Sunday, August 5, 2018

பைலட் அறைக்குள் நுழைய முயன்ற பயணி

Added : ஆக 05, 2018 03:00

புதுடில்லி:இத்தாலியில் இருந்து புறப்பட்ட விமானத்தில், ஒரு பயணி, பைலட் அறைக்குள் நுழைய முயன்றதால், 'ஏர் - இந்தியா' விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் இருந்து, ௨ல், டில்லிக்கு, ௨௫௦ பயணியருடன், 'ஏர் - இந்தியா' விமானம் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், குர்பீரீத் சிங் என்ற பயணி, பைலட் அறைக்குள் நுழைய முயன்றார்.இதனால், விமானத்துக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது; கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து, விமானம் மீண்டும் மிலன் நகரில் தரை இறக்கப்பட்டது.

மிலன் போலீசாரிடம், குர்பிரீத் சிங் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும், அவர் விமானத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டது. பின், மூன்று மணி நேரம் தாமதமாக, அந்த விமானம், டில்லிக்கு புறப்பட்டது.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...