Thursday, March 1, 2018

இன்று முதல் 'ஏர்செல்' சேவையில் பாதிப்பு

Added : மார் 01, 2018 00:25

சென்னை, ''இன்று முதல், 'ஏர்செல்' மொபைல் போன் சேவையில் பாதிப்பு இருக்கும்,'' என, அந்நிறுவனத்தின், தென் மாநில தலைவர், சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.

'ஏர்செல்' நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கியது. அதனால், அந்நிறுவனத்திற்கு, மொபைல் போன் கோபுரங்களை, வாடகைக்கு விட்ட நிறுவனத்திற்கு, சேர வேண்டிய பாக்கித் தொகையை தர முடியவில்லை. அதைத் தொடர்ந்து, கோபுர இணைப்புகளை, அந்நிறுவனம் துண்டித்தது. எனினும், ஓரளவிற்கு சேவை சீரடைய துவங்கியது. இந்நிலையில், சென்னையில் இயங்கி வந்த, குறைந்த எண்ணிக்கையிலான இணைப்புகளும், நேற்று செயலிழக்க துவங்கின. அது குறித்து, அந்நிறுவன தலைவர், சங்கரநாராயணனிடம் கேட்டபோது, ''இன்று முதல், ஏர்செல் சேவை பெரிதும் பாதிக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024