Sunday, August 5, 2018

கொடுமுடியில் 'பித்ரு தர்ப்பணம்' ஆடி அமாவாசையன்று சிறப்பு ஏற்பாடு

Added : ஆக 05, 2018 01:43

சேலம்:கொடுமுடி ஏமகண்டனுார் காவிரியாற்றங்கரையில், விசேஷமான, ஆக., 11, ஆடி அமாவாசை தினத்தில், பித்ரு தர்ப்பணம் செய்ய, காலைக்கதிர், 'ஆன்மிகக்கதிர்' வார இதழ் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூரியன் செல்லும் திசையை அடிப்படையாக வைத்து, தட்சிணாயனம், உத்திராயனம் என, பிரித்துள்ளனர். இதில், ஆடி மாதத்தில் துவங்கும் தட்சிணாயனம் மிக உன்னத காலமாக கருதப்படுகிறது.

விரதங்கள்

ஆடி வெள்ளி, அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை, ஆடித்தபசு, வியாச பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம், கருட பஞ்சமி, ஆண்டாள் அவதார தினம், ஹயக்கிரீவர் ஜெயந்தி, கோவர்த்தன விரதம், குமார சஷ்டி, வாராஹி விரதம் என விரதங்களும், பண்டிகைகளும் நிறைந்த மாதம்.

தேவர்களுடைய இரவு நேரத்தின் தொடக்க மாதம் என, ஆடியை புராணங்கள் சிறப்பிக்கின்றன. இம்மாதத்தில், பித்ரு லோகத்தில் வசிக்கும் நம் முன்னோர், பூலோகத்துக்கு வருவதாக நம்பப்படுகிறது.ஆவலோடு தங்களது சந்ததிகளை காணவரும் பித்ருக்களை, வணங்கி வழிபட்டால், எல்லா தோஷங்களும் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.

குறிப்பாக நதி, குளம், கடல் போன்ற புண்ணிய நீர்நிலைகளில் நீராடி திதி கொடுப்பது நல்லது. அதிலும், ஆடி அமாவாசையில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிக விசேஷமானது.இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, 'காலைக்கதிர்' ஆன்மிகக் கதிர் வார இதழ் சார்பில், ஆடி அமாவாசை தினமான, ஆக., 11ல், கொடுமுடி ஏமகண்டனுார் காவிரியாற்றங்கரையில், 'சமஷ்டி தர்ப்பணம்' நடக்கிறது.

கட்டணம்

இதில், கணபதி பூஜை, அமாவாசை சங்கல்பம், வருண கலச பூஜை, நவகிரக பூஜை, பித்ரு பூஜை, பித்ரு பிண்ட பூஜை, தர்ப்பணம், தீபாராதனை, சூரிய நமஸ்காரம், பித்ரு பிரசாத ஆசீர்வாதம், பித்ருக்களுக்கான சமஷ்டி ஹோமம் ஆகியவை நடக்கிறது. பங்கேற்க கட்டணம் உண்டு.ஆடி அமாவாசை தினந்தன்று, ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஏமகண்டனுார் காவிரியாற்றங்கரையில், காலை, 6:30 முதல், 7:00 மணி; 7:15 முதல், 7:45; 8:00 முதல், 8:30; 8:45 முதல், 9:15; 9:30 முதல், 10:00 மணி வரை என, ஐந்து பிரிவுகளாக சமஷ்டி ஹோமம் நடக்கிறது.

இதில், பங்கேற்க விறுவிறுப்பாக முன்பதிவு நடந்து வருகிறது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை. 95976 66400 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, ஆகஸ்ட், 8 மாலை, 5:00 மணிக்குள் முன் பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...