Wednesday, June 20, 2018

சிங்கப்பூர் பறக்குது ஆண்டிபட்டி வெண்டை

Added : ஜூன் 20, 2018 05:46

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.அணைக்கரைப்பட்டியில் விளையும் வெண்டைக்காய்சிங்கப்பூர், ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.வைகை ஆற்றின் கரையோரம் உள்ள டி.அணைக்கரைப்பட்டி,டி.புதுார், வெள்ளையத்தேவன்பட்டி, மூணாண்டி பட்டியில் வீரிய ரக வெண்டை, மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுஉள்ளது. விளையும் இவற்றை தினமும் ஏஜன்சி மூலம் தோட்டங்களில் இருந்துசேகரித்து விவசாயிகள் ஏற்றுமதி வியாபாரிகளுடன் ஒப்பந்தம் செய்கின்றனர்.

டி.அணைக்கரைப்பட்டி விவசாயி சிங்கம் கூறியதாவது:ஆண்டிபட்டி பகுதியில் இருந்து தினமும் 200கிலோ வரை வெண்டை, மிளகாய் ஏற்றுமதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.அதிகாலையில் பறிக்கப்படும் காய்கள் விமானத்தில் மறுநாள் காலை சிங்கப்பூர் சென்றடையும்.பின்னர் அங்கிருந்து மற்ற வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு செல்கிறது. வெண்டைக்குகுறைந்த பட்சமாக கிலோ ரூ.15, மிளகாய்க்கு ரூ.45 நிர்ணயம் செய்துள்ளனர். பல நேரங்களில் கூடுதல் விலையும் கிடைக்கிறது.உள்ளூர் மார்க்கெட்டில் கமிஷன் கடை வியாபாரிகள் விலையை குறைத்து விவசாயிகளுக்குபாதிப்பு ஏற்படுத்துகின்றனர், என்றார்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...