Tuesday, October 3, 2017

80 சதவீத, 'ஏசி' பேருந்துகள் ஏலம்
பதிவு செய்த நாள்03அக்
2017
00:02

சென்னை : சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட்ட, 80 சதவீத, 'ஏசி' பேருந்துகள் ஏலம் விடப்பட்டுள்ளன.சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 2010ம் ஆண்டு, அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் நேரு, 100 வால்வோ, 'ஏசி' பேருந்துகளை அறிமுகப்படுத்தினார்.அவற்றில் சரி பாதியாக பிரித்து, அண்ணாநகர், அடையாறு பணிமனைகளுக்கு வழங்கினார்.அப்போது, அந்த பேருந்துகளின் பராமரிப்பை, அந்த நிறுவனத்தால் மட்டுமே மேற்கொள்வது என, ஒப்பந்தம் செய்யப்பட்டது.அந்த நிறுவனத்திடம் இருந்து பெறப்படும்உதிரிபாகங்களின் விலை, பராமரிப்பு செலவு,நம் நாட்டு பேருந்துநிறுவன செலவுகளை விட அதிகம்.அதனால், மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், அந்த பேருந்துகளை பராமரிக்க, உள்ளூர் தயாரிப்பு உதிரி பாகங்களை உபயோகித்தனர்.இதனால், புதிதாக பொருத்தப்பட்ட உதிரி பாகத்துடன் தொடர்புடைய அனைத்து பாகங்களும், விரைவில் பழுதடைந்தன.இதனால், பேருந்துகளின் இயக்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. கோடையில் கூட, 'ஏசி' பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.தற்போது, அடையாறு பணிமனையில், 35 பேருந்துகளும், அண்ணாநகர் பணிமனையில், 45 பேருந்துகளும் இயக்க முடியாதவை என ஒதுக்கப்பட்டு, அவை ஏலம் விடப்பட்டு உள்ளன.




No comments:

Post a Comment

NewsToday 18.10.2024