Saturday, June 30, 2018

ஓய்வூதியர் மருத்துவக் காப்பீடு டெண்டர் இறுதி செய்ய தடை நீக்கம்

Added : ஜூன் 29, 2018 23:38

மதுரை, ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான டெண்டர் மீது இறுதி முடிவெடுக்கக்கூடாது என்ற உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மாற்றியமைத்தது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் சம்பளத்தில் பிரீமியத் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. சிகிச்சைக்குப் பின் மருத்துவச் செலவு தொகையை, திரும்ப வழங்கக்கோரி சிலர் அரசிடம் விண்ணப்பித்தனர்.நிராகரித்ததை எதிர்த்து பல்வேறு மனுக்கள் தாக்கலாகின.

ஜூன் 25 ல் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவு: ஓய்வூதியர்மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்த இன்சூரன்ஸ் கம்பெனியுடனான ஒப்பந்தம் ஜூன் 30 ல் காலாவதியாகிறது. தொடர்ந்து செயல்படுத்த டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என அரசுத் தரப்பு கூறியது. அதன்மீது எவ்விதஇறுதி முடிவும் மேற்கொள்ளக்கூடாது. இதை மேலும்சிறப்பாக செயல்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசு ஜூலை 3 ல் தெரிவிக்க வேண்டும் என்றார்.நேற்று தமிழக அரசு, டெண்டர் அடிப்படையில் எவ்வித முடிவும் மேற்கொள்ளக்கூடாது என்ற உத்தரவால் பாதிப்புஏற்படும். அதை மாற்றியமைக்க வேண்டும் என மனு செய்தது.நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். நிதித்துறை துணைச் செயலாளர் அரவிந்த் ஆஜரானார்.நீதிபதி: ஜூன் 25 ல் பிறப்பித்த உத்தரவு மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால், டெண்டர் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முடிவானது இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது. இத்திட்டத்தில் மேலும் கூடுதலாக தனியார் மருத்துவமனைகளை சேர்க்கலாமா, மேலும் சிலநோய்களுக்கு சிகிச்சை அளிக்கலாமா என்பது குறித்து அரசுத் தரப்பில் அரசாணை வெளியிட வேண்டும். ஜூலை 16 க்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

Long hours hurting resident docs’ mental health, NMC tells SC

Long hours hurting resident docs’ mental health, NMC tells SC TNN | Aug 2, 2026, 05.17 AM IST NEW DELHI: Long and crushing working hours hav...