Saturday, May 12, 2018

பணி விடுவிப்பு ஊழியருக்கு இலவச பாஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : மே 12, 2018 06:24

மதுரை : நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தில் நாகேந்திர பிள்ளை என்பவர் பணிபுரிந்தார். மருத்துவக் காரணங்கள் அடிப்படையில் 2015 ல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஓய்வு பெற்றவர்கள்,விருப்ப ஓய்வு பெற்றவர்களைப்போல் தனக்கும், மனைவிக்கும் இலவச பஸ் பாஸிற்குரியஅடையாள அட்டைவழங்க வேண்டும் என போக்குவரத்துக் கழக நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார்.நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நாகேந்திர பிள்ளை மனு செய்தார்.
நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவு: மனுதாரர் 2016ல் அளித்த மனுவைதிருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் தகுதி அடிப்படையில் பரிசீலித்து, சட்டத்திற்குட்பட்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...