Tuesday, November 6, 2018

நெல்லை, கும்பகோணத்தில் மர்ம காய்ச்சலில் 3 பேர் மரணம்

Published : 06 Nov 2018 08:11 IST




டெங்கு காய்ச்சல் - கோப்புப்படம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேரும், கும்பகோணத்தில் ஒரு பெண்ணும் நேற்று உயிரிழந்தனர்.

திருநெல்வேலி சிந்துபூந்துறையைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி அமலி பிச்சுமணி(55). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.

திருநெல்வேலி அருகே உள்ள நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி(47) என்பவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “பன்றிக் காய்ச்சல் நோயைக் கண்டறியும் பரிசோதனை வசதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிலும் உள்ளன. இம்மாவட்டத்தில் வேறு இடங்களில் இந்த வசதி இல்லை. 2 பேர் உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்றனர்.கும்பகோணம்கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை சோழன் நகரைச் சேர்ந்தவர் திருமாவளவன். இவரது மனைவி சிவரஞ்சனி(36). இவர்களுக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.இதையடுத்து, கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சிவரஞ்சனி உயிரிழந்தார்.

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods