Saturday, August 11, 2018

முன்னோர் ஆசி பெற இன்று தான் நல்லநாள்

Added : ஆக 11, 2018 05:18



ஆடிஅமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவது குறித்து காஞ்சிப்பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் மகத்துவம் புரியும்.

மனிதராகப் பிறந்த அனைவரும் தங்களுடைய முன்னோருக்கு நன்றி தெரிவிப்பது அவசியம். முன்னோர்களை திருவள்ளுவர், 'தென்புலத்தார்' எனக் குறிப்பிடுகிறார். இவர்களை வழிபடுவது நம் கடமை என்கிறது திருக்குறள். பிதுர்களான தாய், தந்தையர், மூதாதையர் ஆகியோருக்குரிய கடமையை நாம் செய்தாக வேண்டும். 'மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ' என்று வேத மாதாவும் பெற்றோரை வழிபட நமக்கு வழிகாட்டுகிறாள். அவ்வைப்பாட்டியும், 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று வேத சாரத்தை பிழிந்து கொடுத்திருக்கிறார்.

வாழும் காலத்தில் பெற்றோரை பணிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். அவர்கள் செய்த உதவிக்கு ஈடாக நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணரவும் வேண்டும். அவர்களின் காலம் முடிந்த பிறகு செய்யும் 'பித்ரு காரியம்' செய்வதில் தான் அனேகம் பேருக்கு சந்தேகம் எழுகிறது. இதில் இடம் பெறும் எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே தான் இருக்கின்றன.

முன்னோர்கள் மறுபிறவி எடுத்து விட்டதாக சொல்கிறார்கள். அப்படியிருக்க இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் தோன்றலாம். சாஸ்திரம் விதித்த சட்டப்படி கொடுக்கும் தர்ப்பணத்தை முன்னோரிடம் சேர்ப்பது பிதுர்தேவதைகளின் பொறுப்பு. சிராத்தம் என்பதற்கே 'சிரத்தையோடு செய்வது' என்பது பொருள். முன்னோர் மீது நன்றியுணர்வும், சாஸ்திரத்தின் மீது அக்கறையும் கொண்டு தர்ப்பணம் செய்தால் அவர்களின் நல்லாசியால் நம் வாழ்வு செழிக்கும்......

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...