Tuesday, November 6, 2018

மாவட்ட செய்திகள்

கோட்ட நத்தம் பஞ்சாயத்து ஊழியரின்: ஊதிய நிலுவைத்தொகை வழங்க ஐகோர்ட்டு உத்தரவு



விருதுநகர் யூனியன் கோட்டநத்தம் பஞ்சாயத்து ஊழியரின் பணியை வரன்முறை படுத்துவதுடன் ஊதிய நிலுவையை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 06, 2018 03:45 AM

விருதுநகர்,

விருதுநகர் யூனியன் கோட்டநத்தம் பஞ்சாயத்தில் கண்ணன் என்பவர் மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு அப்போது இருந்த பஞ்சாயத்து குழுவினரால் நியமனம் பெற்றுள்ளார். பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு பஞ்சாயத்து நிர்வாகம் இவருடைய மாத ஊதியத்தை ரூ.2 ஆயிரமாக நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்றிஉள்ளது. அதன் பின்னர் இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாத ஊதியம் மற்றும் இதர பலன்கள் வழங்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து கோட்டநத்தம் பஞ்சாயத்து மேல்நிலை குடிநீர் தொட்டி, மோட்டார் இயக்கும் பணி மேற்கொண்டு வரும் கண்ணன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் தனது பணியை வரன்முறை படுத்த வேண்டும் என்றும் தனக்கு சேரவேண்டிய ஊதிய நிலுவை தொகை மற்றும் இதர பணப்பலன்களை வழங்க வேண்டும் எனக் கோரி கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதி கலெக்டரிடம் மனு கொடுத்ததாகவும் ஆனால் அந்த மனுமீது நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் தனது பணியை வரன்முறை படுத்தவும் ஊதிய நிலுவை மற்றும் இதர பணப்பலன்களை வழங்க உத்தரவிட கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரரின் கோரிக்கையை முழுமையாக ஆய்வு செய்ய தேவையில்லாத நிலையில் மாவட்ட கலெக்டர் மனுதாரரின் மனுவை தொடர்புடைய அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி விசாரணை நடத்தி வேறு ஏதும் பிரச்சினை இல்லாத நிலையில் இந்த உத்தரவு கிடைத்த 2 மாதங்களில் அவரது பணியை வரன்முறை படுத்தவும் ஊதிய நிலுவை தொகை மற்றும் இதர பணப்பலன்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods