Tuesday, October 3, 2017

தேசிய செய்திகள்

சசிகலாவுக்கு இன்று ‘பரோல்’ கிடைக்க வாய்ப்பு


சசிகலாவுக்கு இன்று ‘பரோல்’ கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 03, 2017, 12:29 AM
பெங்களூரு,

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை பார்க்க 15 நாட்கள் பரோல் வழங்குமாறு கோரி சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளார்.

ஆயுதபூஜை உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இந்த வாரத்தின் முதல் வேலை நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

சசிகலாவின் மனு மீது சிறைத்துறை அதிகாரிகள் இன்று முடிவு எடுப்பார்கள் என்றும், அவருக்கு இன்றே பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024