Thursday, June 21, 2018

வங்கிகள், தபால் அலுவலகங்களில் 18 ஆயிரம், 'ஆதார்' மையங்கள் திறப்பு

Added : ஜூன் 21, 2018 01:15


புதுடில்லி: வங்கிகள், தபால் அலுவலகங்களில் மட்டும், ௧௮ ஆயிரம், 'ஆதார்' அட்டை வழங்கும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என, யு.ஐ.டி.ஏ.ஐ.,தெரிவித்துள்ளது.மக்களுக்கு ஆதார் எண் வழங்கும் பணியை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம் வழங்கி வருகிறது. இந்நிலையில், யு.ஐ.டி.ஏ.ஐ.,யின் தலைமை செயல் அதிகாரி, பூஷண் பாண்டே கூறியதாவது:ஆதார் அட்டை வழங்கும் வசதியை துவக்கும்படி, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடம், யு.ஐ.டி.ஏ.ஐ., கடந்த ஆண்டு வலியுறுத்தியது. குறைந்தது, ௧௦ கிளைகளுக்கு, ஒரு கிளையிலாவது, ஆதார் மையம் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தபால் அலுவலகங்களிலும், ஆதார் மையங்கள் திறக்கப்பட்டன.தற்போது, வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் மட்டும், ௧௮ ஆயிரம், ஆதார் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.வங்கிகளில், ௧௦ ஆயிரம் மையங்களும், தபால் அலுவலகங்களில், ௮,000 மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. வங்கிகள், தபால் அலுவலகங்களில், மேலும், ௮,000 மையங்கள் திறக்கப்பட உள்ளன.வங்கிகளில் ஆதார் மையங்கள் திறக்கப்பட்டுள்ளதால், வங்கி கணக்கு துவக்குவது, சாதாரண மக்களுக்கு, மிகவும் எளிதாகியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...