Saturday, June 30, 2018

சிவகங்கையில் 1000 பொங்கல் வழிபாடு

Added : ஜூன் 29, 2018 22:00



சிவகங்கை, சிவகங்கை அருகே ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபடும் திருவிழா நடந்தது.சிவகங்கை அருகே இடையமேலுார் நாச்சத்தம்மாள் கோயில் ஆனி களரி திருவிழா மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. இடையமேலுார், ஏனாதி, பூவந்தி, சுண்ணாம்பூர், தத்தனேந்தல், மணல்மேடு, சோழவந்தான், ஊத்துக்குளி பகுதிகளில் வசிக்கும் பங்காளிகள் இத்திருவிழாவை கொண்டாடுகின்றனர். ஏற்கனவே பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்த கூடாது என்பதால் ஒருவாரமாக காடுகளில் விறகு சேகரித்தல், பனை மட்டை, மண் பானைகள், பொங்கலுக்கு தேவையான அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்தனர்.நேற்று காலை ஒரு பெரிய பானையை சுற்றி 5 சிறிய பானைகளை கட்டி வைத்தனர். மாலை 5:30 மணிக்கு கோயில் வீடு முன், பங்காளிக்கு ஒருவர் வீதம் 15 பேர் சாமியாடினர். மந்தை சாவடியில் இருந்து மண்பானைகளை பெண்கள் சுமந்து கோயிலுக்கு சென்றனர். பொங்கல் பொருட்களை பனைபெட்டியில் எடுத்து சென்றனர்.கோயிலுக்கு முன்பாக ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்தனர். தண்ணீர் எடுத்தல் போன்ற அனைத்து தேவைக்கும் மண் பானையையே பயன்படுத்தினர். தொடர்ந்து கோரைக்கிழங்கை தோண்டி அம்மனுக்கு படைத்தனர். இரவு முழுவதும் நேர்த்திகடன் செலுத்தி வழிபாடு செய்தனர். இன்று காலை ஆடுகளை பலியிட்டு, காளாஞ்சி வழங்குவர்.கிராமமக்கள் கூறுகையில், 'திருமண வரம், குழந்தை பாக்கியம் கேட்டு இத்திருவிழாவை கொண்டாடுகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடுவதால் வெளியூர்களில் இருக்கும் அனைவரும் வந்துவிடுவர்,' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2026

  UP student (19) ‘bitten by snake’ 6 times in 6 weeks; family baffled  20.09.2026 Muzaffarnagar: For a 19-year-old BSc student from Hathras...