Thursday, June 21, 2018

ஏ.டி.எம்.,மில் குளறுபடி: 5 மடங்கு பணம் வந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

Added : ஜூன் 21, 2018 05:20



நாசிக்: மஹாராஷ்டிர மாநிலம், நாசிக்கில், தனியார் வங்கி, ஏ.டி.எம்.,மில், பணம் எடுத்தவர்களுக்கு, ஐந்து மடங்கு பணம் வந்ததால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், சிட்கோ பகுதியில், ஆக்சிஸ் வங்கியின், ஏ.டி.எம்., மையம் உள்ளது. சமீபத்தில், இந்த ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்தவர்களுக்கு, தாங்கள் பதிவு செய்த தொகையை விட, ஐந்து மடங்கு அதிகமான பணம் வந்ததால், பலரும் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த ஏ.டி.எம்.,மில், 'டெபிட்' அட்டை மூலம், 1,000 ரூபாய் எடுத்தவருக்கு, 5,000 ரூபாயும்; 4,000 ரூபாய் எடுத்தவருக்கு, 20 ஆயிரம் ரூபாயும் வந்தன. ஆனால், அவர்கள் பதிவு செய்த தொகை மட்டுமே, அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து கழிந்தது.

இது குறித்து, வங்கி மற்றும் அப்பகுதி போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு வந்த போலீசார், வாடிக்கையாளர்களை பணம் எடுக்கவிடாமல் தடுத்தனர்.

இது குறித்து, வங்கி துணை மேலாளர் பிரவீன் பைஸ் கூறியதாவது: இதுவரை இரண்டு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.,மில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் பண அட்டை பதிவுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கார்டுதாரர்களிடம் இருந்து, அவர்கள் கூடுதலாக பெற்ற தொகை திரும்ப பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...