Friday, June 8, 2018


சென்னை தாம்பரத்தில் புதிய முனையம் நாளை தொடக்கம்

By DIN | Published on : 07th June 2018 06:13 PM |


சென்னை தாம்பரத்தில் புதிய முனையம் நாளை தொடங்கப்படவுள்ளது. ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோகெயின் நாளை முனையத்தை தொடங்கி வைக்கிறார்.

தாம்பரத்தில் 3-வது ரயில் முனையம் ரூ.33 கோடியே 28 லட்சத்து 8 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்களின் இயக்கம் அதிகரித் துள்ளது. இதனால், எழும்பூரில் இருந்து கணிசமான ரயில்களின் சேவை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். குறிப்பாக, வடமாநி லங்களுக்கு மொத்தம் 12 ரயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப் படுகின்றன. இவற்றில் கச்சிக்குடா, காக்கிநாடா, கயா போன்ற விரைவு ரயில்களின் சேவை தாம் பரத்தில் இருந்து இயக்க வாய்ப் புள்ளது. பிறகு, தேவையை கருத்தில் கொண்டு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம்- நெல்லை அந்தியோதயா விரைவு ரயிலையும் ராஜன் தொடங்கி வைக்கிறார். சென்னை சென்ட்ரல், எழும்பூரை அடுத்து சென்னையில் அமையும் 3-வது முனையம் தாம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NMC plans ban on medical seat hike if buildings not yet complete

NMC plans ban on medical seat hike if buildings not yet complete Anuja.Jaiswal@timesofindia.com   14.07.2026 REGULATORY TIGHTENING New Delh...