Monday, April 2, 2018

ரயில் சேவை எண் முடக்கம்

Added : ஏப் 02, 2018 01:00

ஐ.ஆர்.சி.டி.சி., வாடிக்கையாளர் சேவை எண் முடங்கியுள்ளதால், ரயில் பயணிகள் சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.இந்தியன் ரயில்வே மற்றும் உணவு சுற்றுலா கழகம் மூலம், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ரத்து செய்வதில் பயணியரிடையே குழப்பங்களும், சந்தேகங்களும் ஏற்படுகின்றன.இதற்கு தீர்வுகாண, 011 - 3934 0000, 011 - 2334 0000 ஆகிய எண்களில், பயணியர் தங்கள் புகார்களை தெரிவிப்பதுடன், சிறப்பு ரயில் விபரம், டிக்கெட் தொடர்பான சந்தேகங்கள், குழப்பங்களுக்கு, இதில் தீர்வுகாண முடியும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் வழங்கப்படும் இச்சேவை, நேற்று முன்தினம் முதல் முடங்கியுள்ளதால் பயணியர் பெரும் சிரமங்களுக்கு ஆளாகிவருகின்றனர்.

ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தொழில்நுட்ப கோளாறு காரணமாக. வாடிக்கையாளர் சேவை வசதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்படும். ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்திலும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees

Supreme Court dismisses plea raising concerns that EWS candidates can't afford private medical college fees The Court refused to interfe...