Sunday, April 15, 2018


ஏப். 16-இல் தாம்பரம் - கொச்சுவேலி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்


15.04.2018

சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தாம்பரம் - கொச்சுவேலி இடையே திங்கள்கிழமை (ஏப். 16) முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்தது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை தாம்பரத்தில் இருந்து திங்கள்கிழமை (ஏப்.16) மாலை 5.30-க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் அடுத்த நாள் (செவ்வாய்க்கிழமை) காலை 11.45-க்கு கொச்சுவேலி சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலில் 20 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இணைக்கப்படும். செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், சாத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS DIGEST

NEWS DIGEST  SC : Can bar overqualified person from job Sometimes overqualification becomes a disqualification. At a time when highly qualif...