Wednesday, June 20, 2018

காணாமல் போன பூனைக்கு போஸ்டர் ஒட்டிய பேராசிரியர்

Added : ஜூன் 20, 2018 02:16

கோல்கட்டா: மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ள கல்லுாரியில், ஆங்கில பேராசிரியராக இருப்பவர், கலோல் ராய். இவர், ஒரு பூனையை, செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். சமீபத்தில், அந்த பூனை காணாமல் போனது. பூனையை கண்டுபிடிக்க, கோல்கட்டா நகர் முழுவதும், 'போஸ்டர்' ஒட்டியதுடன், தான் வசிக்கும் பகுதியில், செய்தித் தாள்களுடன், துண்டு பிரசுரத்தையும் சேர்த்து வினியோகிக்க செய்தார். சமூக வலைத்தளத்திலும்,பூனையை கண்டுபிடிக்க உதவும்படி பதிவிட்டுள்ளார்.அதில், பூனை காணாமல் போனதால், தன் தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னால் வேலையில் கவனம்செலுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பூனையைக் கண்டுபிடித்துதருவோருக்கு பரிசு வழங்கப்படும் என்றும்
அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...