Saturday, June 30, 2018

சவுதாலாவுக்கு, 'பரோல்' டில்லி ஐகோர்ட் உத்தரவு

Added : ஜூன் 29, 2018 20:21


புதுடில்லி,: ஹரியானா மாநிலத்தில், ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள, அஜய் சிங் சவுதாலா, தேர்வெழுதுவற்காக, அவருக்கு , 'பரோல்' வழங்கி, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 200-0ம் ஆண்டு நடந்த, ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும், அப்போதைய முதல்வருமான, ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சிங் சவுதலா உட்பட, 53 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், 2016ல், தந்தை, மகன் இருவருக்கும், 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது; இதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.அஜய் சிங் சவுதாலா, சிறையில் இருந்தபடியே, ஹிசார் பல்கலையின் தொலைதுார கல்வித் திட்டத்தில், முதுநிலை பட்டய படிப்பு படித்து வந்தார். ஹரியானா மாநிலம், சிர்சா மையத்தில் தேர்வு எழுத, பரோலில் செல்ல அனுமதி கேட்டு, அஜய் சிங் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.நேற்று, இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அஜய் சிங்குக்கு உடனடியாக பரோல் வழங்கியதுடன், தேர்வு முடிந்ததும், ஜூலை, 1ல் சரணடையும்படி, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...