Sunday, April 2, 2017

 கடும் வெயில் 2 பேர் பலி

திருச்சி, திருச்சியில் கடும் வெயில் காரணமாக, சாலையில் சென்ற இருவர் மயங்கி விழுந்து இறந்தனர்.

திருச்சியில் மார்ச் மாதம் துவக்கத்தில், சில நாட்கள் திடீர் மழை பெய்தது. இருப்பினும், வெயில் கடுமையாக இருந்தது. கடந்த ஒரு வாரமாக, பகல், 12:00 மணி முதல், 4:00 மணி வரை, வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் கடுமையாக உள்ளது.

கோவையைச் சேர்ந்த பாபு, 45 என்பவர், திருச்சியில், குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்து வந்தார். நேற்று, காந்தி மார்க்கெட் பகுதியில் சென்றபோது, அவர் மயங்கி விழுந்து இறந்தார்.
அதே போல், திருச்சி அரியமங்கலம் பகுதியில் நடந்து சென்ற, 38 வயதுடையவர் மயங்கி விழுந்து இறந்தார்.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...