Sunday, February 10, 2019

'சர்வர்' பிரச்னையால் பத்திரப்பதிவு முடக்கம்

Added : பிப் 10, 2019 02:22

தமிழகத்தில் சர்வர் பிரச்னையால், ஆன்லைன் பத்திரப்பதிவு, வில்லங்க சான்றிதழ் பெறுவது, 15 நாட்களாக முடங்கியுள்ளது.
கால தாமதத்தை குறைக்கவும், வெளிப்படை தன்மைக்காகவும், ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வழியே, பத்திரப்பதிவு செய்வது, வில்லங்க சான்றிதழ் பெறுவது, ஆவணங்களின் நகல்களை வாங்குவது போன்ற சேவைகளை பெற முடியும்.
ஒரே நேரத்தில், பலரும், பல்வேறு தேவைகளுக்காக பத்திரப்பதிவு இணையதளத்தை பயன்படுத்துவதால், சர்வர் பிரச்னை ஏற்பட்டு, பத்திரப்பதிவு பணி பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.தற்போது, இரண்டு வாரமாக ஏற்பட்டுள்ள சர்வர், நெட் ஒர்க் பிரச்னையால், பத்திரப்பதிவு சேவை முடங்கியுள்ளது. பத்திரப் பதிவுக்கு விண்ணப்பித்த, 1,000க்கும் மேற்பட்டோர், 15 நாட்களாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024