Sunday, August 5, 2018


ரேஷன் கார்டுகளில் பிழைஅலைக்கழிக்கப்படும் மக்கள்

Added : ஆக 04, 2018 23:49

பிழை திருத்தங்களுடன் உள்ள, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகளுக்கு மாற்றாக, புதிய கார்டுகள் வழங்க கோரி, உணவு வழங்கல் துறை அலுவலகங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மத்திய அரசின், 'ஆதார்' விபரங்களுடன், தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதுவரை, 1.96 கோடி குடும்பங்களுக்கு, அந்த கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பல கார்டுகளில், உறுப்பினர் பெயரில் தவறு, தவறான முகவரி, குடும்ப தலைவர் பெயரில் தவறு என, ஏராளமான பிழைகள் உள்ளன.

அவற்றை சரி செய்து, அரசு, 'இ - சேவை' மையங்களில், மாற்று கார்டுகள் பெற்று கொள்ளும் வசதி இருந்தது.இ - சேவை மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு நிர்ணயித்த, 30 ரூபாய் கட்டணத்துடன், கூடுதல் பணம் வசூலித்தனர்.

எனவே, அங்கு மாற்று கார்டுகள் வழங்குவதை, அரசு சமீபத்தில் நிறுத்தியது. இதனால், உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில், மாற்று கார்டு கேட்டு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஸ்மார்ட் கார்டில் உள்ள பிழைகளை, பொது வினியோக திட்ட இணையதளத்தில் சரி செய்தால், புதிதாக மாறி விடும்; ஏற்கனவே உள்ள கார்டை பயன்படுத்தி, பொருட்கள் வாங்குவதில் பிரச்னை இல்லை என்றும், மக்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்காத பலர், இ - சேவை மையங்களில், 30 ரூபாய் வாங்கி கொண்டு, மாற்று கார்டை வழங்கியது போல, உணவு வழங்கல் அலுவலகங்களிலும் வழங்கும்படி கேட்கின்றனர். ஒரு அலுவலகத்திற்கு, ஒரு நாளைக்கு, 50 மனுதாரர்கள் வருகின்றனர் என்றால், 45 பேர், மாற்று கார்டுக்காக வருகின்றனர்; பிரச்னைகளும் செய்கின்றனர். எனவே, மாற்று கார்டு வழங்க, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...