Tuesday, October 3, 2017

Traffic woes continue as Velachery flyover work goes on

TNN | Updated: Oct 3, 2017, 00:12 IST

Chennai: While the Velachery Flyover construction expected to be completed by September 2018 is said to be going as per schedule despite delays, traffic woes persist with battered roads and congestion giving a a tough time to users of three arterial roads in Velachery.

Commuters using public transport complain about the time taken to cover a stretch as small as that from Vijayanagar junction to Taramani. While work on the second flyover also began last year, officials say their talks with the transport department to streamline bus traffic by shifting the bus terminus temporarily did not fructify.

Officials from the state highway said 40% of work on the project has been finished and traffic diversions were created to smoothen the flow of traffic, which has been considerably better when compared to earlier days.

"The peak-hour congestion that existed few years back especially on the Velachery bypass road is no longer there. We have been trying to work with the transport department to divert the movement of buses. The options given were to shift the Velachery bus terminus near MRTS station or near Chennai Silks but the department is still considering the options," said an official.

Buses passing from Velachery Bypass Road onto Taramani Road take a detour using LIC Colony Road and remain a major reason for congestion on 100 feet road and the junction. The LIC Colony Road remains in pathetic condition and neglect has damaged the road further, adding to the numerous Metropolitan Transport Corporation (MTC) buses that use it on a daily basis.

"It is absolutely difficult to travel on this route. It takes over half an hour just to cross the Vijayanagar junction and reach SRP Tools during office hours," said K Reshmi, a resident of Madipakkam.

Work on the flyovers is being done in two phases. Work on the first flyover that connects Velachery Bypass Road to Velachery began in December 2015. Work started this year on the flyover that connects Taramani Road to Velachery Bypass Road.

The traffic diversions created to ease work on the flyovers has created hassles for commuters using public transport. Auto drivers complain that despite the diversion, traffic is horrible.

"A trip from Vijayanagar to Tansi Nagar and back with all the detours takes around one hour during the peak timings. For a Rs 50 trip, it is too much of a hassle," said D Nagarajan, an auto driver. "It is worse during rains. We expect the work to finish sooner as these stretches are in ruins."

Highways officials said issues like land acquisition near Vijayanagar junction, changing of flyover design due to Metro water pipeline near bypass road were responsible for some delay in the project.
பிக் பாஸ் தோல்வியைக் கண்டு துவண்டு போகமாட்டேன்: சிநேகன்

Published : 02 Oct 2017 19:24 IST

சென்னை



'சாந்தன்' இசை வெளியீட்டு விழாவில் சிநேகன் பேசிய போது | கோப்புப் படம்.

பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். இறுதியில் ஆரவ் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது.

சிநேகன் மற்றும் கணேஷ் வெங்கட்ராம் இருவருக்குமே ஆரவ்வைத் தாண்டி ஆதரவு இருந்தது. இதனால் சமூக வலைதளத்தில் ஆரவ் வெற்றியடைந்ததிற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் சில நாட்கள் ஓய்விற்குப் பிறகு பாடலாசிரியர் சிநேகன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

''எனக்கு வாக்களித்த ஆதரவாளர்கள், உலகம் முழுக்க உள்ள தமிழர்கள், விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள், பிக் பாஸ் ரசிகர்கள், கமல் சார் ரசிகர்கள், என்னுடைய தோழமை உறவுகள் உள்ளிட்ட அனைவருக்கும் முதற்கண் நன்றி.

உங்கள் ஆதரவால் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் என் முழு வாழ்க்கையை, வேறொரு களத்தில் என்னை இயக்கிக் கொண்டிருந்தது. அதற்கு சாகும் வரை நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

ஆரவ் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு மேடையிலும் வாழ்த்து சொன்னேன், தற்போதும் வாழ்த்து சொல்கிறேன். காரணம், என் குடும்பத்தில் ஒரு சகோதரன் வெற்றி பெற்றிருக்கிறான். அதில் எந்தவித வருத்தமும் எனக்கில்லை.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வரும்போது எனக்கொரு சிறு அச்சம் இருந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நிறைய அழுதுகொண்டே இருக்கிறேன். எதற்கெடுத்தாலும் எமோஷன் ஆகுறேன் என்றார்கள். நான் கிராமத்துக்காரன். பாசத்தை கண்ணீரின் மூலமாகத் தான் வெளிப்படுத்த முடியும். எங்களுக்கு வார்த்தைகள் இல்லை உணர்வுகள் மட்டும். உணர்வுகளை எந்தமொழி கொண்டு மொழிபெயர்க்க முடியாது. அதன் வெளிப்பாடுதான் என்பது எனக்கு தெரியும். மக்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற அச்சத்தோடு தான் வெளியே வந்தேன்.

ஆனால், இன்றைக்கு எனது ஆதரவாளர்கள், தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் எதிரொலியாக ஊடகப் பதிவுகளைப் பார்க்கும் போது மெய்சிலிர்த்துப் போய் நிற்கிறேன். அனைவரது வருத்தங்கள், ஆதங்கங்களைப் பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. சில இடத்தில் தொலைக்காட்சியைப் போட்டு உடைத்திருக்கிறார்கள், பஸ் மறியல் செய்திருக்கிறார்கள் என்று கேட்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு அன்பு வைக்க நான் என்ன பண்ணினேன். கிராமத்துக்காரனாக, விவசாயி மகனாக சமகால வாழ்க்கையை வாழ முயற்சி செய்தேன். அங்கு நானாக வாழ்ந்திருக்கிறேன்.

அன்பு தேவைப்படுகிற இடத்தில் எல்லாம், சிநேகன் கட்டிப்பிடிப்பதற்காகவே உள்ளே சென்றிருக்கிறான் என்று சொன்னீர்கள். ஒன்று தெரியுமா, ஒரு பெண்ணைத் தொடுவதற்குக் கூட, அந்தப் பெண் நம் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அப்போது தான் நெருங்கி வர முடியும். அவ்வளவு எளிதாக ஒரு பெண்ணைத் தொட்டுவிட முடியாது நண்பர்களே. அவர்கள் அந்த ஆதரவு என்னிடமிருக்கிறது என்று நம்பினார்கள். அன்பின் வெளிப்பாடாக தான் அரவணைத்தேன். தாயும், குழந்தையும் அரவணைக்கும் அன்புதான் அங்கு நடந்தது. அதையும் விமர்சனம் செய்தீர்கள். எனக்கு விமர்சனமும், தோல்விகளும் புதிதல்ல. பழகிப்போனது. காரணம், விமர்சனங்களும், தோல்விகளும்தான் இந்த உயரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. வெற்றி, விமர்சனம், தோல்வி இதை எல்லாம் சமமாகப் பார்த்தவன்.

நிறைய ரணங்களை அனுபவித்தவன். இந்த தோல்வியைக் கண்டெல்லாம் துவண்டு போக மாட்டேன். சிநேகனைக் காணவில்லை என்று செய்திகள் வெளியான போது ஒரு பக்கம் சிரிப்பாகவும், மற்றொரு பக்கம் ஆதங்கமாகவும் இருந்தது. அய்யோ நம்மை தேடுகிறார்களே இவர்கள் என்று. அதற்கான பதிவு தான் இது.

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. 100 நாட்கள் தனியாகவே இருந்தோமே, ஒரிரு நாட்கள் ஓய்வில் இருக்கலாம் என்று தான் அமைதியாக இருந்தேன். ரொம்ப நல்லாயிருக்கேன், மகிழ்ச்சியாக இருக்கேன். அதற்கு காரணம், ஊடகங்கள் வாயிலாக வரும் அன்பின் எதிரொலி. வெற்றியடைந்தால் கூட இது தெரியாமல் போயிருக்கோம் என்ற ஐயப்பாடு இருக்கிறது. உங்கள் அனைவரது ஆதரவு இருக்கும் வரை ஊர்க்குருவி மாதிரி மேலே பறந்து கொண்டுதான் இருப்பேன். தயவு செய்து வருத்தப்படாதீர்கள், வேறு எந்த விபரீதமான முடிவுக்கும் போக வேண்டாம். யாரையும் திட்டாதீர்கள், அனைவருமே நம் சகோதரர்கள்.

உங்களது ஆதரவை தொடர்ந்து கொடுங்கள். கூடிய விரைவில் அனைவரையும் சந்திப்பேன். என் மக்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். காரணம், நான் மக்கள் கவிஞன். கிராமத்துக்காரன். எங்கு நட்டாலும் முளைப்பேன், அந்த நம்பிக்கை இருக்கிறது. உங்கள் ஆதரவால் இன்னும் பல மடங்கு அந்த நம்பிக்கை பெருகியிருக்கிறது. நன்றி'' என்று சிநேகன் தெரிவித்திருக்கிறார்.
மத்திய பிரதேசத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு அரசு சலுகைகள்: முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

Published : 02 Oct 2017 17:13 IST

ஆர்.ஷபிமுன்னாஆர்.ஷபிமுன்னா




சிவராஜ் சிங் சவுகான் | கோப்புப் படம்.

மத்திய பிரதேச மாநிலத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு அரசு சலுகைகள் வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இதற்காக, அம்மாநில அரசு சார்பில் ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் இன்று உலக முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசத்திலும் அதற்காக ஒரு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் முதியோருக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

இது குறித்து சிவராஜ் சிங் தனது உரையில் கூறியதாவது: ''எங்கள் மாநிலத்தில் வசிக்கும் முதியோர்களை இந்த அரசு கலங்க விடாது. இவர்களுக்குத் தேவையான அனைத்து வகை சலுகைகள் மற்றும் பாதுகாப்புகளை நாம் அரசு சார்பில் வழங்குவோம். இதற்காக, விரைவில் ஒரு புதிய திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இதில், ஆதரவு இன்றி தனியாக நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசித்து வரும் முதியோர்கள் பயன்பெறுவார்கள். தம் வயதான காலத்தில் அனைத்து முதியோரும் மகிழ்வுடன் வாழும் வகையில் அவர்களுக்கு ம.பி. அரசு துணை நிற்கும்'' எனத் தெரிவித்தார்.

ம.பி. அரசின் திட்டப்படி முதியோர்களுக்காக ஒரு அவசர உதவிக்கான தொலைபேசி எண் அறிவிக்கப்பட உள்ளது. அரசு சார்பில் ஒரு ஒவ்வொரு வருடமும் ஒரு முதியோர் பஞ்சாயத்து முதல்வரின் அரசு பங்களாவில் நடத்தி அதில், அனைவரும் கவுரவிக்கப்பட உள்ளனர். இதில், முதியோருக்காக ஒரு சிறப்பு பூஜையும் நடத்தப்பட உள்ளது. முதல்வர் சிவராஜ் சிங் கலந்து கொண்ட உலக முதியோர் தின விழா மேடையில் அவருடன் 100 வயது நிரம்பிய புனியாபாய் மற்றும் கன்னையாலால் ஆகிய இருவரும் அமர வைக்கப்பட்டனர். முதியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழாவில், கணினியின் மவுசில் ஒரே முறையான கிளிக்கில் ஓய்வு ஊதியம கிடைக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ம.பி. அரசின் சமூக நீதித்துறை சார்பிலான இந்த விழாவில் அம்மாநில அமைச்சரான கோபால் பார்கவும் கலந்து கொண்டார். தம் வயதான பெற்றோர்களை கைவிடுவோர் மீது தம் அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் பார்கவ் எச்சரித்தார். வெளிநாடுகளில் வசிக்கும் சில பிள்ளைகளின் பெற்றோர் இந்தியாவில் உயிரிழக்கும் செய்தி ஆறு மாத காலம் தாமதமாக போய் சேர்வதாகவும் குறிப்பிட்ட பார்கவ், இந்தநிலை மபியில் நிகழாத வகையில் அரசு பார்த்துக் கொள்ளும் என உறுதி அளித்தார்.

இவ்விழாவின் பார்வையாளராக திரளான முதியோர் கலந்து கொண்டனர். இவர்களுக்காக சில சிறப்பு உணவு வகைகளுடன், உடல் பரிசோதனை முகாமும் நடைபெற்றது.
2 மாதமாக சம்பளம் வழங்காததால் சென்னையில் இருந்து நெல்லைக்கு பஸ் கடத்தல்: டிரைவர், கண்டக்டரிடம் விசாரணை

2017-10-02@ 00:28:41




நெல்லை: சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் சத்யா(39). இவரிடம் 3 ஆம்னி பஸ்கள் உள்ளன. இந்த பஸ்கள் சென்னையில் இருந்து பெங்களூரு, திருப்பதி, திருச்சி, மதுரை மற்றும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களில் இயங்கி வருகிறது. இதில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்று வரும் பஸ்சில் நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்த சாலமோன் (24) டிரைவராகவும், வள்ளியூர் அருகே பண்டாரக்குளத்தை சேர்ந்த ராஜேஷ் (22) கண்டக்டராகவும் உள்ளனர். இவர்களுக்கு பஸ் உரிமையாளர், கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என தெரிகிறது. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்வதாக சாலமோன், ராஜேஷ் ஆகியோர் சத்யாவிடம் கூறிவிட்டு அங்கிருந்து நெல்லைக்கு பஸ்சை கடத்தி வந்தனர்.

பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே பஸ்சை நிறுத்தியிருந்தனர். இதுகுறித்து பஸ் உரிமையாளர் சத்யா தாம்பரம் போலீசில் புகார் செய்தார். சென்னை போலீசார் நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கடத்தப்பட்ட பஸ்சை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். டிரைவர் சாலமோன், கண்டக்டர் ராஜேஷ் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர். மேலும் பஸ் உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
"கதிரியக்க மருத்துவப் பரிசோதனை தேவை அதிகரித்து வருகிறது'

By DIN | Published on : 02nd October 2017 04:18 AM

மருத்துவத்துறையில் எக்ஸ்ரே, எம்ஆர்ஐ, சிடி ஆகிய கதிரியக்க மருத்துவப் பரிசோதனைகளின் தேவை அதிகரித்து வருகிறது என பாரத் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மருத்துவர் வி.கனகசபை கூறினார்.

சென்னை குரோம்பேட்டை பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை (செப்.30) நடைபெற்ற சர்வதேச மருத்துவக் கதிரியக்கத் தொழில்நுட்பக் கருத்தரங்குத் தொடக்கவிழாவில் அவர் மேலும் பேசியது:-
மனித உடலைப் பாதிக்கும் சுமார் 150 வகை நோய்கள் மூலம் ஏற்பட்ட குறைபாடு, பிரச்னை, பாதிப்பு ஆகியவற்றைத் துல்லியமாகக் கண்டறிவதன் மூலம் உறுதி செய்து, உரிய சிகிச்சை அளிக்க எக்ஸ்ரே, எம்.ஆர்ஐ உள்ளிட்ட கதிரியக்க மருத்துவப் பரிசோதனைகள் பேருதவி புரிகின்றன. நோயைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் நவீன கதிரியக்க மருத்துவப் பரிசோதனைகளால் மருத்துவச் செலவு அதிகரிப்பது தவிர்க்க முடியாதது என்றாலும், வருங்காலத்தில் அது குறைய வாய்ப்புள்ளது.

சர்வதேச அளவில் கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கதிரியக்க மருத்துவப் பரிசோதனை, சராசரியாக 700 மடங்கு அதிகரித்துள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளில் உலகெங்கும் அதிகரித்து வரும் ôர் மக்கள் தொகை காரணமாக, 1400 மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

நோய் அறிகுறிகளைக் கண்டறியும் மருத்துவர், நோய் எத்தகைய பாதிப்பை எந்த இடத்தில் எவ்வாறு ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் அறிந்து, உரிய சிகிச்சை அளிக்க உறுதுணையாகத் திகழ்ந்து வரும் கதிரியக்க மருத்துவப் படிப்பில் சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் வளர்ச்சி குறித்த அறிவாற்றலைச் சர்வதேச மருத்துவ சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இதில் கல்வி ஆலோசகர் வீரபாகு, அமெரிக்க பெதஸ்டா மருத்துவப் பல்கலைக்கழக கதிரியக்கத்துறைத் தலைவர் மார்க் டி.மர்பி, பிரிட்டன் ஸ்டாக்போர்ட் பவுண்டேஷன் நியுரோ கதிரியக்க ஆலோசகர் டாக்டர் எம்.சரவணன், சென்னை மருத்துவக் கல்லூரி பெர்னார்டு கதிரியக்கவியல் துறை இயக்குநர் ஆர்.ரவி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி துறைத் தலைவர் சி.அமர்நாத், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி துறைத் தலைவர் ஜெ.தேவிமீனாள், ராமச்சந்திரா மருத்துவமனை துறைத் தலைவர் பி.எம்.வெங்கடசாய், பாலாஜி மருத்துவக்கல்லூரி முதல்வர் டி.ஆர்.குணசேகரன், துணை முதல்வர் சாய்குமார், துறைத் தலைவரும்,கருத்தரங்குத் தலைவருமான எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அக்டோபர் 4 மின் தடை
By DIN | Published on : 03rd October 2017 03:50 AM


பராமரிப்புப் பணிகள் காரணமாக பந்தர் கார்டன், கொடுங்கையூர் கே.கே.நகர், அம்பத்தூர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (அக்.4) மின்தடை ஏற்படும்.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்டும் இடங்கள்: 

பந்தர் கார்டன்: காவலர் குடியிருப்பு, பேப்பர் மில்ஸ் பிரதான சாலை, சுந்தர விநாயகர் கோவில் தெரு, பெரம்பூர் பூங்கா தெரு, பந்தர் கார்டன் தெரு, ராகவன் தெரு, மார்கெட் தெரு, பந்தர் கார்டன் பிரதான தெரு, பந்தர் கார்டன் 1, 2 மற்றும் 3-ஆவது தெரு, வேணுகோபால் சாமி தெரு, சடையப்பதாஸ் தெரு.
கொடுங்கையூர்: முத்தமிழ் நகர் 4,5,6,7-ஆவது பிளாக்குகள் மற்றும் முத்தமிழ் நகர் தொழிற்பேட்டைப் பகுதி 7-ஆவது பிளாக். 

கே.கே.நகர்: கே.கே. நகர் 1 முதல் 12 செக்டார் (ஒரு பகுதி), ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே. சண்முகம் சாலை, நெசப்பாக்கம் (ஒரு பகுதி), அசோக் நகர் 1,9 மற்றும் 11-ஆவது நிழற்சாலை, முனுசாமி சாலை, கன்னிகாபுரம், விஜயராகவாபுரம், 80 அடி சாலை.
அம்பத்தூர்: அலையன்ஸ் திட்டம் (ஆர்ச்சிட் ஸ்பிரிங்), அன்னை நகர், வாகை நகர், சிவகாமி நகர், டி.வி.எஸ் நகர், கண்டிகை, லேக் வியூ தோட்டம், பெருமாள் கோயில் தெரு, பல்லா தெரு, வத்சலா நகர், மேட்டுத் தெரு, காவியா நகர், சாரதா நகர், எல்லையம்மன் நகர், கோபாலகிருஷ்ணன் நகர், என்.ஏ.எஸ் தோட்டம், சிவலிங்கபுரம், சக்கி நகர், சீதா அம்மன் நகர், புத்தகரம், செந்தில் நகர்.

கொளத்தூர்: வீனஸ் நகர், கடப்பா சாலை, பார்வதி அம்மன் கோயில், டீச்சர்ஸ் காலனி (ஒரு பகுதி), ரமணி நகர், கணேஷ் நகர், ஹார்பர் காலனி, அந்தோணி நகர், மல்லிகை நிழற்சாலை, அசோக் தெரு, பஜனைக் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, திருவள்ளுவர் நகர், செல்வம் நகர், அன்னை பராசக்தி தெரு, கஸ்தூரி தெரு.
பாரத் பல்கலைக்கழக இணை பதிவாளருக்கு பாராட்டு

By DIN | Published on : 03rd October 2017 03:53 AM

சர்வதேச மின்னியல், மின்னணுவியல் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர்கள் குழு உறுப்பினராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட பாரத் பல்கலைக்கழக இணைப் பதிவாளர் ஆர்.ஹரிபிரசாத்துக்கு பாரத் பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை பாராட்டுவிழா நடத்தப்பட்டது.
சர்வதேச அளவில் 161 நாடுகளைச் சேர்ந்த 4 லட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட மின்னியல், மின்னணுவியல் பொறியாளர்கள் அமைப்பின் மாநாடு கடந்த மாதம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றது.

அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட 31 நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் பங்கேற்ற மாநாட்டில், 5 தலைவர்கள் அடங்கிய
குழுவின் உறுப்பினராக ஆர்.ஹரிபிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு சென்னையை அடுத்த சேலையூரில் அமைந்துள்ள பாரத் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் பல்கலைக்கழக துணை இணை வேந்தர் கே.பி.தூயமணி, முதல்வர் ஜெ.ஹமீது உசேன், தேர்வு கண்காணிப்பாளர் பிரேம் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரயில் நிலையத்தில் தவறான அறிவிப்பு மத்திய அமைச்சர் அதிருப்தி
By DIN | Published on : 03rd October 2017 02:06 AM



குவாலியர் ரயில் நிலையத்தில் உள்ள அறிவிப்புப் பலகையில் பயணிகளுக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அவர் எழுதிய கடிதத்தில் அவர் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்
.
இதுதொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திய தோமர், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். ஜபல்பூர் - நிஜாமுதீன் விரைவு ரயிலில் பயணிப்பதற்காக மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் ரயில் நிலையத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.1) சென்ற மத்திய அமைச்சர் தோமர், அங்கு நடைமேடையில் காத்திருந்தார். 

அப்போது, எந்தெந்த வகுப்புப் பெட்டிகள் எங்கெங்கு நிற்கும் என்பது தொடர்பான தகவல்கள் அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டது. அதன்படி பயணிகள் தங்களுக்குரிய பெட்டிகள் வந்து நிற்கும் இடங்களில் காத்திருந்தனர். ஆனால், அந்தத் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்பது ரயில் வந்தவுடன் தெரிந்தது. அறிவிப்பில் கூறியதற்கும், ரயில் பெட்டிகள் நின்ற இடத்துக்கு சம்பந்தமில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, தங்களது இருக்கை உள்ள பெட்டிகளைத் தேடி பயணிகள் அலைமோதினர். இந்தச் சம்பவத்தால் அதிருப்தியடைந்த தோமர், ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தவறான தகவல்கள் பெரும் அசம்பாவிதத்துக்கு வழிவகுக்கக் கூடும் என்று அதில் குறிப்பிட்டுள்ள தோமர், இதுதொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடுமாறு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கடவுள் அழைக்கும் போது பத்மநாபசுவாமி கோயில் செல்வேன்:கர்நாடக இசைக்கலைஞர் ஜேசுதாஸ் விருப்பம்

பதிவு செய்த நாள்02அக்
2017
23:42

நாகர்கோவில்;கடவுள் அழைக்கும் போது பத்மநாபசுவாமி கோயில் செல்வேன், என்று கர்நாடக இசை கலைஞர் ஜேசுதாஸ் கூறினார்.தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அதிகமான பக்திபாடல்களை பாடி வருபவர் ஜேசுதாஸ். சபரிமலையில் காலையில் நடை திறக்கும் போது இவர் பாடிய ஐயப்ப சுப்ரபாதம், இரவில் இவரது தாலாட்டு பாடலான அரிவராசனம் பாடல் ஒலிபரப்பப்படும். இவர் சமீபத்தில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் செல்ல அனுமதி கோரியிருந்தார். அதற்கு நிர்வாக கமிட்டி இதற்கு அனுமதி வழங்கியது.ஆண்டு தோறும் அக்.ஒன்றாம் தேதி திருவனந்தபுரத்தில் ஒரு மன்றத்தில் ஜேசுதாஸ் கர்நாடக இசை கச்சேரி நடத்துவார். நேற்று முன் தினம் அந்த நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் செப்., 30 அல்லது அக்.ஒன்றாம் தேதி ஜேசுதாஸ் பத்மநாபசுவாமி கோயில் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கோயில் செல்ல வில்லை.
இது குறித்து அவர் இன்னிசை கச்சேரி மேடையில் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குருவாயூர் கோயில் செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த கோபத்தில் இனி ஒரு கிருஷ்ணன் கோயிலுக்கும் செல்ல மாட்டேன், என்று கூறியிருந்தேன். ஆனால் கடந்த மூகாம்பிகா கோயிலுக்கு செல்லும் வழியில், எனது நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் உடுப்பி கிருஷ்ணன் கோயிலுக்கு சென்றேன். அப்போது சுவாமிக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த தரிசனம் என்னால் மறக்க முடியாதது.குருவாயூர் பிரச்னையில் பிடிவாதமாக இருந்தததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். அதுபோல கடவுள் அழைக்கும் போது பத்மநாபசுவாமி கோயில் செல்வேன். அங்கு பாடுவேன். நேரம் வரும் போது கடவுள் என்னை அழைப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க., - தி.மு.க., 'மாஜி'க்களுக்கு கமல் வலை
அ.தி.மு.க., மற்றும், தி.மு.க.,வில், முக்கிய நிர்வாகிகளை அழைத்து, நடிகர் கமல் ரகசிய ஆலோசனை நடத்தி வருவது, இரு கட்சிகளிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.




நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என, அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அவருக்கு முன், அரசியலில் குதிக்கப் போவதாக, கமல் அறிவித்துள்ளார்; அதற்கான ஆயத்தப் பணிகளையும் துவக்கி விட்டார்.

அழைப்பு விடுத்தார்

கேரள முதல்வர், பினராயி விஜயனை சந்தித்து பேசினார். டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால், நேராக கமல் வீட்டிற்கு வந்து, அவரது கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். அதை தவிர்த்த கமல், தனிக்கட்சி துவங்கும் திட்டத்தில் உள்ளார்.விரைவில், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியை சந்தித்து பேசவும் திட்டமிட்டு உள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைத்து, கட்சி துவங்குவது தொடர்பாக, கமல் ஆலோசனை நடத்தி வருகிறார். அ.தி.மு.க., மற்றும், தி.மு.க.,வில் உள்ள பிரமுகர்களையும், ரகசியமாக சந்தித்து பேசி வருகிறார். அ.தி.மு.க.,வில், முன்னாள் அமைச்சர்கள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் போன்றோர், கமலை சந்தித்து பேசி உள்ளனர். அதே போல்,தி.மு.க.,விலும், முன்னாள் அமைச்சர்கள் சிலர், கமலை சந்தித்துள்ளனர்.

அரசியல் வியூகம்

ஒவ்வொருவரையும், கமல் தனித்தனியே அழைத்து பேசி உள்ளார். அவர்களிடம், அவர்கள் சார்ந்துள்ள கட்சி உட்கட்டமைப்பு, நிர்வாகிகள், அவர்களின் செயல்பாடு, தலைவர்களின் செயல்பாடு, அரசியல் வியூகம் போன்ற விபரங்களை கேட்டறிந்து உள்ளார்.

அவர்களில் சிலரை மட்டும், தன்னுடன் இணைந்து செயல்பட முடியுமா என, கமல் கேட்டுள்ளார்; சிலர், சம்மதம் தெரிவித்து உள்ளனர். சிலர், யோசித்து கூறுவதாக திரும்பி உள்ளனர். 'மாஜி'க்கள் கமலை சந்தித்த விவகாரம், அ.தி.மு.க., - மற்றும், தி.மு.க.,வில் புயலை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -
கோவையை போன்று ஈரோட்டில், 'ஏர் டாக்சி'
பதிவு செய்த நாள்02அக்
2017
22:53

ஈரோடு;''கோவையை போன்று, ஈரோட்டில், 'ஏர் டாக்சி' திட்டம் கொண்டு வரப்படும்,'' என, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர், ஹரிசங்கர் வர்மா கூறினார்.

'துாய்மை பாரதம்' திட்டத்தில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர், ஹரிசங்கர் வர்மா தலைமையிலான அதிகாரிகள், தொழிலாளர்கள், ஈரோடு காவிரி ஆற்றில், நேற்று, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.ஹரிசங்கர் வர்மா கூறியதாவது:காவிரி ஆற்றில், ஆகாய தாமரை, மரம், செடி, கொடி கிடப்பதால், நீரோட்டம் பாதிக்கிறது. இங்கிருந்து தான், ஈரோடு ரயில்வே காலனி, ரயில்வே ஸ்டேஷனுக்கு, தண்ணீர் எடுக்கப்படுகிறது. நீருந்து நிலைய பகுதி மட்டுமின்றி, காவிரியில், இதர இடங்களையும் சுத்தம் செய்ய உள்ளோம்.

கோவையை போன்று, ஈரோட்டில், 'ஏர் டாக்சி' திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.'ஏர் டாக்சி' என்பது, 'ஆப்ஸ்' அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, சேலம் ரயில்வே கோட்டத்தில், கோவை, வடகோவை, போத்தனுார் மற்றும் சேலம் என, நான்கு இடங்களில், இந்த முறையில், ரயில் பயணியருக்கு, டாக்சி வசதி செய்து தரப்படுகிறது.மொபைல் போனில் இதற்கான, 'ஆப்' மூலம் பதிவு செய்தால், ரயில்வே சார்பில், டாக்சி வசதி செய்து தரப்படும். மொபைல் போன் இல்லாதவர்கள், இதற்கென, ரயில்வே ஸ்டேஷனில் அமைக்கப்பட்டுள்ள கவுன்டரை அணுகினால், டாக்சி வசதி ஏற்பாடு செய்யப்படும். ஐந்தாவது இடமாக, ஈரோட்டில்,இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
பரோல்' விதிகளை திருத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி: 'குற்றவாளிகளும், சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் திருந்தி வாழவும், குடும்ப, சமூக தொடர்புகளை மேம்படுத்தவும், 'பரோலில்' அனுமதிப்பதற்கான விதிகளை மேம்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




கடந்த, 1993ம் ஆண்டு, டிச., 6ல், ரயில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், தடா நீதிமன்றத்தால், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவன், அஸ்பாக். தனக்கு, தொடர்ந்து, 'பரோல்' அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான்.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி,  அசோக் பூஷண் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது:குற்றவாளிகளை திருத்தவே, தண்டனை விதிக்கப்படுகிறது. அந்த நோக்கத்தை அடையும் வகையில், பரோலில் விடுவிப்பது, சட்டத்துக்குஉட்பட்டது தான்.

சுதந்திர காற்றை சுவாசிக்க

தண்டனைக் காலத்தில், குறைந்த நாட்கள், பரோலில் குற்றவாளிகளை விடுவிப்பது, அவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும்; சமூகத்துடன் அவர்களுக்கு உள்ள தொடர்பை, நிலைநிறுத்த முடியும்.குற்றவாளிகள், தங்களின் குடும்ப மற்றும் சமூக தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில், பரோல் அனுமதிக்கப்பட வேண்டும். திருந்தி வாழ்வதில் ஆர்வம் உள்ள,நன்னடத்தை மிக்க குற்றவாளிகள், குறைந்த காலத்திற்காவது, சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதிக்க வேண்டும்.

1955ல் இயற்றப்பட்ட விதிகள்

குற்றவாளி கள் திருந்தி வாழ்வது,  சமூகத்திற்கும் நன்மை பயக்கும்.எனவே, தண்டனை கைதிகளை, 'பரோலில்' தற்காலிகமாக விடுதலை செய்வது மற்றும் நீண்ட கால தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்வது ஆகியன குறித்து, 1955ல் இயற்றப்பட்ட விதிகளை, மத்திய அரசு மேம்படுத்த வேண்டும். 

பரோலில் விடுவிக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு, உரிய விதிகளை அரசு வழங்க வேண்டும். இந்த தீர்ப்பின் முழு விபரம், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறைக்கு அனுப்பப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

டயர் வெடித்து கவிழ்ந்த அரசு பஸ் ஒருவர் பலி; 35 பயணியர் படுகாயம்
பதிவு செய்த நாள்02அக்
2017
22:57



உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே, டயர் வெடித்து அரசு பஸ் கவிழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார்; 35 பயணியர் படுகாயம் அடைந்தனர்.மதுரையில் இருந்து, நேற்று காலை, அரசு விரைவு பஸ், சென்னை புறப்பட்டது. காலை, 7:00 மணியளவில், மதுரை மாட்டுத்தாவணி அருகே வந்த போது, பஸ் இன்ஜின் பழுதானது. மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு, பயணியர் அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவர் மாரிமுத்து, 37, பஸ்சை ஓட்டினார்.

மதியம், 12:10 மணியளவில், விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே வந்த போது, பஸ்சின் முன்புற, இடதுபக்க டயர் திடீரென வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. பஸ்சின் இடிபாடுகளில், பயணியர் சிக்கினர்.விபத்தில், பஸ் கண்டக்டர், டிரைவர் மற்றும் பயணியர் என, 36 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார், தீயணைப்புத் துறையினர், பயணியரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில், கண்ணன், 60, என்ற முதியவர் பரிதாபமாக இறந்தார்.





ரேஷனில் வழங்கும் பருப்பு பழனிசாமிக்கு, 'பார்சல்'

ரேஷன் பருப்பு பார்சலை, முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், தபாலில் அனுப்ப, ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.



தமிழகத்தில், சிறப்பு பொது வினியோக திட்டப்படி, ரேஷன் கடைகளில், துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு, கிலோ, தலா, ௩௦ ரூபாய்க்கும், லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. இவற்றுக்காக, ஆண்டுக்கு, 1,400 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. சில ஆண்டுகளாக, துவரம் பருப்பிற்கு பதில், கனடா பருப்பு வழங்கப்படுகிறது.

தரமற்ற பருப்பு

நுகர்பொருள் வாணிபக் கழகம், அதிக  விலைக்கு பருப்பு, பாமாயில் வாங்கியதால் ஏற்பட்ட இழப்பு மற்றும் நிதி நெருக்கடி போன்றவற்றால், சிறப்பு வினியோகதிட்டத்தை நிறுத்த, ஜனவரியில், தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், அந்த விபரத்தை, மக்களிடம் முறையாக தெரிவிக்கவில்லை. இதனால், பொருட்கள் கிடைக்காததால், மக்கள் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, உளுத்தம் பருப்பை நிறுத்தி, மார்ச் முதல், கனடா பருப்பு, பாமாயில் மட்டும் வழங்கப்படுகின்றன. தற்போது, கனடா பருப்பிற்கு பதில், மசூர் பருப்பு வழங்கப்படுகிறது. இது, தரமற்று மோசமாக இருப்பதாக, மக்களிடம் இருந்து, தொடர்ந்து புகார்கள்வந்தும், அரசு அலட்சியமாக உள்ளது.

எந்த நடவடிக்கையும் இல்லை

இது குறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது: கடைக்கு வருகிற பருப்பை தான், மக்களுக்கு தருகிறோம். அது, 'சமையலுக்கு உகந்தது அல்ல' எனக்கூறி, அவர்கள்,

எங்களுடன் பிரச்னை செய்கின்றனர். அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால், ஒவ்வொரு மாவட்ட ரேஷன் கடைகளில் இருந்தும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வீடுகளுக்கு, இந்த பருப்பு பார்சலை, தபாலில் அனுப்ப உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

- நமது நிருபர் -
  • அக்டோபர் 18 (பு) தீபாவளி
  • அக்டோபர் 19 (வி) கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
  • அக்டோபர் 25 (பு) சூரசம்ஹாரம்
  • நவம்பர் 04 (ச) குருநானக் ஜெயந்தி
  • டிசம்பர் 01 (வெ) மிலாடி நபி
  • டிசம்பர் 02 (ச) திருக்கார்த்திகை
இசை நிகழ்ச்சியில் கொடூர தாக்குதல் அமெரிக்காவில் 50 பேர் பலி

பதிவு செய்த நாள்02அக்
2017
22:59




லாஸ் வேகாஸ்;அமெரிக்காவில், லாஸ் வேகாஸ் நகரில், இசை நிகழ்ச்சி நடந்த போது, மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 50 பேர் பலியாகினர்; 400 பேர் காயமடைந்தனர். மர்ம நபரை, போலீசார் சுட்டுக் கொன்றனர். கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம், அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில், டொனால்டு டிரம்ப், ஜனவரியில் அதிபராக பதவியேற்றார். லாஸ் வேகாஸ் நகரில் உள்ள, மேண்டலே பே ஓட்டல் அருகில், திறந்தவெளி மைதானத்தில், நேற்று முன்தினம் இரவு, பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியை காண, 2,000 பேர் திரண்டிருந்தனர். பிரபல பாடகர், ஜேசன் வேல்டகர் பாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில், நிகழ்ச்சி நிறைவடைய இருந்தது.

இரவு, 10:00 மணிக்கு, அருகிலுள்ள ஓட்டலின், மாடியில் இருந்து மர்ம நபர் ஒருவன், இயந்திரத் துப்பாக்கியால், மைதானத்தில் இருந்த மக்கள் மீது சரமாரியாகச் சுட ஆரம்பித்தான். பலர், தலை, கழுத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து, சுருண்டு விழுந்து இறந்தனர்.துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும், அங்கு கூடியிருந்தவர்கள நாலாபுறமும் சிதறி ஓடினர். மர்ம நபர், சில நிமிட இடைவெளிக்கு பின், மீண்டும் சரமாரியாக சுட ஆரம்பித்தான். அதன்பின், ஓட்டலின் உள்ளே பதுங்கினான்.

போலீசார், மைதானத்துக்கு விரைந்து வந்து, பலியான, 50 பேரின் உடல்களை மீட்டனர். காயம் அடைந்த, 400 பேரை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் பதுங்கியிருந்த ஓட்டலை, சிறப்பு ஆயுதப் பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். 32வது மாடியின் ஓர் அறையில் மர்ம நபர், பதுங்கி இருந்தது தெரிந்தது.
போலீசார், அந்த அறைக்குள் அதிரடியாக நுழைந்தபோது, மர்ம நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். அவன் வைத்திருந்த, எட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவன், லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த, ஸ்டீபன் பேட்டாக், 64, என்பது தெரியவந்தது. ஸ்டீபனின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், அவனது காதலியை தேடி வருகின்றனர்.துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பிய, மானிக் டெகர்ப் என்பவர் கூறுகையில், ''கண்ணாடி உடைவது போன்ற சத்தம், முதலில் கேட்டது.

''அதன் பின்னரே, துப்பாக்கிச்சூடு என்பதை உணர்ந்து கொண்டோம். சில நிமிடம் அமைதியாக இருந்தது. பின், மீண்டும் அவன் சுட ஆரம்பித்தான்,'' என்றார்.ஜோ பிட்ஸ் என்பவர் கூறுகையில், ''நிகழ்ச்சி முடியும் நேரம் என்பதால், மேடையை நோக்கி மக்கள் நகர்ந்தனர். அப்போது பட்டாசு வெடிப்பது போன்று சத்தம் கேட்டது. தொடர்ந்து சுட்டதால், இயந்திரத் துப்பாக்கியால் யாரோ சுடுவதை தெரிந்து கொண்டோம்,'' என்றார்.
கடந்த, 2016ம் ஆண்டு, ஜூனில், புளோரிடா மாகாணத்தில், இரவு விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 49 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், லாஸ் வேகாஸில் நடந்துள்ள துப்பாக்கிச்சூடு, அமெரிக்க வரலாற்றில், மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவமாக பதிவாகியுள்ளது.அமெரிக்க அதிபர், டிரம்ப், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.






உலக முதியோர் தினம் கடலூரில் ஊர்வலம்
பதிவு செய்த நாள்03அக்
2017
00:38

கடலுார் : உலக முதியோர் தினத்தையொட்டி கடலுாரில் ஊர்வலம் நடந்தது.முதியோர்களை வன்கொடுமை செய்வதை தடுக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கடலுார் பெரியார் சிலை அருகில் இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். காங்., மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகர் துவக்கி வைத்தார். ஊர்வலம் பாரதி சாலை வழியாக டவுன் ஹாலை அடைந்தது.ஊர்வலத்தில் தர்மலிங்கம், ஜெகநாதன், கணேசன், விஜியலட்சுமி, தயா பங்கேற்றனர்.
தஞ்சை அருகே, 'ஆளில்லா கடை' காந்தி ஜெயந்தியில் மட்டும் திறப்பு
பதிவு செய்த நாள்03அக்
2017
00:09

தஞ்சாவூர்:'அனைவரும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தும் விதமாக, தஞ்சை அருகே, காந்தி ஜெயந்தியான நேற்று மட்டும், 'ஆளில்லா கடை' திறக்கப்பட்டது.காந்தி ஜெயந்தியான நேற்று, தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில், திறக்கப்பட்ட ஆளில்லா கடையில், வீட்டு உபயோகப் பொருட்கள், எழுது பொருட்கள், தின்பண்டங்கள் ஆகியவை, விலை அச்சிடப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.கடையில் பொருட்கள் வாங்குவோர், பொருளை எடுத்து, அதற்குரிய தொகையை, அங்குள்ள டப்பாவில் போட்டு சென்றனர். சிலர் பணத்தை போட்டு, மீதி சில்லரையை எடுத்துக் கொண்டனர்.

அப்பகுதியைச் சேர்ந்த, ரோட்டரி சங்க தலைவர், பக்ருதீன் அலி அகமது கூறியதாவது:'நேர்மை, உண்மை, நம்பிக்கை நிறைந்த இந்தியா உருவாக வேண்டும்' என, காந்தி கனவு கண்டார். அவர் கண்ட கனவை நனவாக்க, காந்தி ஜெயந்தியன்று மட்டும், இந்த ஆளில்லா கடை திறக்கப்படுகிறது. 16 ஆண்டுகளாக, லாப நோக்கம் இல்லாமல், நேர்மையை மட்டுமே நோக்கமாக கொண்டு, இந்த கடை திறக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
கிண்டி ரயில் நிலையத்தில் திருநங்கையரால் தொல்லை

பதிவு செய்த நாள்03அக்
2017
00:06

'கிண்டி ரயில் நிலையத்தில், திருநங்கையர் பிரச்னையால், பயணியர் அவஸ்தைப்படுவதை தடுக்க, இரவு நேரத்தில், கடைசி ரயில் செல்லும் வரை, பாதுகாப்பு வேண்டும்' என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே, கிண்டி புறநகர் மின்சார ரயில் நிலையத்தில் இருந்து, தினசரி லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். நிலைய பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், கிழக்கு மற்றும் மேற்கு பக்கம் இரு வழிகளை தவிர, மற்ற வழிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில், ஆண் பயணியர் இரவு நேரத்தில், பிளாட்பாரத்தின் தெற்கு பக்கம் வழியாக, தண்டவாளத்தில் நடந்து, பாதுகாப்பு சுற்றுச்சுவரில் ஏறி குதித்து செல்வது தொடர்கிறது. இவர்களாலும், திருநங்கையராலும், இரவு நேரத்தில், பெண் பயணியர் அவஸ்தைப்படும் நிலை உள்ளது.இது குறித்து, பெண் பயணியர் கூறியதாவது:

ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறிச்செல்வதற்காக, பிளாட்பாரத்தின் தெற்கு பக்கம் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. இரவு நேரத்தில், இப்பகுதியின் இருட்டான இடங்களில், ஆண் பயணியர் - திருநங்கையர் அட்டகாசத்தால், பெண்கள் அச்சப்படும் நிலை உள்ளது.தெற்கு பக்கம் தண்டவாளம் வழியாக வீடுகளுக்கு செல்வது போல, பாவனை காட்டும் ஆண்களாலும், அவர்களின் நண்பர்களை போல நடந்து கொள்ளும் திருநங்கையராலும், அவ்வப்போது பிரச்னை ஏற்படுகிறது.இரவு நேரத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர், நிலையத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வருகின்றனர். தொடர்ந்து நிலையத்தில் இருப்பதில்லை; ரயில்களில் ஏறிச்சென்று விடுகின்றனர்.இந்நிலையால், கிண்டி ரயில் நிலையத்தில், இரவு, 9:00 மணிக்கு மேல், திருநங்கையர் இருட்டில் நடமாடுவதும், அவர்களிடம் ஆண்கள், 'குடி'மகன்களின் அத்து மீறல்களும் தொடர்கிறது.கிண்டி ரயில் நிலையத்தில், இரவு, 9:00 மணியில் இருந்து, கடைசி மின்சார ரயில் செல்லும், அதிகாலை, 12:20 மணி வரையும், நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர் தொடந்து பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
80 சதவீத, 'ஏசி' பேருந்துகள் ஏலம்
பதிவு செய்த நாள்03அக்
2017
00:02

சென்னை : சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட்ட, 80 சதவீத, 'ஏசி' பேருந்துகள் ஏலம் விடப்பட்டுள்ளன.சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 2010ம் ஆண்டு, அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் நேரு, 100 வால்வோ, 'ஏசி' பேருந்துகளை அறிமுகப்படுத்தினார்.அவற்றில் சரி பாதியாக பிரித்து, அண்ணாநகர், அடையாறு பணிமனைகளுக்கு வழங்கினார்.அப்போது, அந்த பேருந்துகளின் பராமரிப்பை, அந்த நிறுவனத்தால் மட்டுமே மேற்கொள்வது என, ஒப்பந்தம் செய்யப்பட்டது.அந்த நிறுவனத்திடம் இருந்து பெறப்படும்உதிரிபாகங்களின் விலை, பராமரிப்பு செலவு,நம் நாட்டு பேருந்துநிறுவன செலவுகளை விட அதிகம்.அதனால், மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், அந்த பேருந்துகளை பராமரிக்க, உள்ளூர் தயாரிப்பு உதிரி பாகங்களை உபயோகித்தனர்.இதனால், புதிதாக பொருத்தப்பட்ட உதிரி பாகத்துடன் தொடர்புடைய அனைத்து பாகங்களும், விரைவில் பழுதடைந்தன.இதனால், பேருந்துகளின் இயக்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. கோடையில் கூட, 'ஏசி' பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.தற்போது, அடையாறு பணிமனையில், 35 பேருந்துகளும், அண்ணாநகர் பணிமனையில், 45 பேருந்துகளும் இயக்க முடியாதவை என ஒதுக்கப்பட்டு, அவை ஏலம் விடப்பட்டு உள்ளன.




1 கிலோ 10 ரூபாய்! தக்காளி விலை சரிவு
பதிவு செய்த நாள்03அக்
2017
00:01

வரத்து அதிகரிப்பின் காரணமாக, சென்னையில், 1 கிலோ தக்காளி, 10 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது.தமிழகத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, கோவை மாவட்டங்களில், தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்தின் தேவைக்காக, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் வரத்து உள்ளது. தற்போது, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் தக்காளி விளைச்சல் களை கட்டி வருகிறது. இதன் எதிரொலியாக, அவை அதிகளவில் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. சென்னை கோயம்பேட்டிற்கு மட்டும், நாள்தோறும், 60க்கும் மேற்பட்ட லாரிகளில், தக்காளி வரத்து உள்ளது.வரத்து அதிகரிப்பால், அவற்றின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. 1 கிலோ தக்காளி, சில்லரை விலையில், 10 - 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

- நமது நிருபர் -
தீபாவளிக்கு முன் புதிய ஊதியம் வேண்டும் 'ஜாக்டோ - ஜியோ கிராப்' வலியுறுத்தல்
பதிவு செய்த நாள்02அக்
2017
22:25

சென்னை:'தீபாவளி பண்டிகைக்கு முன், புதிய ஊதியத்தை அறிவிக்க வேண்டும்' என, முதல்வர் பழனிசாமியை சந்தித்து, 'ஜாக்டோ - ஜியோ கிராப்' அமைப்பினர் வலியுறுத்தினர்.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியத்தை உயர்த்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின், 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பினர், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற உத்தரவால், போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, செப்., 27ல், தன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இதன்படி, விரைவில் ஊதிய உயர்வை அறிவிக்க உள்ளது.அரசுக்கு ஆதரவான, 'ஜாக்டோ - ஜியோ கிராப்' அமைப்பின் நிர்வாகிகள் சண்முகராஜன், இளங்கோவன், கணேசன் உள்ளிட்டோர், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினர்.
இது குறித்து, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், இளங்கோவன் கூறியதாவது:முதல்வர் அறிவித்தபடி, ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை ஆய்வு செய்த குழுவிடம், தமிழக அரசு அறிக்கை பெற்றுள்ளது. இதற்காக, முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். ஊதியக்குழு பரிந்துரைப்படி, இந்த மாதம் முதல் புதிய ஊதியம் வழங்க வேண்டும்; இதற்கான அறிவிப்பை, தீபாவளிக்கு முன் வெளியிட வேண்டும் என, வலியுறுத்தி உள்ளோம். தாமதமானால் இடைக்கால நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என, மனு கொடுத்துஉள்ளோம்.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, கட்டாயம் ரத்து செய்ய வேண்டும். நவ.,௩௦க்குள், இதுகுறித்த ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்து, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் வலியுறுத்தி உள்ளோம். 

மேலும், 'ஜாக்டோ - ஜியோ கிராப்' அமைப்பு சார்பில், சி.பி.எஸ்., என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஒழிக்க, மாநாடு நடத்த உள்ளோம். இதில், முதல்வர் பழனிசாமி பங்கேற்க உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.



விடுமுறை ஜாலிதான் ஆனால் பயணம்தான் கொடுமை:புலம்பி தள்ளும் குமரி மாவட்ட மக்கள்

பதிவு செய்த நாள்02அக்
2017
19:41

நாகர்கோவில்: விடுமுறை வந்தால் ஊருக்கு வருவது ஜாலிதான், ஆனால் ஊருக்கு வருவதும், திரும்பி செல்வதும்தான் கொடுமையாக உள்ளது என்று குமரி மாவட்ட பயணிகள் புலம்புகின்றனர்.

தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்ட மக்கள் படிப்பு, வேலைக்காக சென்னையில் அதிக அளவில் தங்குகின்றனர். இது போல கோவை, திருச்சியிலும் வசிக்கின்றனர். மேலும் மருத்துவம், இஞ்ஜினியரிங் படிப்புக்காக மாணவ மாணவிகள் தமிழகம் முழுவதும் பரவி கிடக்கின்றனர் விடுமுறை என்றாலே சொந்த ஊருக்கு வருகின்றனர். ஆனால் வரும் போதும், திருப்பி செல்லும் போதும் போதுமான பயண வசதி இல்லாததால் பயணம் மிகவும் கொடுமையாக உள்ளது என்று பயணிகள் ஆதங்கப்படுகின்றனர்,
ரயில் என்றால் சென்னை செல்ல கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் என இரண்டு ரயில்கள் மட்டுமே உள்ளது. பகல் நேர ரயிலாக குருவாயூர் சென்னை ரயில் உள்ளது. அடுத்து பயணிகள் முக்கியமாக நம்பியிருப்பது ஆம்னி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களைதான். ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகம். அரசு பஸ்களில் பயண நேரம் அதிகம். ரயிலில் இடம் கிடைப்பது மிகவும் சிரமம். இதனால் சிரமப்படுவதாக பயணிகள் தெரிவித்தனர்.

காலாண்டு விடுமுறையுடன் 4 நாள் அரசு விடுமுறை இணைந்து வந்ததால் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் தங்கியிருந்தவர்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். நேற்றும், நேற்று முன்தினமும் இவர்கள் திரும்பி சென்றனர். இதனால் பஸ்ஸ்டாண்டுகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கமான பஸ்களுடன், 112 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. எனினும் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

நாகர்கோவில் ரயில் நிலையம் திருவனந்தபுரம் மண்டலத்தில் உள்ளதால் அங்குள்ள அதிகாரிகள் குமரி மாவட்ட மக்களின் தேவை பற்றி தெரிந்து கொள்வதில்லை. இதனால் கூடுதல் ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது. கூடுதல் ரயி்லகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் விரும்புகின்றனர்.
22 இந்தியரை விடுதலை செய்ய குவைத் அரசு உத்தரவு
பதிவு செய்த நாள்02அக்
2017
23:13

புதுடில்லி;குவைத் அரசின் தண்டனை குறைப்பு நடவடிக்கையால் பலனடைந்துள்ள, இந்தியர்கள், 22 பேரை, உடனடியாக விடுதலை செய்ய, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில், ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட இந்தியர்கள், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியர்கள், 15 பேரின் மரண தண்டனையை, சமீபத்தில், ஆயுள் தண்டனையாக குறைத்த, குவைத் அரசு, மேலும், 119 இந்திய கைதிகளின் தண்டனையை குறைத்துள்ளது.அவர்களில், 53 பேரின் ஆயுள் தண்டனை, 20 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.தண்டனை குறைப்பு நடவடிக்கையால் பலனடைந்துள்ள, இந்தியர்கள், 22 பேரை, உடனடியாக விடுதலை செய்ய, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. குவைத் அரசின் நடவடிக்கைக்கு, மத்திய அரசு நன்றி தெரிவித்து உள்ளது.
இது குறித்து, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:குவைத் சிறையிலிருந்து விடுவிக்கப்படும், இந்தியர்கள் நாடு திரும்ப, மத்திய அரசின் சார்பில் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். அதே போல், அந்நாட்டு சிறையில் வாடும் இந்தியர்கள், மீதமுள்ள தண்டனை காலத்தை, நம் நாட்டு சிறையில் கழிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கான சாத்தியக் கூறு குறித்து ஆராய்ந்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
காய்ச்சல் பாதித்த 100 பேரில் 6 பேருக்கு டெங்கு:மதுரையில் குவியும் நோயாளிகள்
பதிவு செய்த நாள்03அக்
2017
00:53




மதுரை;மதுரை அரசு மருத்துவமனையில் செயல்படும் 24 மணி நேர காய்ச்சல் சிறப்பு வார்டிற்கு தினமும் சராசரியாக வரும் 100 பேரில் 6 பேர்களுக்கு டெங்கு அறிகுறி தென்பட்டு வருகிறது.கடும் காய்ச்சல் பாதித்து தினமும் 1,500 பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். ரத்த பரிசோதனையில் பலருக்கு டெங்கு அறிகுறி தென்பட்டு சிறப்பு வார்டில் மேல்சிகிச்சை பெறுகின்றனர். 

டெங்கு காய்ச்சலுக்கு ஒத்தக்கடை திருச்செல்வி,11, செல்லுார் சஞ்சனா,4, விளாங்குடியை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பரமேஸ்வரி, திருமங்கலம் ஜவஹர்நகர்தெரு நாகப்ரஜீத்,13, உட்பட 2 மாதத்தில் மட்டுமே 7க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.இன்னும் ஏராளமானவர்கள் டெங்கு பாதிப்பில் பலியானாலும், கல்லீரல் பாதிப்பு உட்பட பிற நோய்களால் மட்டுமே இறக்கின்றனர் என அரசு மருத்துவமனையில் மழுப்பலான தகவல் தருகின்றனர்.

மாவட்டத்தில் செல்லுார், ஒத்தக்கடை, வாடிப்பட்டி, திருமங்கலம், விளாங்குடி உட்பட அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணிகள் மந்த நிலையில் நடப்பதால் ரோடுகள், வீடுகளை சுற்றியுள்ள பயனற்ற டயர், உரல், சிரட்டைகளில் மழை நீர் தேங்கி கொசுக்கள் மூலம் தீவிரமாக காய்ச்சல் பரவி வருகிறது.டெங்கு அதிகரிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க, மதுரை அரசு மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சை பிரிவிற்குள் 24 மணிநேர காய்ச்சல் சிறப்பு பிரிவு செயல்படுகிறது. 

இங்கு 5 டாக்டர்கள் சுழற்சி முறையில் சிகிச்சை அளிக்கின்றனர். தினமும் காய்ச்சல் பாதித்து வரும் 100 பேர்களில் 6 பேர்களுக்கு டெங்கு அறிகுறி தென்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இதனால், மதுரை நகரே டெங்கு பீதியில் தவித்துவருகிறது. டெங்கு பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க, சுகாதாரப்பணிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் அதிகரித்து வருகிறது.
அமைச்சரின் மவுனம்: கிளம்புது சந்தேகம்
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில், சிகிச்சையில் இருந்த போது, ஜெயலலிதாவை, அமைச்சர்கள் சந்தித்தனரா என்ற கேள்விக்கு, சுகாதாரத் துறை அமைச்சர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.



அவரது மவுனம், இந்த விவகாரத்தில், மேலும்சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி, முன்னாள் முதல்வர், ஜெ., உயிரிழந்தார். ஜெ., மருத்துவமனையில் இருந்த வரை, சசிகலாவை தவிர, வேறு யாரும்  பார்க்கவில்லை என, கூறப்படுகிறது.

ஜெ.,யை பார்த்தோம்

ஆனால், மருத்துவமனைக்கு வந்து சென்ற அமைச்சர்கள், தினமும்,
'ஜெ., நல்ல நிலையில் இருக்கிறார்; இட்லியும், சட்னியும் சாப்பிட்டார்' என, நேரில் பார்த்தது போல், அப்பல்லோ வாசலில் பேட்டி அளித்தனர்.இந்நிலையில், 'ஜெ.,யை நாங்கள் பார்க்கவில்லை.நாங்கள் சொன்னது எல்லாம் பொய்' என, சில நாட்களுக்கு முன், அமைச்சர் சீனிவாசன் கூறி, திடீர் சர்ச்சையை கிளப்பினார்.

அதற்கு எதிராக, 'அனைத்து அமைச்சர்களும், ஜெ.,யை பார்த்தோம்' என, அமைச்சர்கள், ராஜு, நிலோபர் கபில் ஆகியோர் கூறினர். அமைச்சர்களின் மாறுபட்ட கருத்தால், ஜெயலலிதாவை பார்த்தனரா, இல்லையா என்ற கேள்வி எழுந்து உள்ளது.அதனால், சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அமைச்சரான, விஜயபாஸ்கர், இதற்கு விளக்கம் அளிப்பார் என, பத்திரிகையாளர்கள் எதிர்பார்த்தனர்.

ஏற்கனவே, இவர், ஜெ.,மறைந்த சில நாட்களில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை, அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து, செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.அதனால், தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தையும், அவரே தீர்த்து வைப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது.
அமைச்சர் மவுனம்

சென்னையில், அரசு நிகழ்ச்சிக்கு பின், விஜயபாஸ்கரை சந்தித்த செய்தியாளர்கள், 'மருத்துவமனையில், ஜெ.,யை, அமைச்சர்கள் சந்தித்தனரா, இல்லையா' என, கேட்டனர்.அதற்கு பதில் கூறாமல், பெரிய கும்பிடு போட்டு போய் விட்டார், அமைச்சர். சசிகலாவின் ஆதரவாளராக கருதப்பட்ட, விஜயபாஸ்கர், இதற்கு பதில் கூறாமல் மவுனம் காப்பது, இந்த விவகாரத்தில், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கம்



உத்தரபிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.

அக்டோபர் 02, 2017, 04:46 PM
லக்னோ

உலகின் ஏழு அதிசயங்களில் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்து உள்ள தாஜ்மகாலும் ஒன்றாகும்.ஆனால் அந்த் மாநிலத்தின் சுற்றுலா கையேட்டில் தாஜ்மகால் பெயர் இடம் பெற வில்லை.உத்திரப்பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக அச்சிடப்பட்டுள்ளஇந்த சுற்றுலா கையேட்டில் புகழ் பெற்ற கங்கா ஆரத்தி யை அட்டைபடமாக கொண்டு உள்ளது.ஆனால் மாநிலத்தின் மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளம் தாக்மகாலின் பெயர் காணப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள தாஜ்மகாலை காண 60 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலாவாக வருகின்றனர். இந்த மாநிலத்திற்கு இதன் மூலமே அதிகபடியான வருவாய் வருகிறது.

கடந்த ஜூன் மாதம் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதியானந்த் கூறும் போது நமது இந்தியா கலாச்சாரத்திற்குடபட்டது ராயாமணமும் கீதையும் தான் தாஜ்மகால் அல்ல என குறிப்டுபிட்டு இருந்தார்.

எனினும், யுனெஸ்கோவின் "உலக பழம்பெரும் தளமாக" தாஜ் மஹால் பெயரிடப்பட்டது, இது பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மையான இந்தியா கீழ் பட்டியலிடப்பட்ட 10 சின்னமான இடங்களில் ஒன்றாக உள்ளது குறிப்பிட தக்கது.
தேசிய செய்திகள்

சசிகலாவுக்கு இன்று ‘பரோல்’ கிடைக்க வாய்ப்பு


சசிகலாவுக்கு இன்று ‘பரோல்’ கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 03, 2017, 12:29 AM
பெங்களூரு,

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை பார்க்க 15 நாட்கள் பரோல் வழங்குமாறு கோரி சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளார்.

ஆயுதபூஜை உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இந்த வாரத்தின் முதல் வேலை நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

சசிகலாவின் மனு மீது சிறைத்துறை அதிகாரிகள் இன்று முடிவு எடுப்பார்கள் என்றும், அவருக்கு இன்றே பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாவட்ட செய்திகள்

தாம்பரத்தில் மத்திய அரசை கண்டித்து டாக்டர்கள் உண்ணாவிரதம்


தாம்பரத்தில் மத்திய அரசை கண்டித்து டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்டோபர் 03, 2017, 04:15 AM

தாம்பரம்,

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை அலுவலகத்தில் தேசிய அளவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஒரே பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை முதல் மாலை வரை நடந்த இந்த போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முத்துராஜன், தேசிய துணை தலைவர் பிரகாசம் உள்பட ஏராளமான பெண் டாக்டர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து நிருபர்களிடம் இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் ரவிசங்கர் கூறியதாவது:–

மருத்துவர் பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் இருந்தாலும் தேசிய அளவிலே மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் ஒரே பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்.

இதற்காக நாங்கள் ஒருவருடத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்திலும் நாங்கள் தமிழகம் சார்பாக 15 பேர் சென்று கலந்துகொண்டோம்.

ஆனால் இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் காந்தி ஜெயந்தியான இன்று சத்தியாகிரக வழியில் தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவர்களும் உண்ணாவிரதம் இருக்கிறோம்.

கருவில் உள்ளது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை அறிய முடியாதபடி ஒரு தடைச்சட்டம் உள்ளது. அந்த தடைச்சட்டம் மிகவும் கடுமையாக இருக்கிறது. எனவே இதனை மாற்றி அமைக்க வேண்டும்.

அதேபோல இன்று மருத்துவ மாணவர்கள் ஒரு கல்லூரியில் தேர்ச்சிபெற்ற பிறகும் அதையும் தாண்டி நெஸ்ட் தேர்வு, எக்ஸிட் தேர்வு என்பதை கொண்டுவந்துள்ளனர். எத்தனைமுறைதான் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டே இருப்பார்கள்.

உலக அளவிலே இந்திய மருத்துவர்கள் தான் தலைசிறந்த மருத்துவர்கள் என்று சொல்லும்போது இதுபோன்ற ஒரு சட்டத்தை கொண்டுவந்து ஏன் மாணவர்களை நசுக்க வேண்டும். எனவே இந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
தலையங்கம்
சிகிச்சையை விட தடுப்பதே மேல்!

அக்டோபர் 03 2017, 05:00 AM



தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லை. அதுவும் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு தமிழக அரசியலில் அறிக்கைகள்,
மறுஅறிக்கைகள், வாதங்கள், எதிர்வாதங்கள் என்று தினமும் அனல்பறக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. ஆனால் மக்களுக்கு இப்போது இதற்கெல்லாம் மேல் ஒரு அச்சமான உணர்வு ஏற்பட்டுள்ளது. அது வேகமாக தமிழ்நாடு முழுவதும் பரவிவரும் டெங்கு காய்ச்சலால்தான். ஆஸ்பத்திரிகள் எல்லாம் டெங்கு நோயாளிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. பல ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் இல்லாமல், கீழே பாய்விரித்து படுக்கவைக்கும் நிலைமை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தினமும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் நடந்துகொண்டு இருப்பது மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. 

உடல்வலி, தலைவலி, கடுமையான காய்ச்சல் ஆகியவைகள் இந்த நோய்க்கான அறிகுறி என்றாலும், உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும்போது நிச்சயமாக அது டெங்கு காய்ச்சலின் அறிகுறிதான். நோய் தாக்கம் அதிகமாகி இருக்கிறது என்றால், தலைசுற்று, மயக்கம் ஏற்படும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் பிளேட் லெட் அதாவது தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறையும்.

வழக்கமாக ரத்தத்தில் 2½ லட்சம் எண்ணிக்கை என்றளவில் இருக்கவேண்டிய பிளேட் லெட்டின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் கீழே போனால் சீரியஸ் என்றுதான் டாக்டர்கள் கருதுகிறார்கள். ஆனால், ரத்தஅழுத்தம் வேகமாக குறைவதும், ஈறுகளில் இருந்து ரத்தம் வடிவதும், மூக்கில் ரத்தம் கசிவதும் வந்தால் கவலைக்கிடமான நிலைக்கு நோயாளிகள் போய்விடுவார்கள். டெங்கு பாதிப்புக்கு முக்கியமான காரணம் ஏடிஸ் இஜிப்டியை என்ற பெண் கொசுதான். மற்ற கொசுக்களைப்போல இவை இரவில் கடிப்பதில்லை.

பகலில்தான் கடிக்கிறது. இந்த கொசுக்கள் சுத்தமான தண்ணீரில்தான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். தேங்கி கிடக்கும் மழைநீர், மரப்பொந்துகளில் உள்ள மழைநீர், வீடுகளில் டயர்கள், பாத்திரங்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரால்தான் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. பூச்சியியல் வல்லுனர்கள் மற்றொரு காரணத்தை கூறுகிறார்கள். இந்தியன் டைப் கழிப்பிடங்களில் இந்த ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டு அவைகள் செப்டிக் டேங்க்குகளில் போய் ஏராளமாக உற்பத்தியாகி கழிப்பறைகளின் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களின் முனைகளில் உள்ள துவாரங்கள் வழியாக வெளியே போய்விடுகின்றன.

எனவே இவற்றை கொசுக்கள் வெளியே போகாதபடி, நுண்ணிய துவாரங்கள் கொண்ட வலையால் மூட வேண்டும் என்று கூறுகிறார்கள். ‘குணமாக்குவதைவிட, தடுப்பதே மேல்’ என்றவகையில், வீடுகளில் உள்ளவர்கள் கவனமாக இருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பொறுப்பை சரியாக செய்யாததால்தான் டெங்கு இந்தளவுக்கு வேகமாக பரவிவருகிறது.

இந்த மழைக்கே ஆங்காங்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இவைதான் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி தளமாக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் வார்டு கவுன்சிலர்கள், பஞ்சாயத்து போர்டு உறுப்பினர்கள் இல்லாததால் அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. சுகாதாரத்துறையால் நோய் வந்தபிறகு குணமாக்கும் பணியில்தான் ஈடுபடமுடியும்.

அதை வராமல் தடுக்கவேண்டும் என்றால் உள்ளாட்சி துறைகளின் வேகமான பணிகளில்தான் இருக்கின்றது. இந்த மழைக்கே இவ்வளவு டெங்கு காய்ச்சல் பரவி இருக்கிறது என்றால், இன்னும் வடகிழக்கு பருவமழை வரும்நேரத்தில் என்னவாகுமோ? என்ற அச்சம்தான் பொதுமக்களிடம் இருக்கிறது. பீதியடைய வேண்டாம் என்று வார்த்தைகளில் சொன்னால் பலனில்லை.

செயலில் காட்டவேண்டும். உடனடியாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் வீடுகளில் உள்ள மேல்தொட்டிகள், கீழ்தொட்டிகளில் ஏடிஸ் கொசு முட்டைகளில் இருந்து புழுக்கள் வராமல் தடுக்கும் டெமிபாஸ் மருந்து தெளிக்கும் பணிகள், ஆறுகள், குளங்களில் வெக்டோ பாக் மருந்து தெளிக்கும் பணிகள், எம்எல்ஓ மருந்து தெளிக்கும் பணிகள், புரோபெக்சர் ஸ்பிரே அடிக்கும் பணிகள், டீசலுடன் கலந்து பைரிதிரம் புகை மருந்து அடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு டெங்கு காய்ச்சலை அடியோடு தடுக்க வேண்டும்.

Monday, October 2, 2017

Call for parity between CA certificate and M.Com.

Call for parity between CA certificate and MCom
The Telegraph

Basant Kumar Mohanty

New Delhi, Sept. 24: The Institute of Chartered Accountants of India has demanded that the Chartered Accountancy certificate be treated as equivalent to an MCom degree to improve the best chartered accountants' chances of teaching or going into research.

The Union human resource development ministry has decided to set up a committee of academics to examine the demand, which for now appears to have divided educationists.

The Institute of Chartered Accountants of India (ICAI) does not meet the definition of a university, as contained in the University Grants Commission Act. It's a statutory body set up by Parliament to regulate the profession of chartered accountancy in India.

According to the act, degrees can be awarded only by universities, which are set up by Parliament or state legislatures, and deemed universities.

An ICAI official said that 106 universities did recognise the CA course as equivalent to an MCom programme and allowed CA certificate holders to pursue PhD courses.

The Association of Indian Universities, set up by the universities to decide on equivalence, such as between Indian degrees and foreign certificates, too considers the CA certificate as the equivalent of an MCom, the official said.

But the University Grants Commission, the higher education regulator, refuses to accept this, prompting the majority of universities too to take the same stand.

A commission official explained: "If a certificate granted by an institution other than a university is treated as equivalent to a degree, the sanctity of the university system will be at stake."

Some 15,000 students are awarded the CA certificate every year which allows them to practise as chartered accountants. But those who prefer teaching or research find their options restricted.

Ministry officials said that many certificate courses are indeed accepted as equivalent to master's programmes.

Under the ministry's instructions, the Association of Indian Universities has granted such equivalence to the diploma courses offered by the Indian Institutes of Management and some other institutions, such as the Film and Television Institute of India, Pune.

R.K. Chauhan, vice-chancellor of the Haryana-based Lingaya's University and former University Grants Commission secretary, opposed the ICIA proposal on the ground that "many little-known institutions may demand such equivalence in future".

But he agreed that the CA course was as rigorous as a degree programme and suggested the government "come up with a mechanism to enable the ICAI and other such deserving institutions to award degrees".

Educationist and legal luminary N.R. Madhava Menon supported the ICIA proposal. "Equivalence is not the same as recognition as a degree; it only means that a particular certificate is treated as equal to a degree for a specific purpose. There's nothing wrong in awarding equivalence in deserving cases," he said.

An ICAI official said the CA course had three stages: foundation level, intermediate level and final level. Students who have cleared Class XII can take up the four-paper foundation level, after completing which they are promoted to the seven-paper intermediate level.

Commerce graduates with 55 per cent marks and other graduates with 60 per cent marks can secure direct admission to the intermediate level. The final level has eight papers.

The ICAI has also demanded that Class XII graduates who secure admission to the foundation level should, after clearing the intermediate level, be treated as equivalent to BCom degree holders.

வாழ்த்து அட்டைகளும் குறுஞ்செய்திகளும்!

Published : 03 Nov 2013 13:12 IST

பிருந்தா சீனிவாசன்





பரபரப்புகள் ஏதுமற்ற நம் பால்யத்தில் பண்டிகைகள் தொடங்கிவிட்டாலே புத்தாடை, பலகாரங்களைப் போலவே வாழ்த்து அட்டைகளும் விற்றுத் தீர்க்கும். ஆடை வாங்கக்கூட அத்தனை யோசிக்க மாட்டார்கள். ஆனால் மனம் விரும்பிய வடிவத்தில் வாழ்த்து அட்டை கிடைக்கவில்லை என்றால் கொஞ்சம் சுணங்கித்தான் போவார்கள்.

தீபாவளியைப் போலவே பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளும் சக்கைப்போடு போடும். சுருள்முடி நெற்றியில் விழ, பெருமிதமாகச் சிரிக்கும் நடிகர் திலகம், கையில் சாட்டையுடன் பாட்டுப் பாடும் மக்கள் திலகம் தொடங்கி, ரஜினிகாந்த், கமலஹாசன் உருவப் படங்கள் அச்சிட்ட வாழ்த்து அட்டைகள் எல்லாம் கடைக்கு வந்த அன்றே காணாமல் போகும் மாயமும் நடந்திருக்கிறது.

இரு புறமும் செங்கரும்புகள் நிற்க, நடுவே பொங்கல் பானையுடன் மாடுகள் இருக்கும் வாழ்த்து அட்டையே பொங்கல் திருநாளின் மகத்துவத்தையும் மகிழ்ச்சியையும் சொல்லிவிடும். புத்தாண்டு வாழ்த்து அட்டைகளில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்களையும் குழந்தைகளையும் பார்க்கலாம்.

இப்படித் தேடித் தேடி அட்டைகள் வாங்கி, பின்பக்கம் தங்கள் கைப்பட நாலு வார்த்தை எழுதி, அடியில் வீட்டில் இருக்கிறவர்களின் பெயர்களை எல்லாம் வரிசையாகப் பட்டியலிட்டு, மறக்காமல் ஸ்டாம்ப் ஒட்டி, தபால்பெட்டியில் போட்டுவிட்டுத் திரும்பும்போது மனம் முழுக்கப் பரவுகிற மகிழ்ச்சி இருக்கிறதே அதை வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. அதுவும் இளவட்டங்கள் தங்கள் முறைப்பெண் இருக்கும் வீட்டுக்கு வாழ்த்துச் செய்தியோடு, காதல் செய்தியையும் இலைமறை காய்மறையாக அனுப்புகிற வைபவமும் அரங்கேறும். பண்டிகைக்கு ஒரு வாரம் இருக்கும்போதே தபால்காரரின் சைக்கிள் மணி நம் வீட்டு வாசலில் ஒலிக்கிறதா, யாராவது வாழ்த்து அட்டை அனுப்பியிருக்கிறார்களா என்று காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்தது. விஞ்ஞான வளர்ச்சி பெருகப் பெருக, வாழ்த்து அட்டைகள் அனுப்புவது குறைந்துவிட்டது.

'டேய் மாமா வீட்டுக்கும் பெரியம்மா வீட்டுக்கும் கார்டு போடணும்டா' என்று சொல்கிற பெரியவர்களும் அருகிவருகிறார்கள். வீட்டுக்கு வீடு தொலைபேசி வந்த பிறகு தொலைபேசியில் சம்பிரதாயத்துக்கு வாழ்த்து சொல்வதோடு நின்றுவிட்டோம். அதுவும் ஆளுக்கு இரண்டு செல்போன் என்ற நிலை வந்ததும், 'ஹாப்பி திவாலி'என்று குழுச் செய்தி அனுப்பிவிட்டு வேறு வேலை பார்க்கக் கிளம்பிவிடுகிறோம்.

பண்டிகை தினத்தில் குறுஞ்செய்திகள் அனுப்பினால் அதிகமாகப் பணம் செலவாகும் என்று நான்கு நாட்கள் முன்னதாகவே குறுஞ்செய்தி அனுப்புகிற கனவான்களும் சீமாட்டிகளும் இருக்கிறார்கள். அனுப்புகிறவருக்கும் மகிழ்ச்சி இல்லை, வாழ்த்துச் செய்தியைப் படிக்கிறவருக்கும் புன்னகை இல்லை. வாழ்வின் சின்னச் சின்ன சுவாரஸ்யங்களையும் ஆனந்தங்களையும்கூடத் தொலைத்துவிட்டோம் என்பதே புரியாமல், வாழ்த்துகளைச் சொல்லித் திரிகிறோம். இரண்டு இயந்திரங்களுக்கு இடையே பரிமாறப்படுகிற தகவல்கள்கூட மனித மனங்களுக்கு நடுவே நிகழ்வதில்லை.

தபால்காரரிடம் இருந்து வாழ்த்து அட்டையைப் பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு வந்து, யாரெல்லாம் அனுப்பியிருக்கிறார்கள், யார் பெயரையெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்று பரபரப்புடன் பார்க்கிற சுகத்தை இந்தத் தலைமுறை அனுபவித்திருக்கிறதா? பிறந்த வீட்டில் இருந்து வந்த அட்டையைப் படிக்க முடியாமல் மகிழ்ச்சியில் கண்கள் பளபளக்க எத்தனை பெண்கள் நின்றிருப்பார்கள்?

விடுமுறை விண்ணப்பம் தவிர வேறு எதற்கும் பேனா மூடியைத் திறக்காத இந்தத் தலைமுறை எதை மகிழ்ச்சி எனக் கொண்டாடுகிறது? அடித்துப் பிடித்து சொகுசுப் பேருந்தில் டிக்கெட் எடுத்துப் பெரிய பெரிய கடைகளில் வாங்கிய இனிப்புகளை அள்ளிக்கொண்டுச் செல்வதிலேயே பண்டிகை முழுமை பெற்றுவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறது.

உண்மையில் இதுவா கொண்டாட்டம்? இதுதானா மகிழ்ச்சி? ஒரு கிலோ இனிப்பைவிட ஒரு வரி வாழ்த்து உங்கள் மனதை அடுத்தவருக்குப் புரியவைத்துவிடாதா? உங்கள் கையெழுத்தின் நெளிவில் உங்கள் நேசம் புரிந்துகொள்ளப்படாதா? சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல, தமிழகத்தின் கிராமங்களிலும் இதே நிலைதான்.

"என் சின்ன வயசுல நிறையப் பேருக்கு வாழ்த்து அட்டை அனுப்பியிருக்கேன். சில சமயம் அட்டை வாங்கக் கையில காசு இருக்காது. நானே தபால் கார்டுல படம் வரைஞ்சு அனுப்பியிருக்கேன். இப்போ சிலர் போன்ல வாழ்த்துச் சொல்றாங்க. இன்னும் சிலர் ஒரு மெசேஜ் அனுப்பிடறாங்க. என்ன பண்றது? காலத்துக்கு ஏத்த மாதிரி எல்லாமே மாறிடுச்சு. அதுக்கேத்த மாதிரி சந்தோஷமும் குறைஞ்சுடுச்சு" என்று வருத்தத்துடன் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த அரங்கநாதன்.

திண்டுக்கல் சுப்பிரமணியத்தின் அனுபவமும் அதையேதான் ஆமோதிக்கிறது. "பண்டிகை வந்தா போதும் நான் என் தம்பிகளோட சேர்ந்து வாழ்த்து அட்டை வாங்கக் கிளம்பிடுவேன். யாருக்கெல்லாம் வாழ்த்து அனுப்பணும்னு அம்மா சொல்லுவாங்க. யாருக்கு அனுப்புறோமோ அதுக்கு ஏத்த மாதிரி வாழ்த்து எழுதுவோம். என் தம்பியோட கையெழுத்து அழகா இருக்கும். அதனால அவன்தான் நிறைய அட்டையில எழுதுவான். பொங்கல், தீபாவளி வந்தா சொந்தங்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்புவோம்னு சொன்னா என் மகன் ஆச்சரியமா பார்க்கிறான். அவங்களுக்கு போன்ல சொல்றது மட்டும்தான் வாழ்த்து. என்ன பண்றது? இந்தத் தலைமுறை மகிழ்ச்சிகளோட அறிமுகம் இல்லாமதான் வளருது" என்று நிதர்சனத்தைச் சொல்கிறார் சுப்பிரமணி.

இந்தத் தலைமுறைக்கு எதுவும் வாய்க்கவில்லை என்று சொல்வதைவிட அதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தித் தரலாமே. நேரமில்லை என்று சப்பைக்கட்டுவதை விட்டுவிட்டு நாமே நம் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் வாழ்த்து அட்டை அனுப்பினால், அந்த அன்பு நிச்சயம் எதிரொலிக்கத்தான் செய்யும். இதோ தீபாவளி வந்துவிட்டது. யாருக்கெல்லாம் வாழ்த்துச் சொன்னோம்? இன்னும் யாரையெல்லாம் தொடர்பு கொண்டு பேசப்போகிறோம்? நம் வாழ்த்துச் செய்தியை எதிர்பார்த்து எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்? நம் வாழ்த்து, எத்தனை மனங்களை மலரச் செய்யப்போகிறது, எத்தனை முகங்களைப் புன்னகையால் முகிழ்க்கப் போகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலில்தான் பண்டிகையின் கொண்டாட்டமும் உறவின் மகத்துவமும் அடங்கியிருக்கிறது.
சென்னை பல்கலையில் அறிமுகமாகிறது ஹிந்தி
நாடு முழுவதும், அனைவருக்கும் ஹிந்தி மொழி தெரியும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. மத்திய அரசின் அனைத்து அறிவிப்புகளும், அனைத்து மாநிலங்களிலும், ஆங்கிலத்துடன், கட்டாயமாக, ஹிந்தியிலும் இடம் பெற உத்தரவிடப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலைகளில், ஹிந்திக்கும் முக்கியத்துவம் தர, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள பல்கலைகளில், பட்டம் பெறும் பட்டதாரிகள், அனைத்து மாநிலங்களிலும், வேலை வாய்ப்புகளை பெறும் வகையில், அவர்களுக்கு ஹிந்தி கற்றுத்தர, உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, விருப்ப மொழி பாடமாக, முதுநிலை மாணவர்களுக்கு, ஹிந்தியை அறிமுகம் செய்கிறது. முதற்கட்டமாக, சென்னை பல்கலையில், ஹிந்தி திட்டம் அமலுக்கு வர உள்ளது. இரு வாரங்களுக்கு முன், சென்னை பல்கலையின் மேலாண்மை படிப்பு துறையின் வேலைவாய்ப்பு தகவல் கையேடு வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்ற பல்கலை துணைவேந்தர் துரைசாமி, ''ஆங்கில மொழியுடன், இன்னொரு சர்வதேச மொழி; தமிழ் அல்லது தற்போது மாணவர்கள் படிக்கும் மாநில மொழியுடன், மற்றொரு தேசிய மொழியும், அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும். இதை, விருப்ப மொழியாக மாணவர்கள் எடுக்கலாம்,'' என்றார்.

இது குறித்து, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'தேசிய மொழி என்றால் பெரும்பாலான மாணவர்கள், ஹிந்தி படிக்க ஆர்வமாக உள்ளனர். இது குறித்து, சென்னை பல்கலையின் சிண்டிகேட் மற்றும் அகாடமிக் கவுன்சிலில் ஒப்புதல் பெற்று, அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும்' என்றனர்.

Don’t retain students’ original documents: DC

K.G. Jagadeesha warns private institutions of filing criminal cases if they do not give them back

Deputy Commissioner K.G. Jagadeesha has warned of filing criminal cases against private educational institutions if they fail to return all original documents to students when they leave the institution concerned.
He said the institutions have no right to retain the original documents of students, including marks cards and other certificates.
However, many instances have come to light wherein institutions refused to return documents in the event a student discontinues a course midway. They demand payment of full fee to return such documents.
Mr. Jagadeesha was speaking at a review meeting chaired by Karnataka State Commission for Protection of Child Rights Chairperson Kripa Alva here recently.
The DC directed institutions to return original documents, if any they have retained, within one month to students.
After a month, officials concerned would visit every private institution and conduct an inspection. If they find any institution retaining original documents, criminal proceedings would be initiated, Mr. Jagadeesha said.
Meanwhile, Ms. Alva asked the district administration to ensure every private education institution and hostel in the district would have a student-friendly environment.
The administration should periodically conduct inspections about infrastructure in hostels, she said.
Ms. Alva said that if a student desires not to continue studies in a particular institution, such institution should pave the way for the student’s smooth exit. Instead of demanding the full fee for the course/ term/ year, the institution should refund fees already collected, she said.
City Police Commissioner T.R. Suresh and others were present.

Tiruchi - Bangkok flight service takes off

Thai AirAsia to operate four services a week in this sector

Tiruchi is now directly connected with Bangkok - one among the top tourist destinations in the world with foreign carrier Thai AirAsia launching service in the Tiruchi – Bangkok- Tiruchi sector.
Bangkok has become the sixth overseas destination to have direct links with Tiruchi after Colombo, Singapore, Kuala Lumpur, Dubai and Sharjah following the introduction of flight service to the Thai capital from September 29 onwards.
The operation of new service to the prominent South East Asian destination would further spur overseas passenger traffic movements from and to Tiruchi. A water salute was given when the first Thai AirAsia flight from Bangkok touched down at the Tiruchi international airport in the early hours on September 29.
The airline will operate four services in a week from Tiruchi to Bangkok – on Tuesday, Wednesday, Friday and Sunday with the flights departing in the early hours from here.
Airline sources said the new service to Bangkok would be operated using A-320 Neo type aircraft with passenger seating capacity exceeding a little over 180.
The first flight left for Bangkok in the early hours of Friday with more than 160 passengers, while on Sunday the number of travellers to the Thai capital from here was more than 140, said the sources.
The new service would also enable travellers to fly to other domestic destinations in Thailand such as Phuket, Krabi and Chiang Mai besides to other overseas destinations such as Ho Chi Minh and Macau.
Although the airline has not begun to lift cargo, it might start lifting freight in the coming months, said the sources. Air Asia is on top with respect to operating number of overseas flights from Tiruchi, followed by Air India Express, Malindo Air, Sri Lankan Airlines and Tiger Airways.
The Tiruchi international airport today has the highest number of daily flights to Kuala Lumpur among non-metro international airports in the Southern region, said the sources.

Reconsider compassionate appointments: HC to govt.

Says procedure against Constitution, violates reservation norms

Observing that compassionate appointments are against constitutional requirements and do not follow the rule of reservation, the Madras High Court has suggested that the government reconsider the concept and restrict such appointments only to genuine cases.
Dismissing a plea from a petitioner, who sought a direction to the authorities concerned to consider his representation for a job under compassionate grounds, Justice S.M. Subramaniam observed that the concept of compassionate appointment was an exception; it had to be strictly construed and confined only to the purpose.
‘Can’t claims as a right’
“The philosophy behind giving compassionate appointment is just to help the family in harness to get over the immediate crisis due to the loss of the sole breadwinner. This category of appointment cannot be claimed as a matter of right after lapse of the period, when the crisis is over,” he noted.
The petitioner L. Suresh, in his plea, sought for a direction to officials to appoint him as scavenger or give any suitable post on compassionate grounds, as his father died while in service.
However, petitioner’s plea was rejected on the ground that his mother (the deceased employee’s wife) was also employed in the same office.

NewsToday 18.10.2024