Friday, April 20, 2018

டாக்டர்களுக்கு சலுகை மார்க் அரசாணை ரத்து மேல் முறையீடு செய்ய முடிவு

Added : ஏப் 20, 2018 00:21

முதுநிலை மருத்துவ படிப்பில், அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., என, முதுநிலை மருத்துவ படிப்பில், 1,641 இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 50 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள, 50 சதவீத இடங்கள், மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும்.இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., விதிப்படி, மலைப்பகுதி மற்றும் கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு, 'நீட்' தேர்வு மதிப்பெண்ணுடன், அவர்கள் பணியாற்றிய காலத்திற்கேற்ப, 10 முதல், 30 சதவீதம், சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான அரசாணையை, தமிழக அரசு, 2017ல், வெளியிட்டது.சலுகை மதிப்பெண் வரையறையில், விதிமீறல் நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், மாநில ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான கவுன்சிலிங், காலதாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:முதுநிலை மருத்துவ படிப்பில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, 821 இடங்களுக்கு, 9,848 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது, சலுகை மதிப்பெண் தொடர்பான அரசாணையை, உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், அரசு டாக்டர்கள் பாதிக்கப்படுவர். எனவே, தமிழக அரசு, விரைவில் மேல்முறையீடு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025