Monday, April 3, 2017

 23 'டாஸ்மாக்' மூடல் : சுத்தமானது கும்பகோணம்

தஞ்சாவூர்: '-கோவில் நகரம்' என அழைக்கப்படும் கும்பகோணத்தில் இருந்த, 23 டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலையோரம் உள்ள, 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டன. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில், 124 கடைகள் மூடப்பட்டு விட்டன.கோவில்கள் நிறைந்த கும்பகோணத்திற்கு, தமிழகம் மட்டும் இல்லாமல், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகள் இருந்ததால், 'குடி'மகன்களின் தொந்தரவால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.தற்போது, கும்பகோணம் நகரில் இயங்கி வந்த, 23 மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனால், கும்பகோணம், மதுக்கடைகளே இல்லாத நகரம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

No promotion, no pay rise: TN’s super specialty seats go begging

No promotion, no pay rise: TN’s super specialty seats go begging  Chennai: Govt doctors in Tamil Nadu are shunning super specialty training ...