Wednesday, November 7, 2018

இருமடங்கு சம்பளம்: மகிழ்ச்சியில் துள்ளிய ஊழியர்களுக்கு நிகழ்ந்த ஏமாற்றம்
Published : 05 Nov 2018 18:25 IST

பிடிஐ





அமிர்தசரஸில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளமாக இரு மடங்கு ஊதியம் அளிக்கப்பட்டது. தீபாவளிப் பரிசு என்று எண்ணி மகிழ்ந்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

இயந்திரக் கோளாறால் தவறுதலாக இரு மடங்குப் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் அதை யாரும் எடுக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலை மாவட்ட கருவூல அதிகாரி ஏ.கே.மைனி உறுதி செய்தார். ''அமிர்தசரஸில் மட்டுமல்ல, பஞ்சாப்பின் பெரும்பாலான அனைத்து அலுவலகங்களிலும் இயந்திரக் கோளாறு காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விரைவில் ஒரு மாத ஊதியம் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும்.

அமிர்தசரஸில் மட்டும் ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை அதிகமாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது'' என்றார் மைனி.

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods