Tuesday, October 3, 2017

தஞ்சை அருகே, 'ஆளில்லா கடை' காந்தி ஜெயந்தியில் மட்டும் திறப்பு
பதிவு செய்த நாள்03அக்
2017
00:09

தஞ்சாவூர்:'அனைவரும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தும் விதமாக, தஞ்சை அருகே, காந்தி ஜெயந்தியான நேற்று மட்டும், 'ஆளில்லா கடை' திறக்கப்பட்டது.காந்தி ஜெயந்தியான நேற்று, தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில், திறக்கப்பட்ட ஆளில்லா கடையில், வீட்டு உபயோகப் பொருட்கள், எழுது பொருட்கள், தின்பண்டங்கள் ஆகியவை, விலை அச்சிடப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.கடையில் பொருட்கள் வாங்குவோர், பொருளை எடுத்து, அதற்குரிய தொகையை, அங்குள்ள டப்பாவில் போட்டு சென்றனர். சிலர் பணத்தை போட்டு, மீதி சில்லரையை எடுத்துக் கொண்டனர்.

அப்பகுதியைச் சேர்ந்த, ரோட்டரி சங்க தலைவர், பக்ருதீன் அலி அகமது கூறியதாவது:'நேர்மை, உண்மை, நம்பிக்கை நிறைந்த இந்தியா உருவாக வேண்டும்' என, காந்தி கனவு கண்டார். அவர் கண்ட கனவை நனவாக்க, காந்தி ஜெயந்தியன்று மட்டும், இந்த ஆளில்லா கடை திறக்கப்படுகிறது. 16 ஆண்டுகளாக, லாப நோக்கம் இல்லாமல், நேர்மையை மட்டுமே நோக்கமாக கொண்டு, இந்த கடை திறக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024