்டு, திருமணத்திற்கு கட்டாயம் வருமாறு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "வடநாட்டில் நிலவும் அரசியலுக்கு அப்பாற்பட்ட பண்பாட்டை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்து அழைத்து வருகிறோம்" என்றார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு "முதலில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கட்டும். அதன் பின்னர் திமுக உயர்மட்ட குழு கூடி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கும்" என கூறினார்.

முன்னாள் முதல்வருக்கும் நேரில் திருமண அழைப்பிதழ் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு "முன்னாள் முதல்வரா? மக்கள் முதல்வரா? என திருப்பி கேட்டுவிட்டு முதலில் அவர் தன் கட்சிக்காரர்களை சந்திக்கட்டும். பிறகு யோசிக்கலாம்" என்றார். 
 

7 மாதங்களுக்கு பிறகு கார்டனில் இருந்து வெளியே வருகிறார் ஜெயலலிதா!

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் மற்றும் விடுதலைக்கு பின்னர் போயஸ் கார்டனில் இருந்த ஜெயலலிதா, ஏழு மாதங்களுக்கு பின்னர் வரும் 22ஆம் தேதி வெளியே வருகிறார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
 
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக அங்குள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, அக்டோபர் 7ஆம் தேதி ஜாமீன் கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அக்டோபர் 17ஆம் தேதி ஜாமீன் வாங்கியது. இதையடுத்து, அடுத்தநாள் 18ஆம் தேதி ஜெயலலிதா, அதாவது 22 நாள் சிறைவாசத்துக்கு பிறகு அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்தார். போயஸ் கார்டன் இல்லம் திரும்பிய ஜெயலலிதா வெளியேயே தலைகாட்டவில்லை.

இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து மே மாதம் 11ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார். விடுதலைக்கு பின்னர் வெளியே ஜெயலலிதா வந்து தொண்டர்களை பார்ப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. அப்போதும், அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

இந்தநிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 22ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது. 

அதனை உறுதிப்படுத்தும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வரும் 22ஆம் தேதி எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக அக்கட்சி தலைமை இன்று அறிவித்துள்ளது.

"22ஆம் தேதி வெள்ளிக் கிழமை சென்னை, அண்ணா சாலை, ஸ்பென்சர் அருகே அமைந்துள்ள கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலைக்கும், அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கும், அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கும் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்" என்று அதிமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

NEWS TODAY 20.09.2024