Tuesday, October 3, 2017

கிண்டி ரயில் நிலையத்தில் திருநங்கையரால் தொல்லை

பதிவு செய்த நாள்03அக்
2017
00:06

'கிண்டி ரயில் நிலையத்தில், திருநங்கையர் பிரச்னையால், பயணியர் அவஸ்தைப்படுவதை தடுக்க, இரவு நேரத்தில், கடைசி ரயில் செல்லும் வரை, பாதுகாப்பு வேண்டும்' என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே, கிண்டி புறநகர் மின்சார ரயில் நிலையத்தில் இருந்து, தினசரி லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். நிலைய பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், கிழக்கு மற்றும் மேற்கு பக்கம் இரு வழிகளை தவிர, மற்ற வழிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில், ஆண் பயணியர் இரவு நேரத்தில், பிளாட்பாரத்தின் தெற்கு பக்கம் வழியாக, தண்டவாளத்தில் நடந்து, பாதுகாப்பு சுற்றுச்சுவரில் ஏறி குதித்து செல்வது தொடர்கிறது. இவர்களாலும், திருநங்கையராலும், இரவு நேரத்தில், பெண் பயணியர் அவஸ்தைப்படும் நிலை உள்ளது.இது குறித்து, பெண் பயணியர் கூறியதாவது:

ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறிச்செல்வதற்காக, பிளாட்பாரத்தின் தெற்கு பக்கம் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. இரவு நேரத்தில், இப்பகுதியின் இருட்டான இடங்களில், ஆண் பயணியர் - திருநங்கையர் அட்டகாசத்தால், பெண்கள் அச்சப்படும் நிலை உள்ளது.தெற்கு பக்கம் தண்டவாளம் வழியாக வீடுகளுக்கு செல்வது போல, பாவனை காட்டும் ஆண்களாலும், அவர்களின் நண்பர்களை போல நடந்து கொள்ளும் திருநங்கையராலும், அவ்வப்போது பிரச்னை ஏற்படுகிறது.இரவு நேரத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர், நிலையத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வருகின்றனர். தொடர்ந்து நிலையத்தில் இருப்பதில்லை; ரயில்களில் ஏறிச்சென்று விடுகின்றனர்.இந்நிலையால், கிண்டி ரயில் நிலையத்தில், இரவு, 9:00 மணிக்கு மேல், திருநங்கையர் இருட்டில் நடமாடுவதும், அவர்களிடம் ஆண்கள், 'குடி'மகன்களின் அத்து மீறல்களும் தொடர்கிறது.கிண்டி ரயில் நிலையத்தில், இரவு, 9:00 மணியில் இருந்து, கடைசி மின்சார ரயில் செல்லும், அதிகாலை, 12:20 மணி வரையும், நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர் தொடந்து பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024