Friday, April 21, 2017

சவூதி அரேபியாவில் புதிய சட்டம் - வெளிநாட்டவர்களுக்கு சிக்கல்
கார்த்திக்.சி

சவூதி அரேபியாவில் உள்ள ஷாப்பிங் மால்களில் அந்நாட்டவர்களை மட்டும் வேலைக்கு நியமிக்க வேண்டும் என்று சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை சவூதி அரேபிய தொழிலாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ளது.




சவூதி அரேபியாவில் 2030-ம் ஆண்டுக்கான பொருளாதார சீர்திருத்த திட்டம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, சவூதி அரேபியாவில் சிறு, குறு தொழில் நடைபெறும் இடங்களில் 15 லட்சம் பேர் வரை வேலை பார்த்து வருகின்றனர். அதில் 3 லட்சம் பேர் மட்டுமே சவூதி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சவூதி நாட்டில் சிறு தொழில்கள் நடைபெறும் துறைகளில் 5-ல் ஒருவர் மட்டுமே சவூதி நாட்டைச் சேர்ந்தவர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதில் 2020-ம் ஆண்டுக்குள் இந்தத் துறைகளில் சவூதி நாட்டைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் அந்நாட்டு அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சவூதி அரசின் இந்த நடவடிக்கையால் ஏராளமான இந்தியர்கள் வேலை வாய்ப்புகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict  TOI Education | Jul 29, 2026, 10.12 AM IST...