Tuesday, November 6, 2018

'அரசு ஊழியர் இறந்தால் 1 ஆண்டில் கருணைப்பணி' உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Added : நவ 05, 2018 23:58

மதுரை'அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து, ஓராண்டிற்குள் வாரிசுக்கு கருணைப் பணி நியமனம் வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.இது தொடர்பான, ஒரு வழக்கில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:கருணைப் பணி நியமனம் தொடர்பாக, கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற, 2019 ஜன.,1 முதல் அமல்படுத்தும் வகையில், உடனடியாக தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து, ஓராண்டிற்குள், சட்டப் பூர்வ வாரிசுக்கு கருணைப் பணி நியமனம் வழங்க வேண்டும்.

நான்காம் நிலை ஊழியர்களைப் பொறுத்தவரை, கருணைப் பணியில் சில விதிகளைக்கூறி, புறக்கணிக்கக்கூடாது. விதிவிலக்கு அளிக்க வேண்டும். உதாரணமாக, துப்புரவுப் பணியாளர் நியமனத்திற்கு போதிய தகுதிகள் அவசியம் இல்லை. எழுதப், படிக்க மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்தால் போதும்.ஒரு ஊழியர் திடீரென இறக்கும்போது, அப்போது மனைவியின் வயிற்றிலுள்ள குழந்தைக்கு, 18 வயது பூர்த்தியாகும்வரை, கருணைப் பணிக்கு ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டியதில்லை.பணிக்கு விண்ணப்பித்தபின், மூன்று மாதங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரி முடிவெடுக்க வேண்டும். தவறினால், அவரை முக்கியத்துவம் இல்லாத பணிக்கு மாற்ற வேண்டும்.இறந்தவரின் மனைவியைத் தவிர, மகன் அல்லது மகளுக்கு பணி வழங்கினால், அவர்களின் சம்பளத்தில், 25 சதவீதத்தை பிடித்தம் செய்ய வேண்டும். ஏனெனில் வேலை கிடைத்ததும், தாயை கைவிடுகின்றனர். இதைத் தவிர்க்க, தாயை பாதுகாக்க,வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods