Saturday, August 11, 2018

தமிழகத்தில் கனமழை நீடிக்கும்

Added : ஆக 11, 2018 04:09

சென்னை:'தென் மாநிலங்களில், வரும், 15ம் தேதி வரை கனமழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கேரளா மற்றும் கர்நாடகாவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பருவழை வரும் 15ம் தேதி வரை தென் மாநிலங்களில் நீடிக்கும், படிப்படியாக, வட மாநிலங்களுக்கும் பரவும் என வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின், மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றிய பகுதிகளில், இன்று கனமழை பெய்யும். சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மாலை அல்லது இரவு நேரங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கோட்டை, வால்பாறையில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.

செங்கல்பட்டு, சின்ன கல்லார், பெரியார், 3; ஜெயங்கொண்டம், மரக்காணம், சென்னை அண்ணா பல்கலை, தேவகோட்டை, குளச்சல், தென்காசி, செங்குன்றம், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...