Tuesday, November 6, 2018

அரசு பஸ்களில் 6.50 லட்சம் பேர் பயணம்

Added : நவ 05, 2018 23:36


சென்னை,தீபாவளி பண்டிகையை கொண்டாட, சென்னையில் இருந்து, 6.50 லட்சம் பேர், அரசு பஸ்களில் வெளியூர் சென்றுள்ளனர்.சென்னையில் இருந்து, பிற மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும், 2ம் தேதி முதல், நேற்று வரை, அரசு சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.நவ., 2ம் தேதி இயக்கப்பட்ட, 2,968 பஸ்களில், 1.62 லட்சம் பேர்; 3ல், இயக்கப்பட்ட, 3,821 பஸ்களில், 2.24 லட்சம் பேர்; 4ம் தேதி இயக்கப்பட்ட, 3,665 பஸ்களில், 1.96 லட்சம் பேர்; நேற்று, மதியம் வரை இயக்கப்பட்ட, 980 பஸ்களில், 66 ஆயிரம் பேர் என, மொத்தம், 6.47 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

மற்ற ஊர்களில் இருந்து, இரண்டு லட்சம் பேர், அரசு பஸ்களில் பயணித்துள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து பஸ்கள் மற்றும் பஸ் நிலையங்களில், வழக்கமான கூட்டத்தை விட, நேற்று குறைவாகவே இருந்தது.

மழை எங்கே?ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று நள்ளிரவுக்கு பின், படிப்படியாக மழை துவங்கி, பரவலாக விட்டு விட்டு பெய்யும்.சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும். காற்று வீசும் திசையை பொறுத்து, இந்த மாவட்டங்களில், கன மழைக்கான சாதகமான சூழல் ஏற்படும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods