Wednesday, June 20, 2018


மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை ஓரிரு நாளில் அறிவிப்பு 

dinamalar 20.06.2018

மதுரை: மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைவது தொடர்பாக ஓரிரு நாளில் மத்திய அரசு அறிவிக்க உள்ளது.

தமிழகத்தில் 'எய்ம்ஸ்' எங்கு அமைய உள்ளது என்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.



தமிழகத்தில் 'எய்ம்ஸ்' எங்கு அமைய உள்ளது என்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 விசாரணை நடத்திய நீதிமன்றம், '2017 ஆகஸ்ட்டிற்குள் மத்திய ஆய்வுக் குழு அமைத்து அது எடுக்கும் முடிவை அறிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. முடிவை அறிவிக்காததால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு பிப்.,14ல் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் 'எய்ம்ஸ்' தேர்வுக் குழு அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 'எய்ம்ஸ்' அமையும் இடத்தை தேர்வு செய்து ஜூன் 14க்குள் அறிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 26 க்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில் 'எய்ம்ஸ்' தேர்வுக்குழு உயர்மட்டக் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில், 'மருத்துவமனை அமைய ஏற்ற இடம் மதுரைதான்' என முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இதுகுறித்து ஓரிரு நாளில் மத்திய அரசு அறிவிக்க உள்ளது.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...