Saturday, August 11, 2018

திருப்பதிக்கு தமிழகத்தில் 6 டன் பூமாலை

Added : ஆக 11, 2018 00:49

திருச்செங்கோடு:திருப்பதிக்கு, 6 டன் பூக்களை, மாலைகளாக தொடுத்து அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

ஆந்திரா மாநிலம், திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், வரும், 15ல் கும்பாபிஷேகம் நடக்கஉள்ளது.இதற்காக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயண நித்திய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில், 6 டன் பூக்களை, மாலைகளாக தொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இது குறித்து, டிரஸ்ட் நிர்வாகிகள் கூறியதாவது:ஆண்டுதோறும் பிரம்மோற்சவம், ஏகாதசி உள்ளிட்ட விழாக்களுக்கு திருச்செங்கோட்டில் இருந்து மலர்களை மாலைகளாக தொடுத்து அனுப்பி வருகிறோம்.கும்பாபிஷேகத்துக்கு, சம்பங்கி, முல்லை, ரோஜா, தாமரை உள்ளிட்ட, 6 டன் பூக்களை பயன்படுத்தியுள்ளோம். மேலும், பூஜைக்கு தேவையான பொருட்களும் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. 500க்கும் மேற்பட்ட பெண்கள், பூக்களை மாலைகளாக தொடுத்தனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...