Tuesday, November 6, 2018

சிங்கப்பூரில் தீபாவளியின் வரலாறு!


இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் குடியேறியவர்கள் தங்கள் கலாச்சாரத்தையும் இங்கு கொண்டு வந்தனர்.
அதில் ஒன்று தீபாவளி கொண்டாட்டம்.

1929ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தீபாவளி அதிகாரபூர்வப் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிராங்கூன், சிலிகி, ரோச்சர் வட்டாரங்களில் தீபாவளி கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கின.
1985 ஆம் ஆண்டு லிட்டில் இந்தியா - சிராங்கூன் வட்டாரத்தில் ஒளியூட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற ஆரம்பித்தன. அதைக் காண்பதற்காகவே சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வருவதுண்டு.


2002ஆம் ஆண்டிலிருந்து தீபாவளியை முன்னிட்டு எஸ்பிளனேட் - கடலோரக் கலையரங்குகளில் கலா உற்சவம் எனும் இந்தியக் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்று வருகிறது. ஆடல், பாடல், கதை சொல்லும் நிகழ்ச்சி என பல்வேறு அங்கங்கள் அதில் இடம்பெறும். அந்நிகழ்ச்சிகளைக் காண ஆண்டுதோறும் சுமார் 40,000 பார்வையாளர்கள் கூடுவர்.

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods