Thursday, June 21, 2018

இறந்து விட்டாரா? வீட்டுக்கு உடலை எடுத்துச் சென்று பார்த்தபோது அதிர்ந்த குடும்பத்தினர்: மகாராஷ்டிர அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் அதிர்ச்சி

Published : 21 Jun 2018 10:54 IST



படம்.| பிரதிநிதித்துவ நோக்கத்துக்கானது.

தாங்கள் மருத்துவமனையில் அனுமதித்தவர் உயிரோடு இருக்க அவர் இறந்து விட்டதாக வேறொருவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

மஹாராஷ்டிரா அரசு மருத்துவமனையினர் ஒப்படைத்த உடலை வீட்டுக்கு எடுத்து வந்து பார்த்தபோது அதிர்ந்தனர், அது வேறொருவரின் உடல்!!

அவினாஷ் தாதாசாகேப் பக்வாதே என்பவர் உடல்நலக்கோளாறினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இந்நிலையில் 50 வயதான இவருடைய குடும்பத்தினரை அழைத்து மருத்துவமனை நிர்வாகிகள் பக்வாதே இறந்து விட்டார் என்று உடலை ஒப்படடைத்தனர். அதுவும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட உடல் என்பதால் முகம் மூடப்பட்டிருந்தது குடும்பத்தினருக்கு அடையாளம் தெரியவில்லை, வீட்டுக்கு உடலை எடுத்து சென்று பார்த்தபோது தங்கள் உறவினர் அல்ல வேறொருவரின் உடலை ஒப்படைத்தனர் என்பதைக் கண்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

யார் இறந்ததாக உடல் ஒப்படைக்கப்பட்டதோ அந்த அவினாஷ் பக்வாதே மருத்துவமனையில் உயிருடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

எப்படி இந்தக் குழப்பம்? என்றே தெரியாத குழப்பத்துடன் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

அதைவிட அவலமானது, யாருடைய உடலை ஒப்படைத்தோம் என்ற அடையாளமும் ஒப்படைத்த மருத்துவமனை ஊழியரக்ளுக்குத் தெரியவில்லை.

சங்லி சிவில் மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது, இங்குதான் பக்வாதே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். லிவர் பிரச்சினையினால் பக்வாதே அவதிப்பட்டு வருகிறார், சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த செவ்வாயன்று பக்வாதே குடும்பத்தினருக்கு மருத்துவமனையிலிருந்து வந்த அழைப்பில் பக்வாதே இறந்து விட்டார் வந்து உடலைப் பெற்றுக்கொள்ளவும் என்று கூறப்பட்டது. இதனையடுத்து அலறியடித்துக் கொண்டு வந்த உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

“இதில் உறவினர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டது, இது பக்வாதேயின் உடல் இல்லை என்ற ஐயம் எழுந்தது. மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது உடனே உடலை எடுத்துக் கொண்டு கட்டிடத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளனர்”என்று மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சங்லியிலிருந்து 25 கிமீ தூரத்தில் தஸ்கவானில் உள்ள வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அவர் உடல் இல்லை இது என்ற சந்தேகம் எழ உடலில் சுற்றப்பட்ட துணியை அகற்றியுள்ளனர், அப்போது வேறொருவரின் உடலைக் கொடுத்தது கண்டு அதிர்ச்சியும் அடைந்தனர் குழப்பமும் அடைந்தனர், காரணம் பக்வாதே இறந்தது உண்மை ஆனால் உடல் மாறிவிட்டது என்றும், ஒருவேளை பக்வாதே உயிருடன் இருக்கிறார், வேறொருவர் உடலை கொடுத்துள்ளனர் என்ற நம்பிக்கைக் கீற்று மற்றொரு புறமுமாக குடும்பத்தினர் குழம்பியுள்ளனர்.

மருத்துவனைக்கு விரைந்து வந்து பார்த்தால் அவினாஷ் பக்வாதே உயிருடன் இருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தவர் உடல் யாருடையது, அவர் உடலை ஏன் இன்னும் யாரும் பெற்றுக்கொள்ளவில்லை, புரியாத புதிர்....

No comments:

Post a Comment

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...