Tuesday, October 3, 2017

22 இந்தியரை விடுதலை செய்ய குவைத் அரசு உத்தரவு
பதிவு செய்த நாள்02அக்
2017
23:13

புதுடில்லி;குவைத் அரசின் தண்டனை குறைப்பு நடவடிக்கையால் பலனடைந்துள்ள, இந்தியர்கள், 22 பேரை, உடனடியாக விடுதலை செய்ய, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில், ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட இந்தியர்கள், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியர்கள், 15 பேரின் மரண தண்டனையை, சமீபத்தில், ஆயுள் தண்டனையாக குறைத்த, குவைத் அரசு, மேலும், 119 இந்திய கைதிகளின் தண்டனையை குறைத்துள்ளது.அவர்களில், 53 பேரின் ஆயுள் தண்டனை, 20 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.தண்டனை குறைப்பு நடவடிக்கையால் பலனடைந்துள்ள, இந்தியர்கள், 22 பேரை, உடனடியாக விடுதலை செய்ய, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. குவைத் அரசின் நடவடிக்கைக்கு, மத்திய அரசு நன்றி தெரிவித்து உள்ளது.
இது குறித்து, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:குவைத் சிறையிலிருந்து விடுவிக்கப்படும், இந்தியர்கள் நாடு திரும்ப, மத்திய அரசின் சார்பில் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். அதே போல், அந்நாட்டு சிறையில் வாடும் இந்தியர்கள், மீதமுள்ள தண்டனை காலத்தை, நம் நாட்டு சிறையில் கழிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கான சாத்தியக் கூறு குறித்து ஆராய்ந்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024