Tuesday, October 3, 2017

உலக முதியோர் தினம் கடலூரில் ஊர்வலம்
பதிவு செய்த நாள்03அக்
2017
00:38

கடலுார் : உலக முதியோர் தினத்தையொட்டி கடலுாரில் ஊர்வலம் நடந்தது.முதியோர்களை வன்கொடுமை செய்வதை தடுக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கடலுார் பெரியார் சிலை அருகில் இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். காங்., மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகர் துவக்கி வைத்தார். ஊர்வலம் பாரதி சாலை வழியாக டவுன் ஹாலை அடைந்தது.ஊர்வலத்தில் தர்மலிங்கம், ஜெகநாதன், கணேசன், விஜியலட்சுமி, தயா பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024