Monday, February 3, 2020

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட ஒரு தேதியை சொல்லுங்க " மைலாட் "

Updated : பிப் 02, 2020 17:59 | Added : பிப் 02, 2020 17:31

புதுடில்லி: மருத்துவ மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்த கொடிய குற்றவாளிகளை விரைந்து தூக்கிலிட ஒரு தேதியை முடிவு செய்யுங்க என சுப்ரீம் கோர்ட்டில் அரசு தரப்பில் சிறப்பு மனுவை சோலிட்டர் ஜெனரல் இன்று சிறப்பு விசாரைணயின் போது வாதிட்டார்.

2012 ம் ஆண்டு டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 4 பேரும் தாக்கல் செய்த சீராய்வு மனு, கருணை மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.

மேலும் சட்டத்தில் உள்ள குறைபாட்டையும், நுட்பத்தையும் பயன்படுத்தி வெவ்வேறு விதமாக மனுக்கள் போட்டு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை என்ற பெயரில் கால தாமதம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு தரப்பில் சோலிட்டர் ஜெனரல் சுப்ரீம்கோர்ட்டில் இன்று சிறப்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணையில்; குற்றவாளிகள் வேண்டுமென்றே தாமதம் செய்வதற்காக மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது இந்த நாடே கொண்டாடியது. ஏனெனில் அந்த அளவுக்கு கொடிய குற்றம் செய்துள்ளனர்.

சட்ட வாய்ப்புகள் வழங்கலாம் ஆனால் சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது. இவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க தாமதம் செய்கின்றனர். இது சரியானது அல்ல. எனவே விரைந்து 4 பேரையும் தூக்கிலிடும் இறுதி தேதியை விரைந்து முடிவு செய்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு அரசு வக்கீல் வாதிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...