Thursday, May 10, 2018

மகனுக்கு திருமணம் : லாலுவுக்கு 5 நாள் பரோல்

Added : மே 09, 2018 23:50

பாட்னா: மகன் திருமணத்தில் பங்கேற்க, பீஹார் மாநில முன்னாள் முதல்வர், லாலு பிரசாத் யாதவுக்கு, ஐந்து நாட்கள், 'பரோல்' வழங்கப்பட்டுள்ளது.பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான, லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த வாரம், எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட லாலுவுக்கு, தற்போது, ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.லாலுவின் மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான, தேஜ் பிரதாப் யாதவ், எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவருக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், எம்.எல்.ஏ., சந்திரிகா ராயின் மகள், ஐஸ்வர்யாவுக்கும், வரும், 12ல், பாட்னாவில் திருமணம் நடைபெறவுள்ளது.மகன் திருமணத்தில், லாலு பிரசாத் யாதவ் பங்கேற்க பரோல் கேட்டு, சிறைத் துறை, ஐ.ஜி.,யிடம், விண்ணப்பிக்கப்பட்டது.

அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த, சிறைத் துறை அதிகாரிகள், லாலுவுக்கு ஐந்து நாட்கள் பரோல் வழங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...