Tuesday, April 4, 2017

முதலில் அமெரிக்கா... இப்போது சிங்கப்பூர் - கலக்கத்தில் இந்திய ஐ.டி. ஊழியர்கள்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதுமே, மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குப் பணிபுரிய செல்லும் ஐ.டி.ஊழியர்களுக்கு ஹெச்1-பி விசா கட்டுப்பாடுமூலம் சிக்கலை உருவாக்கினார். இதனால், இந்திய ஐ.டி. நிறுவன ஊழியர்கள் நிறையப் பேர் சிக்கலைச் சந்தித்தனர். ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் நிலை.

அதேபோல சிங்கப்பூரும் புதிய சிக்கலை உருவாக்கிவருகிறது. இந்தியாவில் இருந்து பயிற்சிக்காக சிங்கப்பூருக்குச் செல்லும் இந்திய ஐ.டி.ஊழியர்களுக்கு, விசா வழங்க மறுத்துவருகிறது. மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பான நாஸ்காம் மற்றும் சில தொழில் நிறுவனங்கள், சிங்கப்பூரில் பயிற்சி அளிப்பதற்காகத் தேர்வுசெய்து வைத்திருந்த ஊழியர்களுக்கு விசா வழங்க, சிங்கப்பூர் அரசாங்கம் மறுத்துவிட்டது.

மேலும், சிங்கப்பூரில் இருக்கும் எச்.சி.எல்., டி.சி.எஸ். இன்ஃபோசிஸ், விப்ரோ, காக்னிஸன்ட், எல் அண்ட் டி இன்ஃபோடெக் போன்ற இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு, 'எங்கள் நாட்டின் திறமையான ஊழியர்களை உங்கள் அலுவலகங்களில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்' என்றும் அறிக்கை அனுப்பி இருக்கிறது.

இதன்மூலம், இந்தியாவின் திறமையான ஊழியர்கள் தங்கள் நாட்டுக்குள் வருவதை மறைமுகமாகத் தடுக்க ஆரம்பித்துள்ளது சிங்கப்பூர்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...