Tuesday, November 6, 2018


குழந்தைகள் பட்டாசு வெடித்தால் தந்தை மீது வழக்கு

By DIN | Published on : 06th November 2018 01:15 AM |

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, குழந்தைகள் பட்டாசு வெடித்தால் அவர்களின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளிப் பண்டிகைக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

இதை மீறி பட்டாசுகள் வெடிப்பதைத் தடுக்க காவல் துறை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடும். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி குழந்தைகள் பட்டாசுகளை வெடித்தால் அந்தக் குழந்தையின் தந்தை மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நீதிமன்ற உத்தரவைக் கடைப்பிடித்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

MUMBAI Bombay floods